"யாரைக் காணொம்?..."
"...சாமியைக் காணொம்"
"சாமியைக் கண்டால்?..."
"...மோட்சம் கிட்டும்"
சின்ன வயதில் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் வரசித்தி விநாயகர் கோவிலில் ஐயப்பமார் சரணம் விளிக்கும்போது சொல்வது. ரொம்ப நாளைக் கப்புறம் தான் அது மலையாளத்தில் உள்ள விளி என்று தெரிந்தது. "ஆரைக் காணான்?" (யாரைப் பார்க்க?) என்பதை, "யாரைக் காணவில்லை?" என்று புரிந்து கொண்டதற்குக் காரணம் குட்டன் என்று அறியப்படும் கோவில் வேலையாள். கருப்பான, நெடிந்த திரேகம் - தாடியின் அடர்த்தியில் கூராகத் தெரியும் கண்கள் என்று ஒரு தீவிரத்துவம் உள்ள முகம் ஆதலால் நாங்கள் (பொடிப் பசங்க) எல்லோரும் அவனைக் கண்டு பயப்படுவோம். அவந்தான் இப்படி தப்புத் தப்பாகச் சரணம் விளிப்பவன்.
வேலையில் கடந்த அரையாண்டில் என் பங்களிப்பு பற்றிய பின்னூட்டம் கொடுத்த மேனேஜரிடம் பலமுறை பதவி உயர்வு வேண்டுவது பற்றி நினைவூட்டினேன். இப்போது கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு போனேன்.
" உங்கள் பங்களிப்பு நம் நிறுவனத்திற்கு பெரும் உதவியாய் இருந்த்துள்ளது; ஆனால் இன்னும் அடுத்த நிலைக்கான அனுபவம் போதுமா என்று சந்தேகம்; உங்களுக்கு அது போதிய அளவில் வருவதற்காக மூன்று மாதங்கள் ஒரு புதிய காரியத்தைச் செய்ய ஒதுக்கி உள்ளேன். இதே கவனத்துடன் செய்யுங்கள் - நிறுவனத்தின் முக்கியமான பணியாளர்களில் நீங்களும் ஒருவர்" என்று அனுப்பிவிட்டார். (கருணாநிதி, "மந்திரி சபையில் இடமில்லையென்றால் என்ன? என் மனத்தில் இடம் அளித்துவிட்டேன்" என்கிற மாதிரி)
இந்தக் குட்டனை எனக்குச் சுத்தமாய் பிடிக்காமல் போனது ஒரு கோயில் பஜனையின் போது. அப்போதெல்லாம் பஜனை, காலட்சேபம், கச்சேரி என்றால் முதல் வரிசையில் ஆஜராகி, முடிந்தபின் சுண்டல் பஞ்சாமிருதம் வாங்கிச் சாப்பிட்டுத்தான் வீடு திரும்புவேன். பஜனையில் குட்டன் ஜால்ரா (சய்ன் சக், கிண்ணாரம் என்றெல்லாம் சொல்லலாம்) வாசித்து(?)க் கொண்டிருந்தான். எனக்கு அதன்மேல் ரொம்ப நாளாக ஒரு கண். வீட்டில் எனக்கு அது மாதிரி ஒன்று வாங்கிக் கொடுக்கும்படி அடம் பிடித்தேன் - செல்லுபடியாகவில்லை. அன்று என் அம்மாவிடம் அழுது சாட்டியம் பிடித்ததில், குட்டனிடம் சிபாரிசு செய்து ஜால்ரா என் கைக்கு வந்தது. சந்தோஷப் பட்டு, அதை வாங்கிக்கொண்டு, அருகில் இருக்கும் வீட்டுக்கு ஓடினேன். உட்கார்ந்து, ஆசையாய் ஒருதடவை க்ளிங் என்று தட்டினதுதான் தாமதம், முன்னால் குட்டன் வந்து நின்றான். "ஜால்ரா வேணும்னா கோவில்ல வந்து அடி, வீட்டுக்கெல்லாம் எடுத்துகிட்டு வரக்கூடாது" என்றான். நானோ வீட்டில் நான் மட்டும் அதை ஒலிப்பேன் என்றும், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாதென்றும் அழுதேன். குட்டன் என் கையிலிருந்து அதைப் பிடுங்க வந்தான்; வந்த கோபத்தில் ஜால்ராவை வாசலில் விட்டெறிந்தேன். குட்டன் நாக்கை மடக்கி என் பின்புறத்தில் ஒரு அடி கொடுத்து விட்டு, ஜால்ராவை பொறுக்கிக் கொண்டு போனான். அப்போது கறுவிக் கொண்டேன் - பெரியவன் ஆனதும் நிறைய ஜால்ராக்கள் வாங்கி வீட்டில் அடுக்குவது; குட்டனைத் திருப்பி அடிப்பது எனறு.(இரண்டும் நடக்கவில்லை)
