முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு கெட்டிக்காரக் 'கவிதை'

Photo by Andreea Popa on Unsplash முதலில், பின்னணி: இதையும் , இதையும் படித்து / பார்த்துவிடுங்கள்                            அவையத்து முந்தி யிருப்பச் செயல்                             வையத்து முந்தியிருப்பச் செயல்                                     முந்தி யிருப்பச் செயல்                                           இருப்பச் செயல்                                                   செயல் (ஐயன் பொறுப்பாராக)

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க

உடையாத் தளைகள் - பிற்சேர்க்கை

உடையாத் தளைகள் படம் தந்து உதவியது நண்பன்  மகேஷ் உடலிற் பிணைத்த துயிரின் தளையே வாழ்விற் பிணைத்தது உறவுத் தளையே ஒழுங்கினிற் கட்டுதும் மொழியின் தளையை மொழியினிற் கட்டுவம் பொருளாம் தளையும் மனத்திற் பிணைந்தது ஆசைத் தளையாம் ஒன்றாத் தளைகள் அறுவது மில்லை இதுமோர் இயற்சீர் வெண்டளைக் கட்டே மாமுன் வரும்நிரை விளம்முன் வரும்நேர்