முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்சார் தொல்லை

 ஒருவரின் பெயர்சார்என்ற விகுதியுடன் இருக்கமுடியுமா?


ஆனால்என் கணக்கு வாத்தியார் கணேசன் சார்என்றால் யாரும் கண்டுகொள்வதில்லை. இது பெரிதும் எரிச்சலூட்டக்கூடியது. ஒருவேளை சாருக்கு பதில் ஐயா என்றிருந்தால் இவ்வளவு எரிச்சல் இருக்காதோ? 


இந்த கணேசன் சார், கீதாமேடம் போன்றவை ஒரு வகையென்றால் இதை அடுத்த தளத்திற்கு உயர்த்துவதுடியூசன் சார்’, ‘சும்மிங் சார்போன்றவை.


 “என் பையனோட வயலின் சார் இருக்காரே, அவர் பெரிய மேதை!”

-- இதில்சார்விளி பெயரையல்லாமல் கற்பிக்கும் தொழிலைக்குறிக்கிறது


இதில் கலாச்சாரம் (உடை) சாரந்த மொழி உளவியல் இருப்பதாக நினைக்கிறேன். அதாவது, வேட்டியைக் கச்சையாகக் கட்டிக்கொண்டு தலையில் உருமாலுடன் இருப்பவர் குஸ்திவாத்தியார்’. நீளக்காற்சட்டையுடன்இன்பண்ணிக்கொண்டு கான்வாஸ் காலணி அணிந்திருப்பவர் கராத்தேசாரேயாவார்.




நகரங்களில் இந்த வழக்கம் எல்லாத்ததட்டு மக்களிடயையேயும்  வெகுவாகப் பரவிக்கிடக்கிறது


பேச்சுத்தமிழ் தனதாக்கிக்கொண்ட பல வேற்றுமொழிச் சொற்களுண்டு


கல்லூரியில் தமிழ்ப்பேச்சுப்போட்டியில் சில கட்டுப்பாடுகளுடன் ஒரு நிமிடம் பேசக் கேட்டிருந்தார்கள். அதிலொன்று, வேற்றுமொழிச்சொற்களைப் பயன்படுத்தாமல் பேசுவது.


கோவையிலேயே பிறந்து வளர்ந்த, பஞ்சாபிலிருந்து பெயர்ந்த குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த நண்பன் பேசினான்:


 கண் - இதை வைத்துக்கொண்டு சைட் அடிக்கலாம்


உடனே அவனைப் போட்டியிலிருந்து விலக்குவதாக அறிவித்தார்கள். அவனுக்கும் தான் என்ன பிழை செயதோமென்றே புரியவில்லை. சைட் என்பது ஆங்கிலச் சொல் என்பதைச் சுட்டவும், அவன் வெகுண்டு, “நான் சொன்னது தமிழ் சைட்என்று சண்டைக்கு நின்றான் அப்பாவியாக.


தமிழ் சார் போலல்லாது தமிழ் சைட் எனபது பதின்வயதினரே மிகுதியும் (அதிலும் பழைய பத்தாண்டொன்றில்) பயன்படுதுவதாயிருந்தது. அவர்கள் வளர்ந்தவுடன் அதைவிட்டும் விட்டார்கள்; அந்தப் பயன்பாடு ஏறக்குறைய அற்றும்போய்விட்டது. ஆனால் இப்போது சார் பயன்பாடு தமிழைப் பீடித்துள்ளது


இயல்பான தாய்மொழியறிவு குன்றியும், இந்தித் திணிப்பு மீண்டும் தலைதூக்கிக்கொண்டும் இருக்கிற இந்தக்காலத்தில் தமிழை மறக்காமல் பேசுவதே பெரிது என்றாகிவிட்டது. இதிலேசாரைவிட்டொழித்து ஐயா, வாத்தியார் என்பனவற்றைப் பயன்படுத்தச் சொல்லிக்கேட்பதுராவுத்தரே கொக்காப் பறக்கிறார், குதிரைக்குக் கோதுமை ரொட்டி கேட்கிறதோ?’ என்பதுபோலத்தான் இருக்கிறது.


அப்படிச்சொன்னாலும்நான் சொன்னது தமிழ் சார்என்று நம்மிடம் மல்லுக்கட்டினாலும் வியப்பதற்கில்லை.


இருந்தாலும் கேட்பதற்குச் சகியாமல் நாராசமாய் இருப்பதால் சொல்லிவைக்கிறேன்; நண்பர்களுக்கும் அறிவுரைக்கிறேன். 


இது மொழிசார்த் தொல்லையே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

எதையும் உடுக்காமல்/ பகல் வெளிச்சத்தை ஊடுருவி/அவள் இறங்குகிறாள்

சித்திரக்கலை குறித்த முறையான அறிமுகம் எனக்கில்லை. சில ஓவியங்களைப் புரிந்துகொள்ள அவற்றைப் பற்றிய கவிதைகள் எனக்கு நுழைவாயிலாக அமைந்திருக்கின்றன. மேற்கத்திய (சித்திரக்) கலையில், கருத்தியல் ரீதியாகப் பல பாய்சல்கள் நிகழ்ந்துள்ளன என்று புரிந்துகொண்டேன். மற்ற கலைவடிவங்களிலும், குறிப்பாகக் கவிதையில், இவற்றுக்கு இணையான மொழி மற்றும் வடிவப் பாய்ச்சல்கள் நிகழ்ந்ததாக என் சொற்ப வாசிப்பின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆரம்ப காலத்து இமேஜிஸ்டு கவிதைகள் சிலவற்றைப் படித்தபோது பிரமிப்பாக இருந்தது. அதிலும் எஸ்ரா பவுண்டின் In a Station of the Metro இரண்டே வரிகளில் ஒரு அசையும் காணொளியையே காட்டுவது மொழியின் இத்தகைய பாய்ச்சலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்னும் சில பிரபலமான ஓவியங்களை ஒட்டி (அவற்றைப் பற்றி) எழுதப்பட்ட கவிதைகளையும் படித்தேன். காரவஜியோவின் The Calling of Saint Matthew என்ற ஓவியத்தை James Lasdun எழுதிய The Calling of the Apostle Matthew  கவிதை   மூலம் தெரிந்துகொண்டேன். கவிதையின் பொருள் மாத்தியூவின் ஆன்மிகப் பயணத்தைப் பற்றியதா க இருந்தாலும், அது தொடங்குவது இந்த ஓவியத்தில் உறைந்திருக்கும் ‘ஆட்கொள்...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...