முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்று தீரும் ஆடுகளச் சர்சை?

மும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள் - இந்தியா 104 & 5/0 (3 ஓவர்கள்) - கம்பீர் 1*, சேவாக் 4*, ஆஸ்திரேலியா 203

இன்று ஹிந்துவில் பீட்டர் ரீபெக் பத்தி(column) பார்த்தீர்களா? வான்கடே ஆடுகளம், களங்களுக்கெல்லாம் இழுக்கு என்றும், நம்மாட்கள் இத்தொடரில் ஒரு ஆட்டத்தையாவது வெல்ல வேண்டி கேவலமாக ஆடுகளம் தயாரித்திருக்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார். ஆடுகளம் தவிர்த்த, மைதானத்தின் எந்தப் பகுதியுமே இதைவிட மேம்பட்டது என்றும், பயிற்சிக் களமே தேவலை என்றும் தாறுமாறாக எழுதியிருக்கிறார்.

களம் அவ்வளவு மோசமா? இல்லை இது அளுகுணியா? நம்மூரில் ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் களம் பற்றிய சர்ச்சைகள் வந்தவண்ணம் இருக்கிறதே! பாகிஸ்தான், இலங்கைக் களங்கள் பற்றி "ஸ்லோ விக்கட்" என்ற விமரிசனத்தை மீறி வேறொன்றும் வருவதில்லையே. நம்மாட்கள் விழுந்து புரண்டு அரை நாளில் பத்து விக்கட் எடுத்தாலும், இம்மாதிரி யாராவது குறை சொல்லி அழுகிறார்கள்.

பேசாமல், இனிமேல் நியூட்ரல் இடங்களில் தான் டெஸ்ட் பந்தயங்கள் வைப்பது என்று சொல்லலாம் - ஆனால் இது சரிப்பட்டு வராது; நம்மாட்கள் ஆடுவதை நம் மண்ணில் பார்க்காமல் என்ன கிரிக்கெட் வேண்டியிருக்கு? வேறொன்று நடைமுறைச் சாத்தியம் என்று நினைக்கிறேன் - ICC ஆடுகளம் அமைப்பதற்கான சில விதிமுறைகள்/கோட்பாடுகள் வகுத்தால், எல்லா ஊரிலும் அடிப்படையான சில வரைமுறைகளுக்குட்பட்டு, (அதற்குமேல் நாம் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்) ஆடுகளங்கள் தயாரிக்கலாம்.

இதற்கு மேல் களங்களைப் பற்றி யாரும் எதுவும் சொல்லத் தேவையில்லை. இந்த மாதிரி நம்மாட்கள் அபூர்வமாய் நன்றாய்ச் செய்தால் நிம்மதியாய் சந்தோஷப்படலாம்.

கருத்துகள்

rajkumar இவ்வாறு கூறியுள்ளார்…
இந்டியாவில் மட்டும் பிட்ச் தயாரிப்பதை குறை கூறுவதே இவர்களது வழக்கமாய் இருக்கிறது.

உலகக் கோப்பைக்கு முன் நியுஸிலாந்தில் நடந்த டெஸ்ட் மேட்சிற்க்கு போட்ட பிட்சுகளைப் பற்றி ரோபோக் குறையேதும் சொன்னாரா?

இதைத் தவிர சவுத் ஆப்ரிக்காவில் கிங்ஸ்மெட்டில் இரண்டு ஆள் உயரத்திற்கு பந்து எழும்புவதைப் போல் பிட்ச் அமைத்தார்கள்.

இவையெல்லாம் கண்டிக்கப்ப்ட மாட்டாது. இந்தியாவில் பந்து திரும்பினால் கோபம் வரும்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
உள்ளது, ராஜ்குமார்...
Badri Seshadri இவ்வாறு கூறியுள்ளார்…
மும்பை ஆடுகளம் மோசமானதுதான். சும்மா பந்தைத் தூக்கிப்போடும் கிளார்க் எல்லாம் கொத்து கொத்தாக விக்கெட் எடுத்தார் அல்லவா? ஆனால் அவ்வப்போது ஒருசில ஆட்டங்கள் மோசமான ஆடுகளத்தில் நடப்பதில் தவறொன்றுமில்லை. இந்தியா நியூசிலாந்தில் போய் மூன்று நாள்களுக்கு ஒரு டெஸ்ட் என்று இரண்டு டெஸ்ட்களில் உதை வாங்கிக்கொண்டு வந்ததில்லையா? அவையும் கூட மோசமான ஆடுகளங்கள்தான்.

கர்ட்லி ஆம்புரோசும், கோர்ட்னி வால்ஷும் உச்சத்தில் இருந்த நேரம் மேற்கிந்தியத் தீவுகளில் அமைக்கப்பட்ட சில ஆடுகளங்களும் (முக்கியமாக ஜமாய்க்கா) படு மோசமானவை. ஒருமுறை ஆட்டம் தொடங்கி முதல் பந்து நடுக்களத்தில் விழுந்து விக்கெட் கீப்பர் தலைக்கு மேலாகப் பறந்து எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்றது. நாலைந்து ஓவர்களுக்குப் பிறகு அந்த டெஸ்ட் ஆட்டத்தை ரத்து செய்துவிட்டனர். அது மோசமான ஆடுகளம்தான்.

மும்பை போல தொடர்ச்சியாக ஆடுகளங்களை அமைப்பது நல்லதில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...