எவ்வளவு நல்ல உலகம் இது! இங்கே இறப்பது எவ்வளவு இனிமையானது! வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தோற்ற (ஒரு) கவிஞன் மரணத்தில் வென்றான். அவன் போகிறபோக்கில் சொல்லிப்போனது இது — என்று ஒரு மலையாள மேடைப் பேச்சில் கேட்டேன். பேச்சு, தோற்றவர்களைப் பற்றியதானது. அதாவது, வெற்றி/தோல்வி என்று நாம் வகுத்திருக்கும் விதத்திலே ‘தோற்றவர்கள்’. பேச்சாளர் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் விழாவில் இப்படிப் பேசினார். அவர் பேச்சின் சாராம்சம், வெளிச்சத்தின் மறுபுறமும் நாம் நோக்க வேண்டும் என்பதே. John Ruskin-ன் “Unto the last” என்ற நீண்ட கட்டுரையையே காந்தி சர்வோதயம் என்று மொழிபெயர்த்தார். “மண்ணில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் இந்த உலகிற்கு நல்க ஏதேனும் ஒரு நன்மை இருக்கிறது” என்பதும் உபபாடம். இன்று சர்வோதயம் பற்றித் தெரிந்துகொண்டேன்…
மரியான் மூர் (Marianne Moore) தமது poetry என்ற கவிதையை ஐம்பது ஆண்டுகளூடாக எழுபது முறை திருத்தினார் என்றறிகிறோம். எட்டாண்டுகளாக மனதில் இருக்கும் இது, (கவிதையென்றே வீரத்துடன் பறைசாற்றுகிறேன்) இந்த வடிவில், இப்போதைக்கு நிறைவாய் அமைந்திருக்கிறது. படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் உடையாத் தளைகள் ஆஸ்பத் திரியில் அம்மா கிடப்பு சுருண்டொரு சாணித் துணியது போலே ஒன்றாத் தளைகள் அறுவது மில்லை தேய்த்துக் குளித்தால் அழுக்கது போகும் ஒழுக்கம் விழுப்பம் கற்க கசடற மரபுக் கவிதை அரபுக் குதிரை ரோகம் பயங்கரம் தேகம் இதுசுமை