முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒப்பனை கலைத்த ஒரு பொழுதில்

என்னில் கள்ளம் குடிகொண்ட பொழுது எதுவெனக் கூறமுடியவில்லை. எனக்கு நடிப்புக் கற்றுக் கொடுத்தது அதுதான். உழலும் சூழலுக்கேற்ப நாளொரு வேடமும், பொழுதொரு ஒப்பனையுமாக நான் வேண்டும்படி பிறருக்கு என்னைக் காட்டுவதில் தேர்ந்துவிட்டேன். உடலை மறைக்கவே ஆடைகள் என்ற கருத்தாக்கம், என் அம்மணத்தைக் குறித்து நானே வெட்கும் அளவிற்கு என்னில் உருவேற்றப் பட்டு விட்டதைப் போலவே, குழந்தையாய், உண்மையாய் நான் இருந்தநிலை போய், என் உண்மையான தன்மை பற்றி நான் வெட்கும் அளவிற்கு உடல் மறைக்கும் ஆடைகளாய் என்னை மறைக்கும் இந்த ஒப்பனைகள். சில அரிதான பொழுதுகளில் உன் முன்னால் இந்த ஒப்பனைகளை முற்றிலுமாகக் கழற்றி விடுகிறேன். அந்நேரங்களில் கள்ளம் உடனே என்னை மீட்கிறது. தன்வயமிழப்பதை என் பலவீனமாகவும், அதே சமயம் நிதானமிழக்காததை உன் பலமாகவும் அது சித்தரிக்கிறது. மேலும் உன் முன்னால் என்னை இழந்தது மூலம் என்னை நானே வலிந்து முட்டாளாக்கிக் கொண்டது போலவும், நான் அம்மணமானது போலவும் அது காட்டுகிறது. இது என் தன்மானப் பிரச்சனை ஆகிறது. ஒப்பனைகளை கழற்றிய நான் அவசரமாக அவற்றை மீண்டும் அணியத் துவங்குகிறேன். நீ என்னை ஏமாற்றிவிட்டதாக உணர்கிறேன். உன்ம

நா ஸொல்ல வர்றது என்னன்னா...

வார்த்தைகள் நைந்து நார்போலாகிவிட்டது தெரிந்ததே . இதன் காரணமாகவே இவைகளை உபயோகப்படுத்தும் போது மிகவும் கவனமாக இருத்தல் அவசியமாகிறது. உணர்த்த விரும்புதையெல்லாம் சொல்லில் அடக்கிவிடுவது எளிதானதாகத் தோன்றவில்லை. இப்படி முயற்சி செய்து வார்த்தைகளைத் திக்கித் திணறிச் சேர்க்கிறேன். இதிலே ஒவ்வொன்றிலும் என் உழைப்புத் தெரியும். இவ்வார்த்தைக் கோர்வையில் ஒவ்வொரு வார்த்தை மட்டுமன்று, அதனிடையே இடும் மௌனக் கார்வைகளும், விசும்பல்களும், செருமல்களும் கூட எனக்குப் பொன் போன்றவை. அவைகளின் மூலம் நான் ஊடாடுகிறேன். எனக்கு இந்த ஊடாடல் அவசியம். இந்தச் செருமல்களை, விசும்பல்களை வெற்றை இட்டு நிரப்பும் நோக்கிலன்றி, என்னை உணர்த்தும் நோக்கிலே கவனமாகச் சேர்த்திருக்கிறேன். வார்தைகளால் சொல்லமுடியாததை இப்படிச் சொல்லவேண்டியுள்ளது. இவைகளையெல்லாம் கொண்டு நான் உணர்த்த வருவதை நீ புரிந்துகொள்ளுதல் மிகவும் அவசியம். இந்த அவசியம் பொருட்டே, எனது கவனமும், உழைப்பும், வலியும். நீயோ, நான் இறுதியாக என்ன சொல்ல வருகிறேன் என்று அறிய விரும்புகிறாய். இது எனக்கு மிகுந்த அயர்ச்சியைத் தருகிறது. என் வார்த்தைகளும், வார்தைகள் அல்லாதவையும் உணர்த்த ம