முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அழகாயிருப்பது

உலகின் புகழ்பெற்ற படைப்பாளிகள் சிலரின் தினசரி ஒழுங்குகளை இங்கே கொடுத்திருக்கிறார்கள் . நானும் இம்மாதிரி ஏதாவதொன்று ஆக ஆசைப்படுவதால் ஆர்வத்துடன் படித்தேன். இதிலே எல்லாவற்றையும் விட என் கவனத்தைக் கவர்ந்தது விக்டர் ஹியுகோவின், தினசரி முடிதிருத்துபவரிடம் போகும் வழக்கம். கடந்த இரண்டாண்டுகளில் முடி வெட்டிக்கொள்ளப் போனால் ஒன்று, இரண்டு என்று மண்டையைக் காட்டி இலக்கம் சொல்வது பழகியிருந்தது. இயந்திரத்தில் அந்த இலக்கத்துக்கேற்ற வில்லையைப் போட்டு மழித்தால் பத்து நிமிடங்களில் வேலை முடியும். உபரியாகப் பல வசதிகளும்: இரண்டு மாதங்களுக்கு முடிவெட்டிக்கொள்ள வேண்டியதில்லை;  தூங்கியெழுந்தவுடன் பரட்டைத் தலையை ஒழுங்கு செய்ய நேரம் எடுத்துக் கொள்ளாமல் காற்சட்டையை இழுத்து மாட்டிக்கொண்டு உடனே பால் வாங்கவோ, மகளைப் பள்ளிக்கூடத்தில் விடவோ ஓடலாம்; பயணங்களில் சீப்பு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியதில்லை; கண்ணாடி பார்க்க வேண்டாம்; இரவுப்பயணங்களில் தூக்கத்துக்கு நடுவே தலையைக் கோதி சரிசெய்ய வேண்டாம்; இப்படிப் பல... இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் வீட்டிலே இதற்கு பலத்த எதிர்ப்பு உண்டு. ("ஏன் இப்படிக் கரண்டீட்டு வர்ற

தமிழில் கிரந்தம் தவிர்ப்பது பற்றி...

தமிழ் எழுதுவதில் இயன்றவரை கிரந்தம் தவிர்க்கலாம் என்று முடிவெடுத்திருந்தேன். இது தமிழ் வெறியினாலோ பிறமொழிக் காழ்ப்பினாலோ உந்தப்பட்டதல்ல. தற்போது புழக்கத்தில் இருக்கும் தமிழ் மொழி தமிழல்லாத மொழிகளின் பல சொற்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இது பல்லாண்டுகளாக இயல்பாக, பையப்பைய நடந்தது - யாரும் திட்டமிட்டுச் செய்யவில்லை என்பது தெரிந்ததே. இம்மொழியின் தொன்மையையோ, செம்மைத் தன்மையையோ, பிற பெருமைகளையோ முதன்மைப்படுத்தாமல், ஒரு தனித்தன்மை வாய்ந்த, (பிறமொழிகளைப்போலவே) நம் தாய்மொழி என்கிற அளவில், நாம் மறந்துவிட்ட தமிழ்ச்சொற்களை ஞாபகப் படுத்திக்கொள்ள வேண்டும், அவற்றை நம் புறக்கணிப்பினின்றும் மீட்கவேண்டும் என்பதே என் குறிக்கோள். கிரந்தத்தை ஒழித்தலே நம் கடன் என்று எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்த முனைவதில் எனக்குச் சில மனத்தடைகள் உண்டு. அவற்றில் முதன்மையானது பெயர்களைத் தமிழ்ப்படுத்துவது. நாம் நம் பெயர்களைப் பெருமையோடு தாங்குபவர்கள்; தமிழ்ப் பெயர்களையும் பிற பெயர்களையும் பெயருக்குச் சொந்தக்காரர் எழுதுவது போலேயே எழுதவேண்டும் - அது கிரந்தம் கலந்ததானாலும்.  எழுத்துப்பிழைகளையும் ( இருப்பதாக நாம் கருதினாலும்) இல

வெண்பா வாரம்

மரபுக் கவிதைகள் மேலே புதிய ஆர்வம். யாப்பிலக்கணத்தைப் பார்த்தால் 'கோலம் வரைந்தபின் இடப்பட்ட புள்ளிகள்' என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் (கவிதை) மரபை மீற விழைந்தவர்களுக்கு யாப்பு ஒரு ஆயத்த வடிவமாகவும் (template) கவிதை எழுதுதல் என்பது இந்த வடிவத்திலே சொற்களைச் சொருகி நிரப்புவதாகவும் இருக்கிறது. இதிலே 'சிருஷ்டி முகூர்த்தத்தின் லயம் தப்பாமல்' மனம் ஓடிய திக்கெல்லாம் ஓடி கவிதையைப் பிரசவிக்கும் உன்னத 'முகூர்த்தத்திலே' கணக்கு பிணக்கு சுணக்கு என்று தொடைகளைத் தேடி ஆயத்தவடிவத்தில் சொற்களை எப்போது சொருகுவது? அப்படிச் செய்வது கவிதையை மலினப்படுத்திவிடாதா? பிரமிள் எழுதியது: "பாரதி, யாப்பு அணிகளை மனசில் சப்பி, பிறகு குந்தியிருந்து வார்த்தைகளை அங்கங்கே கொட்டிப்பிரித்து 'பாட்டுக்கட்ட' வில்லை. காளமேகமோ யாரோ ஒரு தடவை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சோழ நாட்டுத் திருக்குடந்தையைச் சேர்ந்த முன்குடுமிக்காரனின் எச்சில் சோறு தன் இலையில் அவன் பிசகால் விழுந்ததற்கோ எதற்கோ சுர்ரென்று கோபம் வர, சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப் பொருக்குதிர்ந்த வாயா புலையா - திருக்