முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நா ஸொல்ல வர்றது என்னன்னா...

வார்த்தைகள் நைந்து நார்போலாகிவிட்டது தெரிந்ததே. இதன் காரணமாகவே இவைகளை உபயோகப்படுத்தும் போது மிகவும் கவனமாக இருத்தல் அவசியமாகிறது. உணர்த்த விரும்புதையெல்லாம் சொல்லில் அடக்கிவிடுவது எளிதானதாகத் தோன்றவில்லை.

இப்படி முயற்சி செய்து வார்த்தைகளைத் திக்கித் திணறிச் சேர்க்கிறேன். இதிலே ஒவ்வொன்றிலும் என் உழைப்புத் தெரியும். இவ்வார்த்தைக் கோர்வையில் ஒவ்வொரு வார்த்தை மட்டுமன்று, அதனிடையே இடும் மௌனக் கார்வைகளும், விசும்பல்களும், செருமல்களும் கூட எனக்குப் பொன் போன்றவை. அவைகளின் மூலம் நான் ஊடாடுகிறேன். எனக்கு இந்த ஊடாடல் அவசியம். இந்தச் செருமல்களை, விசும்பல்களை வெற்றை இட்டு நிரப்பும் நோக்கிலன்றி, என்னை உணர்த்தும் நோக்கிலே கவனமாகச் சேர்த்திருக்கிறேன். வார்தைகளால் சொல்லமுடியாததை இப்படிச் சொல்லவேண்டியுள்ளது. இவைகளையெல்லாம் கொண்டு நான் உணர்த்த வருவதை நீ புரிந்துகொள்ளுதல் மிகவும் அவசியம். இந்த அவசியம் பொருட்டே, எனது கவனமும், உழைப்பும், வலியும்.

நீயோ, நான் இறுதியாக என்ன சொல்ல வருகிறேன் என்று அறிய விரும்புகிறாய். இது எனக்கு மிகுந்த அயர்ச்சியைத் தருகிறது.

என் வார்த்தைகளும், வார்தைகள் அல்லாதவையும் உணர்த்த முடியாததை ஒரேயொரு இறுதியான ஒற்றை வரியில் சொல்ல முடியும் என்று உனக்குத் தோன்றுகிறதா?

ஆயின், வார்த்தைகளை விரயம் செய்யாமலிருப்பது எப்படி என்று நீ எனக்குக் கற்றுத் தர வேண்டும்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன்,

'அருமையாக இருக்கிறது' என்று வழமையான, கீறல் விழுந்த, தட்டையான வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. :(

இடுகை முழுவதும் அப்படியே மனதில் இறங்கிவிட்டது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ப்ளொக்கர் பீட்டாவுக்கு மாறிட்டீங்க போலிருக்கு. தமிழ்மணம் பதிவர் toolbar இடுவதற்கு உதவும் சுட்டி

http://blog.thamizmanam.com/archives/51

இந்த இடுகையை, புத்தகவாசத்துக்காக இங்க வந்தப்ப பார்த்தேன். இல்லைன்னா, அந்த வாசிப்பு அனுபவம் கிடைக்காமப்போயிருக்கும். :(
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
மதி,

உங்களுக்கு இந்த இடுகை பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.

அப்புறம், நீங்கள் கொடுத்த சுட்டியைப் பார்த்து வேண்டிய மாற்றங்களைச் செய்துவிடுகிறேன்.

புத்தகவாசத்தில் என் இடுகைகளை இட்டமைக்கும் நன்றி :-)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...