முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ச்சீ... இந்த ஜால்ரா புளிக்கும்!"

"யாரைக் காணொம்?..."

"...சாமியைக் காணொம்"

"சாமியைக் கண்டால்?..."

"...மோட்சம் கிட்டும்"

சின்ன வயதில் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் வரசித்தி விநாயகர் கோவிலில் ஐயப்பமார் சரணம் விளிக்கும்போது சொல்வது. ரொம்ப நாளைக் கப்புறம் தான் அது மலையாளத்தில் உள்ள விளி என்று தெரிந்தது. "ஆரைக் காணான்?" (யாரைப் பார்க்க?) என்பதை, "யாரைக் காணவில்லை?" என்று புரிந்து கொண்டதற்குக் காரணம் குட்டன் என்று அறியப்படும் கோவில் வேலையாள். கருப்பான, நெடிந்த திரேகம் - தாடியின் அடர்த்தியில் கூராகத் தெரியும் கண்கள் என்று ஒரு தீவிரத்துவம் உள்ள முகம் ஆதலால் நாங்கள் (பொடிப் பசங்க) எல்லோரும் அவனைக் கண்டு பயப்படுவோம். அவந்தான் இப்படி தப்புத் தப்பாகச் சரணம் விளிப்பவன்.

வேலையில் கடந்த அரையாண்டில் என் பங்களிப்பு பற்றிய பின்னூட்டம் கொடுத்த மேனேஜரிடம் பலமுறை பதவி உயர்வு வேண்டுவது பற்றி நினைவூட்டினேன். இப்போது கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு போனேன்.
" உங்கள் பங்களிப்பு நம் நிறுவனத்திற்கு பெரும் உதவியாய் இருந்த்துள்ளது; ஆனால் இன்னும் அடுத்த நிலைக்கான அனுபவம் போதுமா என்று சந்தேகம்; உங்களுக்கு அது போதிய அளவில் வருவதற்காக மூன்று மாதங்கள் ஒரு புதிய காரியத்தைச் செய்ய ஒதுக்கி உள்ளேன். இதே கவனத்துடன் செய்யுங்கள் - நிறுவனத்தின் முக்கியமான பணியாளர்களில் நீங்களும் ஒருவர்" என்று அனுப்பிவிட்டார். (கருணாநிதி, "மந்திரி சபையில் இடமில்லையென்றால் என்ன? என் மனத்தில் இடம் அளித்துவிட்டேன்" என்கிற மாதிரி)

இந்தக் குட்டனை எனக்குச் சுத்தமாய் பிடிக்காமல் போனது ஒரு கோயில் பஜனையின் போது. அப்போதெல்லாம் பஜனை, காலட்சேபம், கச்சேரி என்றால் முதல் வரிசையில் ஆஜராகி, முடிந்தபின் சுண்டல் பஞ்சாமிருதம் வாங்கிச் சாப்பிட்டுத்தான் வீடு திரும்புவேன். பஜனையில் குட்டன் ஜால்ரா (சய்ன் சக், கிண்ணாரம் என்றெல்லாம் சொல்லலாம்) வாசித்து(?)க் கொண்டிருந்தான். எனக்கு அதன்மேல் ரொம்ப நாளாக ஒரு கண். வீட்டில் எனக்கு அது மாதிரி ஒன்று வாங்கிக் கொடுக்கும்படி அடம் பிடித்தேன் - செல்லுபடியாகவில்லை. அன்று என் அம்மாவிடம் அழுது சாட்டியம் பிடித்ததில், குட்டனிடம் சிபாரிசு செய்து ஜால்ரா என் கைக்கு வந்தது. சந்தோஷப் பட்டு, அதை வாங்கிக்கொண்டு, அருகில் இருக்கும் வீட்டுக்கு ஓடினேன். உட்கார்ந்து, ஆசையாய் ஒருதடவை க்ளிங் என்று தட்டினதுதான் தாமதம், முன்னால் குட்டன் வந்து நின்றான். "ஜால்ரா வேணும்னா கோவில்ல வந்து அடி, வீட்டுக்கெல்லாம் எடுத்துகிட்டு வரக்கூடாது" என்றான். நானோ வீட்டில் நான் மட்டும் அதை ஒலிப்பேன் என்றும், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாதென்றும் அழுதேன். குட்டன் என் கையிலிருந்து அதைப் பிடுங்க வந்தான்; வந்த கோபத்தில் ஜால்ராவை வாசலில் விட்டெறிந்தேன். குட்டன் நாக்கை மடக்கி என் பின்புறத்தில் ஒரு அடி கொடுத்து விட்டு, ஜால்ராவை பொறுக்கிக் கொண்டு போனான். அப்போது கறுவிக் கொண்டேன் - பெரியவன் ஆனதும் நிறைய ஜால்ராக்கள் வாங்கி வீட்டில் அடுக்குவது; குட்டனைத் திருப்பி அடிப்பது எனறு.(இரண்டும் நடக்கவில்லை)

பதவி உயர்வு இல்லையென்றாலும் புதிய வேலையில் நான் ரொம்ப முக்கியமான ஆளாக இருக்கிறாற்போல் தெரிந்தது. எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்கமுடிந்ததின் சுதந்திரமும் அதிகாரமும் ஒரு மப்பைக் கொடுத்தது. இந்தச் சமயத்தில் மேலாளர் மறுபடி கூப்பிட்டனுப்பினார், போய் நின்றேன். "நீ பொறுப்பேற்றிருக்கும் இந்தக் காரியம் முக்கியமானது; இதன் வெற்றி நிறுவனத்திற்கு இன்றியமையாதது. இந்தப் பொறுப்பை நீ தனியாக சமாளிப்பது உன் திறமையைக் காட்டுகிறது" எனறு நிறுத்தினார். நமக்கு ஒரே புளகாங்கிதம். "இருந்தாலும் இதன் கஷ்டத்தை மனத்தில் கொண்டு, ரவியையும் உன்னோடு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பது என் விருப்பம் - நீங்கள் வேலையை உங்கள் விருப்பப் படி பங்கீடு செய்து கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல் ரவிக்கும் இது ஒரு நல்ல அனுபவம் தரும் இல்லையா? உங்கள் அபிப்பிராயம் ?" என்றார். குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாய் ஆனதே என்று "சப்"பென்று போனது - கோபம் வந்தது. நான் சொன்னேன் " ஐயா, நானே உங்களிடம் சொல்லலாமென்றிருந்தேன்; சில சொந்தப் பிரச்சனைகளால் சரிவர வேலை செய்ய முடியவில்லை. இரண்டு வார விடுப்பில் போக வேண்டுமென்றிருந்தேன். நல்ல வேளையாக ரவி பற்றிச் சொன்னீர்கள். என்னால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது - பழைய வேலையே இப்போது செய்கிறேன். இதை ரவியே முழுவதுமாகப் பார்த்துக் கொள்ளட்டும்" என்று.

(யாரது, "அட முட்டாளே" என்று சொல்வது? தைரியமிருந்தால் என் முன்னே வாருங்கள்!)

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அப்படி எல்லாம் சொல்ல மாட்டோம். வேற ஒண்ணு தான் சொல்வோம்.

"ஆஃபீஸ்ல இதெல்லாம் சகஜமப்பா :-D"
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
KVR,

அப்படீன்றீங்க?
சரி :-)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க