பதவி உயர்வு இல்லையென்றாலும் புதிய வேலையில் நான் ரொம்ப முக்கியமான ஆளாக இருக்கிறாற்போல் தெரிந்தது. எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்கமுடிந்ததின் சுதந்திரமும் அதிகாரமும் ஒரு மப்பைக் கொடுத்தது. இந்தச் சமயத்தில் மேலாளர் மறுபடி கூப்பிட்டனுப்பினார், போய் நின்றேன். "நீ பொறுப்பேற்றிருக்கும் இந்தக் காரியம் முக்கியமானது; இதன் வெற்றி நிறுவனத்திற்கு இன்றியமையாதது. இந்தப் பொறுப்பை நீ தனியாக சமாளிப்பது உன் திறமையைக் காட்டுகிறது" எனறு நிறுத்தினார். நமக்கு ஒரே புளகாங்கிதம். "இருந்தாலும் இதன் கஷ்டத்தை மனத்தில் கொண்டு, ரவியையும் உன்னோடு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பது என் விருப்பம் - நீங்கள் வேலையை உங்கள் விருப்பப் படி பங்கீடு செய்து கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல் ரவிக்கும் இது ஒரு நல்ல அனுபவம் தரும் இல்லையா? உங்கள் அபிப்பிராயம் ?" என்றார். குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாய் ஆனதே என்று "சப்"பென்று போனது - கோபம் வந்தது. நான் சொன்னேன் " ஐயா, நானே உங்களிடம் சொல்லலாமென்றிருந்தேன்; சில சொந்தப் பிரச்சனைகளால் சரிவர வேலை செய்ய முடியவில்லை. இரண்டு வார விடுப்பில் போக வேண்டுமென்றிருந்தேன். நல்ல வேளையாக ரவி பற்றிச் சொன்னீர்கள். என்னால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது - பழைய வேலையே இப்போது செய்கிறேன். இதை ரவியே முழுவதுமாகப் பார்த்துக் கொள்ளட்டும்" என்று.
(யாரது, "அட முட்டாளே" என்று சொல்வது? தைரியமிருந்தால் என் முன்னே வாருங்கள்!)
"...சாமியைக் காணொம்"
"சாமியைக் கண்டால்?..."
"...மோட்சம் கிட்டும்"
சின்ன வயதில் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் வரசித்தி விநாயகர் கோவிலில் ஐயப்பமார் சரணம் விளிக்கும்போது சொல்வது. ரொம்ப நாளைக் கப்புறம் தான் அது மலையாளத்தில் உள்ள விளி என்று தெரிந்தது. "ஆரைக் காணான்?" (யாரைப் பார்க்க?) என்பதை, "யாரைக் காணவில்லை?" என்று புரிந்து கொண்டதற்குக் காரணம் குட்டன் என்று அறியப்படும் கோவில் வேலையாள். கருப்பான, நெடிந்த திரேகம் - தாடியின் அடர்த்தியில் கூராகத் தெரியும் கண்கள் என்று ஒரு தீவிரத்துவம் உள்ள முகம் ஆதலால் நாங்கள் (பொடிப் பசங்க) எல்லோரும் அவனைக் கண்டு பயப்படுவோம். அவந்தான் இப்படி தப்புத் தப்பாகச் சரணம் விளிப்பவன்.
வேலையில் கடந்த அரையாண்டில் என் பங்களிப்பு பற்றிய பின்னூட்டம் கொடுத்த மேனேஜரிடம் பலமுறை பதவி உயர்வு வேண்டுவது பற்றி நினைவூட்டினேன். இப்போது கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு போனேன்.
