முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்சார் தொல்லை

 ஒருவரின் பெயர்சார்என்ற விகுதியுடன் இருக்கமுடியுமா?


ஆனால்என் கணக்கு வாத்தியார் கணேசன் சார்என்றால் யாரும் கண்டுகொள்வதில்லை. இது பெரிதும் எரிச்சலூட்டக்கூடியது. ஒருவேளை சாருக்கு பதில் ஐயா என்றிருந்தால் இவ்வளவு எரிச்சல் இருக்காதோ? 


இந்த கணேசன் சார், கீதாமேடம் போன்றவை ஒரு வகையென்றால் இதை அடுத்த தளத்திற்கு உயர்த்துவதுடியூசன் சார்’, ‘சும்மிங் சார்போன்றவை.


 “என் பையனோட வயலின் சார் இருக்காரே, அவர் பெரிய மேதை!”

-- இதில்சார்விளி பெயரையல்லாமல் கற்பிக்கும் தொழிலைக்குறிக்கிறது


இதில் கலாச்சாரம் (உடை) சாரந்த மொழி உளவியல் இருப்பதாக நினைக்கிறேன். அதாவது, வேட்டியைக் கச்சையாகக் கட்டிக்கொண்டு தலையில் உருமாலுடன் இருப்பவர் குஸ்திவாத்தியார்’. நீளக்காற்சட்டையுடன்இன்பண்ணிக்கொண்டு கான்வாஸ் காலணி அணிந்திருப்பவர் கராத்தேசாரேயாவார்.




நகரங்களில் இந்த வழக்கம் எல்லாத்ததட்டு மக்களிடயையேயும்  வெகுவாகப் பரவிக்கிடக்கிறது


பேச்சுத்தமிழ் தனதாக்கிக்கொண்ட பல வேற்றுமொழிச் சொற்களுண்டு


கல்லூரியில் தமிழ்ப்பேச்சுப்போட்டியில் சில கட்டுப்பாடுகளுடன் ஒரு நிமிடம் பேசக் கேட்டிருந்தார்கள். அதிலொன்று, வேற்றுமொழிச்சொற்களைப் பயன்படுத்தாமல் பேசுவது.


கோவையிலேயே பிறந்து வளர்ந்த, பஞ்சாபிலிருந்து பெயர்ந்த குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த நண்பன் பேசினான்:


 கண் - இதை வைத்துக்கொண்டு சைட் அடிக்கலாம்


உடனே அவனைப் போட்டியிலிருந்து விலக்குவதாக அறிவித்தார்கள். அவனுக்கும் தான் என்ன பிழை செயதோமென்றே புரியவில்லை. சைட் என்பது ஆங்கிலச் சொல் என்பதைச் சுட்டவும், அவன் வெகுண்டு, “நான் சொன்னது தமிழ் சைட்என்று சண்டைக்கு நின்றான் அப்பாவியாக.


தமிழ் சார் போலல்லாது தமிழ் சைட் எனபது பதின்வயதினரே மிகுதியும் (அதிலும் பழைய பத்தாண்டொன்றில்) பயன்படுதுவதாயிருந்தது. அவர்கள் வளர்ந்தவுடன் அதைவிட்டும் விட்டார்கள்; அந்தப் பயன்பாடு ஏறக்குறைய அற்றும்போய்விட்டது. ஆனால் இப்போது சார் பயன்பாடு தமிழைப் பீடித்துள்ளது


இயல்பான தாய்மொழியறிவு குன்றியும், இந்தித் திணிப்பு மீண்டும் தலைதூக்கிக்கொண்டும் இருக்கிற இந்தக்காலத்தில் தமிழை மறக்காமல் பேசுவதே பெரிது என்றாகிவிட்டது. இதிலேசாரைவிட்டொழித்து ஐயா, வாத்தியார் என்பனவற்றைப் பயன்படுத்தச் சொல்லிக்கேட்பதுராவுத்தரே கொக்காப் பறக்கிறார், குதிரைக்குக் கோதுமை ரொட்டி கேட்கிறதோ?’ என்பதுபோலத்தான் இருக்கிறது.


அப்படிச்சொன்னாலும்நான் சொன்னது தமிழ் சார்என்று நம்மிடம் மல்லுக்கட்டினாலும் வியப்பதற்கில்லை.


இருந்தாலும் கேட்பதற்குச் சகியாமல் நாராசமாய் இருப்பதால் சொல்லிவைக்கிறேன்; நண்பர்களுக்கும் அறிவுரைக்கிறேன். 


இது மொழிசார்த் தொல்லையே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க