முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Save Darfur!

ருவாண்டாவிற்குப் பிறகு, அதை விட பல மடங்கு கொடூரமான இனப்படுகொலைகள் சுடான் நாட்டின் டர்ஃபூர் பகுதியில் நடந்து வருகிறது. சுடான் அரசின் பின்பலத்தில் ஜஞ்சாவீத் என்ற கும்பல் கருப்பின சாதாரணர் மீது வன்முறையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பெண்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பாலியல் வன்முறைக்கும், ஆண்கள், சிறுவர்கள் படுகொலைக்கும் ஆளாகிறார்கள். இதுவரையில் பாலியல் வன்கொடுமை ஒரு இன அழிப்பிற்கு முக்கியமான ஆயுதமாகப் பயன் படுத்தப் படுவது நான் கேள்வியுறாதது.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்தேறி வரும் இந்த கோரத்திற்கு சுடான் அரசு மறைமுகமாகத் துணை போவதுடன், உதவிக்குச் செல்லும் மனிதாபிமான அமைப்புக்களுக்கு உரிய ஒத்துழைப்பையும் நல்குவதில்லை. சர்வதேச அளவில் ஓட்டரசியல் நடத்தும் வல்லரசுகளுக்கு இதில் தலையிட அரசியல் ஆதாயம் இல்லாமல் போகலாம். ஐ நா வின் மென்மையான வலியுறுத்தல்கள் நிலைமையை பெரிய அளவில் மாற்றியமைக்கப் போவதில்லை. மனித உயிர்கள் மிகப் பகிரங்கமாக துச்சமாக மதிக்கப் படுவதும், அவமானப் படுத்தப் படுவதும் மனித உரிமை மீறலின் புதிய எல்லைகளைத் தொடுகின்றனவாகும்.

ஹோட்டல் ருவாண்டா என்ற திரைப்படம் பார்த்த பிறகே எனக்கு 94-95 களில் நடந்தேறிய ருவாண்டாவின் கோரம் ஓரளவிற்கு இப்போது புரிந்தது. இப்போது அதையும் தாண்டுகின்ற மனித உரிமை மீறல் நம் கண்முன்னே நடந்தேறுகிறது. இதற்கு ஏதேனும் செய்தாக வேண்டும்.

இந்த அநியாயம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவே இப்பதிவு.

நன்றி: திண்ணையில் ஆசாரகீனன் கட்டுரை (டர்ஃபூர் பிரச்சனை குறித்து ஹிந்து மூலமே முதலில் தெரிந்து கொண்டேன். இது குறித்த அவர்கள் தலையங்கமும், அதற்கு இந்திய சுடான் தூதரகம் வெளியிட்ட மறுப்பும் சுமார் 4 மாதங்களுக்கு முன்னால் பிரசுரமாகியது. இதையும் தவிர இப்பிரச்சனை குறித்த மூன்று-நான்கு கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன என்ததை ஒரு தகவலுக்காக மட்டும் சொல்லி வைக்கிறேன்)

சில சுட்டிகள் (ஆசாரகீனன் கட்டுரையில் இருந்து):

Darfur : A Genocide We Can Stop

Save Darfur

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

கிச்சா பாறைகள்!

Screenshot from https://www.poetryfoundation.org/poems/42839/i-know-a-man பாண்டியில் படித்துக்கொண்டிருக்கும்போது (இது அந்தக்காலத்திற்கான இடுகுறிச் சொற்றொடர் - உண்மையில் ‘படித்த’ நினைவு இல்லை) ஒரு பின்னந்திப்பொழுதில் தெருத்தெருவாகச் சுற்றித்திரிந்தபோது கிச்சா, இதரர்களுடன் ஒரு கோவிலுக்குள் போன நினைவிருக்கிறது. மறுநாள் ம்யுபி என்ற மைக்ரோகபுராசஸர் இழவுத் தேர்வு இருந்தது பல்கலையில். கோவிலில் ஓ எஸ் தியாகராஜன் கச்சேரி என்று தட்டி வைத்திருந்தார்கள். ஓ எஸ் டி பின்னாட்களில்  கச்சேரி பண்ணுகிறேன் என்ற பெயரில் ஒப்பேத்தல் மன்னராக இருந்தாலும்  (இதைச் சொன்னதற்காக என்னை அடிக்க வராதீர்கள்) அருமையான பாடாந்தரம், வெண்கலக்குரல், களையான கச்சேரிகள், என்று 93ல் என் விருப்பத்திற்குரியவராகவே இருந்தார்.   நான் தட்டியைப்பார்த்துப் பரபரத்தேன். “ஓ எஸ் டி பாடறாரு மச்சான் - என்ன, எங்கன்னு விசாரிப்போம்”. இந்தவிடத்தில் கிச்சா அவனுடைய பாணியில் என்னைத் தடுத்தாட்கொண்டான்.  “ ஓ எஸ் தியாகராஜனையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், நாம  இப்ப ம்யுபி தியாகராஜனை கவனிப்போம்”... (முதுநிலைப் படிப்பில் அந்த அர...