" உங்கள் பங்களிப்பு நம் நிறுவனத்திற்கு பெரும் உதவியாய் இருந்த்துள்ளது; ஆனால் இன்னும் அடுத்த நிலைக்கான அனுபவம் போதுமா என்று சந்தேகம்; உங்களுக்கு அது போதிய அளவில் வருவதற்காக மூன்று மாதங்கள் ஒரு புதிய காரியத்தைச் செய்ய ஒதுக்கி உள்ளேன். இதே கவனத்துடன் செய்யுங்கள் - நிறுவனத்தின் முக்கியமான பணியாளர்களில் நீங்களும் ஒருவர்" என்று அனுப்பிவிட்டார். (கருணாநிதி, "மந்திரி சபையில் இடமில்லையென்றால் என்ன? என் மனத்தில் இடம் அளித்துவிட்டேன்" என்கிற மாதிரி)
இந்தக் குட்டனை எனக்குச் சுத்தமாய் பிடிக்காமல் போனது ஒரு கோயில் பஜனையின் போது. அப்போதெல்லாம் பஜனை, காலட்சேபம், கச்சேரி என்றால் முதல் வரிசையில் ஆஜராகி, முடிந்தபின் சுண்டல் பஞ்சாமிருதம் வாங்கிச் சாப்பிட்டுத்தான் வீடு திரும்புவேன். பஜனையில் குட்டன் ஜால்ரா (சய்ன் சக், கிண்ணாரம் என்றெல்லாம் சொல்லலாம்) வாசித்து(?)க் கொண்டிருந்தான். எனக்கு அதன்மேல் ரொம்ப நாளாக ஒரு கண். வீட்டில் எனக்கு அது மாதிரி ஒன்று வாங்கிக் கொடுக்கும்படி அடம் பிடித்தேன் - செல்லுபடியாகவில்லை. அன்று என் அம்மாவிடம் அழுது சாட்டியம் பிடித்ததில், குட்டனிடம் சிபாரிசு செய்து ஜால்ரா என் கைக்கு வந்தது. சந்தோஷப் பட்டு, அதை வாங்கிக்கொண்டு, அருகில் இருக்கும் வீட்டுக்கு ஓடினேன். உட்கார்ந்து, ஆசையாய் ஒருதடவை க்ளிங் என்று தட்டினதுதான் தாமதம், முன்னால் குட்டன் வந்து நின்றான். "ஜால்ரா வேணும்னா கோவில்ல வந்து அடி, வீட்டுக்கெல்லாம் எடுத்துகிட்டு வரக்கூடாது" என்றான். நானோ வீட்டில் நான் மட்டும் அதை ஒலிப்பேன் என்றும், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாதென்றும் அழுதேன். குட்டன் என் கையிலிருந்து அதைப் பிடுங்க வந்தான்; வந்த கோபத்தில் ஜால்ராவை வாசலில் விட்டெறிந்தேன். குட்டன் நாக்கை மடக்கி என் பின்புறத்தில் ஒரு அடி கொடுத்து விட்டு, ஜால்ராவை பொறுக்கிக் கொண்டு போனான். அப்போது கறுவிக் கொண்டேன் - பெரியவன் ஆனதும் நிறைய ஜால்ராக்கள் வாங்கி வீட்டில் அடுக்குவது; குட்டனைத் திருப்பி அடிப்பது எனறு.(இரண்டும் நடக்கவில்லை)
பதவி உயர்வு இல்லையென்றாலும் புதிய வேலையில் நான் ரொம்ப முக்கியமான ஆளாக இருக்கிறாற்போல் தெரிந்தது. எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்கமுடிந்ததின் சுதந்திரமும் அதிகாரமும் ஒரு மப்பைக் கொடுத்தது. இந்தச் சமயத்தில் மேலாளர் மறுபடி கூப்பிட்டனுப்பினார், போய் நின்றேன். "நீ பொறுப்பேற்றிருக்கும் இந்தக் காரியம் முக்கியமானது; இதன் வெற்றி நிறுவனத்திற்கு இன்றியமையாதது. இந்தப் பொறுப்பை நீ தனியாக சமாளிப்பது உன் திறமையைக் காட்டுகிறது" எனறு நிறுத்தினார். நமக்கு ஒரே புளகாங்கிதம். "இருந்தாலும் இதன் கஷ்டத்தை மனத்தில் கொண்டு, ரவியையும் உன்னோடு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பது என் விருப்பம் - நீங்கள் வேலையை உங்கள் விருப்பப் படி பங்கீடு செய்து கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல் ரவிக்கும் இது ஒரு நல்ல அனுபவம் தரும் இல்லையா? உங்கள் அபிப்பிராயம் ?" என்றார். குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாய் ஆனதே என்று "சப்"பென்று போனது - கோபம் வந்தது. நான் சொன்னேன் " ஐயா, நானே உங்களிடம் சொல்லலாமென்றிருந்தேன்; சில சொந்தப் பிரச்சனைகளால் சரிவர வேலை செய்ய முடியவில்லை. இரண்டு வார விடுப்பில் போக வேண்டுமென்றிருந்தேன். நல்ல வேளையாக ரவி பற்றிச் சொன்னீர்கள். என்னால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது - பழைய வேலையே இப்போது செய்கிறேன். இதை ரவியே முழுவதுமாகப் பார்த்துக் கொள்ளட்டும்" என்று.
(யாரது, "அட முட்டாளே" என்று சொல்வது? தைரியமிருந்தால் என் முன்னே வாருங்கள்!)
கருத்துகள்
"ஆஃபீஸ்ல இதெல்லாம் சகஜமப்பா :-D"
அப்படீன்றீங்க?
சரி :-)