முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாககாந்தாரி!

என்னவொரு மயக்கும் பாடல்! முதலில் கேட்கும்போது, சிலர் ஒரு "எஃபெக்ட்டு"க்காகச் செய்வது போல, பாட்டை அனுபல்லவியிலிருந்து ஆரம்பிக்கிறார்களோ என்று தோன்றுகிறது. ஆனால், இது நிஜமாகவே பல்லவிதான்! அந்த 'கான்-தா-ரீ-ரா-கனுதே' என்ற வார்த்தைகளில் உள்ள நெடில் எழுத்துக்களின் அழுத்தம், ஒரு அழகான இடைவெளியைக் கொடுத்து, ஏற்கனவே மெதுவாக ஆரம்பிக்கும் அந்த நடையை இன்னும் நிதானமாக்குகிறது. முதல் சுற்றில் வரும் "ராகனுதே" என்ற இறுதி ஸ்வரம் எவ்வளவு மயக்கக்கூடியதாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, உங்களை அப்படியே திக்குமுக்காடச் செய்யும் ஒரு தருணம் இரண்டாவது சுற்றில் காத்திருக்கிறது. அதில் அந்த இறுதி 'தே' வை இழுத்து மத்யமத்தில் நிறுத்தும்போது மனது உருகி ஒன்றுமில்லாமல் ஆகிறது! இதன் பல்லவி (தொடக்கம்) நாம் கர்நாடக இசையில் அதிகம் கேட்காத ஒரு வடிவத்தை எடுக்கிறது என்பது மட்டுமல்ல. அதன் எல்லா வரிகளும் ஒரு மேல் ஸ்தாயி ரிஷபத்தில்தான் போய் முடிகின்றன. அனுபல்லவியும் கீழ் ஸ்தாயியில் ஆரம்பித்து (பாரம்பரியமாக இது மேலே ஆரம்பிக்கும்), ஒரு மத்திம காலப் பிரயோகத்தையும் உள்ளடக...

அன்பின் வழியது உயிர்நிலை

Photo by Magesh Babu (used with consent - https://flickr.com/mageshb) இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் சிலர் ஆய்வாளர்களாக மாறியது நாமறிந்ததே. தியடோர் பாஸ்கரன் இந்திய அஞ்சல் பணியில் இருந்தபோதே திரைப்படங்களில் ஆர்வம் கொண்டு, தமிழ்த் திரைப்பட வரலாற்றை ஆய்வு செய்து முக்கியமான நூல்களை எழுதியவர். அதேபோல மதுரையில் தமிழிலக்கியம் பயின்ற (சங்க இலக்கிய + தொல்பொருள் ஆய்வு — கலம் செய் கோவே — இவர் ஆராய்ச்சி மிகவும் ஆர்வமளிக்கக்கூடியது) பாலகிருஷ்ணன் மதுரையிலிருந்து டில்லி கிளம்பும்போது திருவாசகமோ எதுவோ ஒரு தமிழ்ப்புத்தகத்தை மட்டுமே தமிழ் நினைவாக எடுத்துச் சென்றதாகவும், பின்னாளில் சிந்து சமவெளி மற்றும் தமிழ்ச் சங்க இலக்கியம் குறித்த ஆய்வுக்கு அதுவே தமிழார்வத்தூண்டுதலாக அமைந்தது என்பதாகவும் சொல்லியிருந்தார். கொஞ்சம் சிரமப்பட்டு இ ஆ ப தேறியிருந்தால் நாமும் இந்தமாதிரி ஏதேனும் செய்திருக்கலாம் என்ற எண்ணம் வந்தது (“அவர்கள் அவ்வளவு பிழைப்புக்கெட்டு இருந்தார்களா?”) இதையெல்லாம் இப்போது சொல்லக் காரணம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மொழிபெயர்ப்பு இலக்கியம் அம்மொழிகளுக்கு, குறிப்பாக அவற்றின் தற்காலப் பயன்பாட்டிற்கு...

எதையும் உடுக்காமல்/ பகல் வெளிச்சத்தை ஊடுருவி/அவள் இறங்குகிறாள்

சித்திரக்கலை குறித்த முறையான அறிமுகம் எனக்கில்லை. சில ஓவியங்களைப் புரிந்துகொள்ள அவற்றைப் பற்றிய கவிதைகள் எனக்கு நுழைவாயிலாக அமைந்திருக்கின்றன. மேற்கத்திய (சித்திரக்) கலையில், கருத்தியல் ரீதியாகப் பல பாய்சல்கள் நிகழ்ந்துள்ளன என்று புரிந்துகொண்டேன். மற்ற கலைவடிவங்களிலும், குறிப்பாகக் கவிதையில், இவற்றுக்கு இணையான மொழி மற்றும் வடிவப் பாய்ச்சல்கள் நிகழ்ந்ததாக என் சொற்ப வாசிப்பின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆரம்ப காலத்து இமேஜிஸ்டு கவிதைகள் சிலவற்றைப் படித்தபோது பிரமிப்பாக இருந்தது. அதிலும் எஸ்ரா பவுண்டின் In a Station of the Metro இரண்டே வரிகளில் ஒரு அசையும் காணொளியையே காட்டுவது மொழியின் இத்தகைய பாய்ச்சலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்னும் சில பிரபலமான ஓவியங்களை ஒட்டி (அவற்றைப் பற்றி) எழுதப்பட்ட கவிதைகளையும் படித்தேன். காரவஜியோவின் The Calling of Saint Matthew என்ற ஓவியத்தை James Lasdun எழுதிய The Calling of the Apostle Matthew  கவிதை   மூலம் தெரிந்துகொண்டேன். கவிதையின் பொருள் மாத்தியூவின் ஆன்மிகப் பயணத்தைப் பற்றியதா க இருந்தாலும், அது தொடங்குவது இந்த ஓவியத்தில் உறைந்திருக்கும் ‘ஆட்கொள்...