முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்சார் தொல்லை

 ஒருவரின் பெயர்சார்என்ற விகுதியுடன் இருக்கமுடியுமா?


ஆனால்என் கணக்கு வாத்தியார் கணேசன் சார்என்றால் யாரும் கண்டுகொள்வதில்லை. இது பெரிதும் எரிச்சலூட்டக்கூடியது. ஒருவேளை சாருக்கு பதில் ஐயா என்றிருந்தால் இவ்வளவு எரிச்சல் இருக்காதோ? 


இந்த கணேசன் சார், கீதாமேடம் போன்றவை ஒரு வகையென்றால் இதை அடுத்த தளத்திற்கு உயர்த்துவதுடியூசன் சார்’, ‘சும்மிங் சார்போன்றவை.


 “என் பையனோட வயலின் சார் இருக்காரே, அவர் பெரிய மேதை!”

-- இதில்சார்விளி பெயரையல்லாமல் கற்பிக்கும் தொழிலைக்குறிக்கிறது


இதில் கலாச்சாரம் (உடை) சாரந்த மொழி உளவியல் இருப்பதாக நினைக்கிறேன். அதாவது, வேட்டியைக் கச்சையாகக் கட்டிக்கொண்டு தலையில் உருமாலுடன் இருப்பவர் குஸ்திவாத்தியார்’. நீளக்காற்சட்டையுடன்இன்பண்ணிக்கொண்டு கான்வாஸ் காலணி அணிந்திருப்பவர் கராத்தேசாரேயாவார்.




நகரங்களில் இந்த வழக்கம் எல்லாத்ததட்டு மக்களிடயையேயும்  வெகுவாகப் பரவிக்கிடக்கிறது


பேச்சுத்தமிழ் தனதாக்கிக்கொண்ட பல வேற்றுமொழிச் சொற்களுண்டு


கல்லூரியில் தமிழ்ப்பேச்சுப்போட்டியில் சில கட்டுப்பாடுகளுடன் ஒரு நிமிடம் பேசக் கேட்டிருந்தார்கள். அதிலொன்று, வேற்றுமொழிச்சொற்களைப் பயன்படுத்தாமல் பேசுவது.


கோவையிலேயே பிறந்து வளர்ந்த, பஞ்சாபிலிருந்து பெயர்ந்த குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த நண்பன் பேசினான்:


 கண் - இதை வைத்துக்கொண்டு சைட் அடிக்கலாம்


உடனே அவனைப் போட்டியிலிருந்து விலக்குவதாக அறிவித்தார்கள். அவனுக்கும் தான் என்ன பிழை செயதோமென்றே புரியவில்லை. சைட் என்பது ஆங்கிலச் சொல் என்பதைச் சுட்டவும், அவன் வெகுண்டு, “நான் சொன்னது தமிழ் சைட்என்று சண்டைக்கு நின்றான் அப்பாவியாக.


தமிழ் சார் போலல்லாது தமிழ் சைட் எனபது பதின்வயதினரே மிகுதியும் (அதிலும் பழைய பத்தாண்டொன்றில்) பயன்படுதுவதாயிருந்தது. அவர்கள் வளர்ந்தவுடன் அதைவிட்டும் விட்டார்கள்; அந்தப் பயன்பாடு ஏறக்குறைய அற்றும்போய்விட்டது. ஆனால் இப்போது சார் பயன்பாடு தமிழைப் பீடித்துள்ளது


இயல்பான தாய்மொழியறிவு குன்றியும், இந்தித் திணிப்பு மீண்டும் தலைதூக்கிக்கொண்டும் இருக்கிற இந்தக்காலத்தில் தமிழை மறக்காமல் பேசுவதே பெரிது என்றாகிவிட்டது. இதிலேசாரைவிட்டொழித்து ஐயா, வாத்தியார் என்பனவற்றைப் பயன்படுத்தச் சொல்லிக்கேட்பதுராவுத்தரே கொக்காப் பறக்கிறார், குதிரைக்குக் கோதுமை ரொட்டி கேட்கிறதோ?’ என்பதுபோலத்தான் இருக்கிறது.


அப்படிச்சொன்னாலும்நான் சொன்னது தமிழ் சார்என்று நம்மிடம் மல்லுக்கட்டினாலும் வியப்பதற்கில்லை.


இருந்தாலும் கேட்பதற்குச் சகியாமல் நாராசமாய் இருப்பதால் சொல்லிவைக்கிறேன்; நண்பர்களுக்கும் அறிவுரைக்கிறேன். 


இது மொழிசார்த் தொல்லையே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

நெறிப்படுத்தும் நட்பே,

என்னோடு நட்புப் பாராட்டுமுன் தெரிந்து கொள் - அல்ப்பத்தனம், பொறாமை, முன்கோபம், வெளி வேஷம் எல்லாங்கலந்த கலவை நான். என்னை ஒருநேரம் கடையில் நீ வாங்க நேர்ந்தால், இவைகளுக்கும் விலைகொடுத்து வாங்க வேண்டும் - தனியாய்க் கிடைக்கமாட்டேன். நான் சின்ன அறிவும் பெரிய ஆசையும் படைத்த, பல தவறுகளை இழைக்கிற, அவற்றை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கிற சாதாரணன். உந்தன் நட்புப் போர்வைக்குள் நான் வந்த பிறகு என்னுடன் வந்த என் சிறுமைகளை என் முகத்தில் எறிந்து காயப்படுத்தாதே. என் சிறுமைகள் அறிந்தும் நீ நட்பாய் இருப்பதிலேயே அச்சிறுமைகளைக் களையும் ஆசையும் உறுதியும் எனக்கு வாய்க்கிறது. எல்லாச் சிறுமைகளும் போக எனக்குள் எஞ்சி நிற்கும் மனிதத்தை நீ கண்டுகொண்டதன் அத்தாட்சி உன் நட்பு - இதுவே அச்சிறுமைகளைக் களைந்து அங்கே மனிதத்தை நிரப்புவதற்கான எனது பெரிய நம்பிக்கை. நான் இங்கே வருமுன்னரே மனத்தில் பலப்பல குப்பைகளை நிரப்பி வைத்திருக்கிறேன். இவைகளை ஒருநாளில் களைய முடியாது. மனத்துக்கண் நான் மாசிலன் ஆக ரொம்பக்காலம் பிடிக்கும். ஆனால் அதுவரை நீ என்மேல் நம்பிக்கையுடன் இரு, நெறிப்படுத்தும் நட்பே!

என் தமிழ் எழுத்து மேம்பட...

"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார் பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது. என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது. சின்...