நகுலன் வாலஸ் ஸ்டீவன்ஸைத் "தன்னை பாதித்த கவிஞர்" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஸ்டீவன்ஸின் இந்தக் கவிதை எனக்குப் பிடித்தமானது. பதிமூன்று பகுதிகளைக் கொண்ட இக்கவிதையின் ஒவ்வொரு பகுதியும் ஹைக்கூவை நினைவுபடுத்துவது. இந்தக் கவிதை முழுவதையும் வரிவரியாகக் கீழிருந்து மேலாக படித்தால் ஒரு கோர்வையிருப்பதாக எனக்குத்தோன்றும். இதன் கடைசிப் பகுதியை மொழிபெயர்க்க முயன்றிருக்கிறேன். மூலத்தின் அழகு மொழிபெயர்ப்பில் (பவுத்திரத்தில் - உபயம்: பேயோன்) இல்லை. இருந்தாலும் ஐந்தாறு விதமாக எழுதிப்பார்த்துக் கொண்டு மேற்கொண்டு முடியாமல் இதைத் தருகிறேன். ஆங்கில மூலத்தையே படித்து இன்புறுமாறு வேண்டிக்கொண்டாலும், உங்களால் இந்தப் பத்தியையோ வேறொன்றையோ மொழிபெயர்க்க முடிந்தால் செய்து பாருங்கள் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
https://www.poetryfoundation.org/poems/45236/thirteen-ways-of-looking-at-a-blackbird
(இங்கே நான் இட்டிருப்பது https://www.poetryfoundation.org/ தளத்தில் இருந்து எடுத்த திரைச்சொட்டுகள் )
என் 'முழிபெயர்ப்பு':
https://www.poetryfoundation.org/poems/45236/thirteen-ways-of-looking-at-a-blackbird
(இங்கே நான் இட்டிருப்பது https://www.poetryfoundation.org/ தளத்தில் இருந்து எடுத்த திரைச்சொட்டுகள் )
என் 'முழிபெயர்ப்பு':
பகலெல்லாம் மாலையாய்த் தீர்ந்தது.
பனி பொழிந்துகொண்டிருந்தது
பொழியக் காத்துமிருந்தது.
பெருமரத்தின் கிளையொன்றில்
அமர்ந்திருந்தது மலைச்சிட்டான்.
கருத்துகள்