முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்து ஊக்கிகள்


எங்களூர் நூலகத்தின் பழைய புத்தகங்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்தார்கள். நானும் கால்கடுக்க மூன்று மணி நேரம் செலவிட்டதில் நான்கைந்து புத்தகங்கள் தேறின. அதிலே தமிழிலே ஸ்ரீரங்கத்து தேவதைகள் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது நண்பன் ஒருவன் பழைய புத்தகக் கடையிலிருந்து இதை வாங்கி வந்திருந்தான். ரொம்ப நாட்கள் அதை வைத்திருந்து இரவல் கொடுத்ததிலோ வீடு மாற்றியதிலோ தொலைந்து விட்டது. இப்போது இது கிடைத்ததும் உற்சாகமாகி விட்டேன். ஸ்ரீரங்கத்துக் கதைகள் என்கிற தொகுப்பு 'தேவதைகள்' உட்பட மேலும் சில கதைகளைக் கொண்டு வெளிவந்திருக்கிறது. ஆனாலும் தொலைத்த, பழைய தொகுப்பு கிட்டியது சந்தோஷமாகத் தான் இருக்கிறது.

சில எழுத்துகள் படித்ததும் அலையலையான நினைவுகளைக் கிளறிவிட வல்லன. ஸ்ரீரங்கத்து தேவதைகள் அவ்வாறான ஒன்று. சுஜாதாவின் மிக அருமையான படைப்பென்றே இதைச் சொல்லுவேன். நம் இளமைக்காலத்தின் நினைவுகளோடு பொருத்திப் பார்க்க முடிவதாலும், சொந்த அனுபவங்களை ஒத்திருப்பதாலும், இன்னும் சில மனதிற்கு நெருக்கமான உணர்வுகளை, காலங்களை நினைவு படுத்துவதாலும் இது எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் மேலாக சுஜாதாவின் தனித்தன்மை வாய்ந்த துள்ளலும், எள்ளலும், self-deprecating humor உம் தான் இதை ஒரு ஒப்பற்ற வாசிப்பு அனுபவமாக மாற்றுகிறது.

======
இன்னும் சில எழுத்துகளை வாசித்தபின் எண்ணங்கள் குறுகலான முட்டுச் சந்துகளை விட்டு விசாலமான ஒரு பெருவெளிக்கு விடுதலை பெற்றுப் போகின்றன. ஒவ்வொரு முறையும் இப்படி மூச்சு முட்டியிருக்கையிலே புதிய சாத்தியங்களுக்கான வெளிகள் வாசிப்பிலிருந்தே கிட்டிவிடுகின்றன. கொடுமையான கனவு உறக்கம் கலைத்தபின் நிகழ்வாழ்வின் போதம் தரும் ஆசுவாசம் போல இவை பொதுவில் வாழ்வில் புது நம்பிக்கை கொள்ளச் செய்வன.

======

Principles of good writing என்கிற கட்டுரை பள்ளியிலே ஆங்கிலப் பாடத்தில் இருந்தது. அதிலே நல்ல எழுத்துக்கு perspiration 99%, inspiration 1% என்றும், தெளிவான சிந்தனையே தெளிவான எழுத்துக்கு வழி செய்யும் என்றும் சொல்லியிருந்தது. மேலும், ஒரு குறிப்புப் புத்தகமும், பென்சிலும் எப்போதும் கைவசமிருக்கவேண்டும் என்றும், ஏதேனும் நல்ல கருத்தோ, சொற்றொடரோ, எழுத ஏதுவான எதுவோ தோன்றியவுடன் இக்குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அக்கட்டுரையிலே இருந்தது. தற்சமயம் தெளிவான எண்ணங்கள் இல்லை; குறிப்புப் புத்தகமும் இல்லை. இருந்திருந்தால் கடந்த சில தினங்களில் எழுதத் தூண்டிய சில விஷயங்கள் பற்றியும், அலையலையாக அப்போது கிளர்ந்தெழுந்த நினைவுகளையும் குறித்து வைத்துக் கொண்டிருக்கலாம். இப்போது அடித்தும் திருத்தியும் எழுதிப்போகும் இக்கணம் நிலவும் கற்பனை வறட்சியும் அதனால் ஏற்படும் சோர்வும் இல்லாமல் இருந்திருக்கலாம்.

சிந்திக்க, எழுதத் தூண்டிய அத்தகைய ஒரு விஷயம்: அருளின் மெய்யியல் / புன்னகையில் மின்சாரம் பற்றிய பதிவு. இப்போதைக்கு எஸ்கேப்.

கருத்துகள்

Sri இவ்வாறு கூறியுள்ளார்…
This is aka, aadikku oru post, amavasaikku oru post.

CC
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
CC,

Point noted. And thanks for registering @ blogspot just to comment on this :) I had taken off the Anonymous option to avoid comment spamming.

Well, your Srirangathu thevathaikal copy was with me till I lost it quite recently when I shifted my house. Was happy to find it and reminisce our days at M.kere...
ஜெ. ராம்கி இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க. வாங்க்... வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்க..

அன்புடன் ராம்கி
http://wwww.thaiyal.com
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Knski

The book Srirangathu Thevathaikal is with me.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பொருளுள் சிக்கிய மொழியை விடுவித்தல்

என் மகள்களுடன் ஒருநாள் விளையாட்டாக (ஆங்கிலத்தில்) பெயரடைகளுக்கும் வினையடைகளுக்குமான வித்தியாசத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். மீனா இவ்விரண்டையும் வேறுபடுத்தத் தெரியவில்லை என்றதால் அந்தப்பேச்சு வந்தது. நான் சொன்னேன்: “வினையடைகள் வினைச்சொல்லை விளக்குவன. ஆனால், வினைச்சொற்கள் என்பன வினைகளின் பெயரைக்குறிப்பதால் அவைகளும் பெயர்ச்சொற்களே. அப்படிப்பார்த்தால், வினைச்சொல் என்றொன்று இல்லவேயில்லை, எல்லாமே பெயர்ச்சொற்கள்தாம். அதன்படி, வினையடைகள் எல்லாம் பெயரடைகளே. இன்னும், பெயர்ச்சொல்லை விவரிக்கும் பெயரடைகளும், அந்த விவரிப்பின் பெயரேயாதலால் அவைகளும் பெயர்ச்சொற்களே! அப்படியாக, மொழி பெயர்சொற்களால் மட்டுமேயானது.” இருவரும் என்மேல் (இன்னும்) கொலைவெறியில் இருக்கிறார்கள். ஆனால் மொழி எப்போதுமே எல்லாவற்றிற்கும் பெயர்சூட்டுவதையே செய்கின்றது. மரம், காற்று, பூக்கள், என்றெழுதுவதெல்லாம் அந்தப் பொருட்களை நினைவுபடுத்தினாலும் மரம் என்று நான் இங்கே எழுதியிருப்பது மரமாகாது. சொற்கள் வெறும் குறியீடுகளே. இல்லாத பொருட்களைச் சொல்லால் இட்டுநிறைப்பது மொழி. என். எஸ். கிருஷ்ணனின், சொற்களின் முதலெழுத்தை மாற்றிப்போட்டுப் பேச...