மனம் பார்க்க விரும்புவதையே கண் பார்க்கிறது. கொட்டை எழுத்தில் வருமான வரி Returns சமர்ப்பிக்கக் கடைசித் தேதி நீட்டிப்பு என்று இந்தச் செய்தித் துணுக்கில் படித்த போது, விபரங்களையும் கொஞ்சம் கவனமாகப் பார்த்திருக்கலாம். அப்படிப் பார்த்திருந்தால் அந்நீட்டிப்பு குஜராத், மஹாராஷ்டிர மாநிலங்களுக்கு மட்டுமே என்ற உண்மை தெரிந்திருக்கும். இப்போது கடைசித் தேதியைத் தவறவிட்டாயிற்று. எல்லாம் ஒரு மெத்தனம் தான் - என்ன ஆனாலும் ஒரு மாதத்திற்காவது இதை நீட்டிப்பார்கள் என்று. வருமான வரியைச் சரியாகக் கட்டியும், உரிய நேரத்திற்கு இதைச் சமர்ப்பிக்காததில் அபராதம் கட்ட வேண்டி வரும் என்று நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அபராதம் இருக்கட்டும். அப்புறம் பார்க்கலாம் என்று ஒரு வேலையை ஒரு காரணமும் இன்றித் தள்ளிப் போடுவதைத் தடுக்க என்ன செய்வது? Procrastination என்ற இதை வெற்றி கொள்வது எப்படி என்று ஒரு புத்தகம் கூட வாங்கி விட்டேன். வழக்கம் போல, இதைப் படிப்பதையும் ஒத்தி வைப்பு செய்தாயிற்று!
எந்த மாறுதலையும் வெளியிலிருந்து திணிக்க முடியாது. மாற்றத்தின் தேவை உள்ளிலிருந்து வர வேண்டும். புத்தகங்கள் படித்தும் யாதொரு பிரயோஜனமுமில்லை என்று தெரிகிறது. இன்று அபராதமாகப் பணம் செலவழிகிறது - இது ஒரு இழப்பாகத் தெரியவில்லை. பின்னொருநாள் வாய்ப்புக்களையும், மனிதர்களையும், நட்பையும், நல்ல உறவுகளையும் அபராதமாக இழக்க நேருமுன் மாற்றம் வருமாக!
அபராதம் இருக்கட்டும். அப்புறம் பார்க்கலாம் என்று ஒரு வேலையை ஒரு காரணமும் இன்றித் தள்ளிப் போடுவதைத் தடுக்க என்ன செய்வது? Procrastination என்ற இதை வெற்றி கொள்வது எப்படி என்று ஒரு புத்தகம் கூட வாங்கி விட்டேன். வழக்கம் போல, இதைப் படிப்பதையும் ஒத்தி வைப்பு செய்தாயிற்று!
எந்த மாறுதலையும் வெளியிலிருந்து திணிக்க முடியாது. மாற்றத்தின் தேவை உள்ளிலிருந்து வர வேண்டும். புத்தகங்கள் படித்தும் யாதொரு பிரயோஜனமுமில்லை என்று தெரிகிறது. இன்று அபராதமாகப் பணம் செலவழிகிறது - இது ஒரு இழப்பாகத் தெரியவில்லை. பின்னொருநாள் வாய்ப்புக்களையும், மனிதர்களையும், நட்பையும், நல்ல உறவுகளையும் அபராதமாக இழக்க நேருமுன் மாற்றம் வருமாக!
கருத்துகள்
சில நாகள் கழித்து நண்பர்கள் இருவரும் சந்தித்தப் போது பலன் ஏதாவது தெரிந்ததா என்று வியாபாரியிடம் அவர் நண்பர் கேட்டார்.
வியாபாரி கூறினார்: "என் காசாளர் 10 லட்ச ரூபாய் இரும்புப் பெட்டியிலிருந்து கிளப்பிக் கொண்டு கம்பி நீட்டினார், என் பெண் காரியதரிசி என்னைப் பற்றி வருமான வரி இலாகாவுக்கு மொட்டைப் பெட்டிஷன் போட்டார், என் மகன் லேடி டைப்பிஸ்டுடன் ஓடிப் போனான்."
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆனால் நீங்க ஆகஸ்ட் 31தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள e-filing மூலம் ரிடர்ன்ஸ் பதிவு செய்யலாமில்லையா???
//பின்னொருநாள் வாய்ப்புக்களையும், மனிதர்களையும், நட்பையும், நல்ல உறவுகளையும் அபராதமாக இழக்க நேருமுன் மாற்றம் வருமாக//
திருவாசகமய்யா...
சுதர்சன்: விசாரித்ததில், நாம் செலுத்தவேண்டிய வரி பாக்கி எதுவும் இல்லாத நிலைக்கு, அபராதம் தேவையில்லை என்று சொல்லி விட்டார்கள்.
மிக நல்ல வரிகள்!
ஜூலை 29 அன்றுதான் எனக்கு விஷயத்தின் தீவிரம் புரிந்தது. உடனே பேங்குக்கு ஓடி பெற வேண்டிய வருமான சான்றிதழ் எல்லாம் ஒரே விசிட்டில் பெற்றேன். மைலையில் உள்ள சீதாராமன் கடைக்கு சென்று நபி கைடையும், படிவம் 2-D யும் வாங்கினேன். அடுத்த இரண்டு நாட்கள் பேய் மாதிரி உழைத்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி ரிடர்ன் சமர்ப்பித்தேன். என் வீட்டம்மா ஸ்டைலாக தன் ரிடர்னில் கையெழுத்திட்டதுடன் சரி. இப்படித்தான் கடைசி நிமிஷத்தில் குதிப்பதா என்று செல்லமாக ஒரு தட்டு வேறு தட்டிவிட்டு சென்றார்.
அவருடையது nil ரிடர்ன். வருமானவரி அலுவலகத்தில் வாங்க மறுத்து விட்டனர். ஏனெனில் தேவையில்லையாம். இது முன்பே தெரிந்திருந்தால் சில மணி நேர வேலையாவது மிச்சமாயிருந்திருக்கும்.
பரவாயில்லை, all's well that ends well.
அன்புடன்,
டோண்டு ராகவன் .
Procrastination குறித்து, பதினெட்டாம் நூற்றாண்டு எழுத்தாளர் சாமுவேல் ஜான்ஸன் கூறியது இதோ:
ஓit is one of the general weaknesses, which, in spite of the instruction of moralists, and the remonstrances of reason, prevail to a greater or less degree in every mind.ஔ
அதனால், நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை ;-)
என்றென்றும் அன்புடன்,
பாலா
நன்றி.
டோண்டு, நான் பயன்படுத்துவது 2E, சரள். படிவம்-16 இருந்தால் குழந்தை கூட நிரப்பி விடும். நபியைத் துணைக்கு அழைக்கும் அளவு குழப்பங்கள் இல்லை.
பாலா, procrastination பற்றிய இம்மாதிரி கருத்துக்களை நம்பித்தான் இருக்கிறேன் :-)
நான் கூட அதைத்தான் பாவிக்கிறேன். இருப்பினும் அப்படிவத்தை நிரப்பத் தேவையான அடிப்படைத் தகவல்கள் ஒரு முழு ஆண்டு கணக்கையும் பார்த்தால்தான் கிடைக்கும். நாம் கணக்கு போடுவதற்காக உபயோகப்படுத்திய தாள்களை எல்லாம் சரியாக அடுக்கி வைத்து கொள்ள வேண்டும். அது எல்லாத்துக்கும்தான் இரண்டு நாட்கள். சரளை நிரப்ப 30 நிமிடங்கள். அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்