தமிழ் எழுதுவதில் இயன்றவரை கிரந்தம் தவிர்க்கலாம் என்று முடிவெடுத்திருந்தேன். இது தமிழ் வெறியினாலோ பிறமொழிக் காழ்ப்பினாலோ உந்தப்பட்டதல்ல. தற்போது புழக்கத்தில் இருக்கும் தமிழ் மொழி தமிழல்லாத மொழிகளின் பல சொற்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இது பல்லாண்டுகளாக இயல்பாக, பையப்பைய நடந்தது - யாரும் திட்டமிட்டுச் செய்யவில்லை என்பது தெரிந்ததே. இம்மொழியின் தொன்மையையோ, செம்மைத் தன்மையையோ, பிற பெருமைகளையோ முதன்மைப்படுத்தாமல், ஒரு தனித்தன்மை வாய்ந்த, (பிறமொழிகளைப்போலவே) நம் தாய்மொழி என்கிற அளவில், நாம் மறந்துவிட்ட தமிழ்ச்சொற்களை ஞாபகப் படுத்திக்கொள்ள வேண்டும், அவற்றை நம் புறக்கணிப்பினின்றும் மீட்கவேண்டும் என்பதே என் குறிக்கோள்.
கிரந்தத்தை ஒழித்தலே நம் கடன் என்று எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்த முனைவதில் எனக்குச் சில மனத்தடைகள் உண்டு. அவற்றில் முதன்மையானது பெயர்களைத் தமிழ்ப்படுத்துவது. நாம் நம் பெயர்களைப் பெருமையோடு தாங்குபவர்கள்; தமிழ்ப் பெயர்களையும் பிற பெயர்களையும் பெயருக்குச் சொந்தக்காரர் எழுதுவது போலேயே எழுதவேண்டும் - அது கிரந்தம் கலந்ததானாலும். எழுத்துப்பிழைகளையும் ( இருப்பதாக நாம் கருதினாலும்) இலக்கணமீறல்களையும் நாம் பொருட்படுத்தலாகாது. ரவியை இரவி என்று விளிக்க இரவி தன் பெயரை அவ்வாறு அறிவித்திருக்க வேண்டும். இதை மீறி பெயர்களில் கிரந்தம் தவிர்ப்பதென்பது அப்பெயர்களைச் சிதைப்பதும் பெயர் தாங்கியவர்களை அவமதிப்பதும் ஆகும். மொத்தத்தில் பெயர்களுக்கு மொழி கிடையாது என்பது என் துணிபு. மகேஷை மகேசு என்றும், ராஜேஷை இராசேசு என்றும் ஜெயமொகனை செயமோகன் என்றும் விளித்ததற்கு இங்கே மன்னிப்புக் கோருகிறேன்.
அடுத்ததாக, பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போதும் கிரந்தக் கலப்பு இருக்கலாம் என்பது என் நிலைப்பாடு. இம்மாதிரி (கிரந்த) எழுத்துச் சேர்க்கைகள் பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது ஏற்படும் ஒலிப் பற்றாக்குறையைப் போக்கவே என்பதை நினைவில் கொள்ளலாம். ( தமிழரல்லாதோர் சிலர் இவ்வொலிப் பற்றாக்குறையை தமிழின் குறைபாடாகச் சொல்லுவர். தமிழிலேயே பேச, எழுத, தமிழெழுத்துகள் போதுமானவை). இதைச்சொல்லும்போது சிங்கப்பூர் தெம்பனீஸ் கிழக்குச் சமூக மன்றத்தில் "கேப்பி தீபாவளி" என்று வைத்திருந்த தட்டி நினைவுக்கு வருகிறது. பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தும்போது அதற்கு இணையான தமிழ்சசொல் இல்லாத / தெரியாத நிலையில் மட்டுமே உகந்தது என்று நம்புகிறேன். இப்படியொரு நிலை வாய்க்கும்பொழுது நல்ல கலைச்சொல்லகராதியை நாடலாம்.
மற்றபடி கிரந்தம் கலக்காத பிறமொழிச் சொற்கள் தமிழிலே ஏராளமாகப் புழங்குகின்றன. அவற்றை ஒதுக்கி அதற்கான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது (கண்மூடித்தனமான) கிரந்த எதிர்ப்பைக் காட்டிலும் தமிழுக்கு வளம் சேர்க்கும் எனபதும் எனக்கு ஏற்பட்ட தெளிவு.
லாகவம், இலகுவாக, மரணம், பூமி, நதி, ஆகாயம், சிங்கம், சாவதானம், அனாவசியம், அவசியம், அனாயாசம், ஆயாசம், சந்தேகம், பலம், நட்சத்திரம், ராசி, நாடகம், அகம், அவையம், நீதி/அநீதி, அநேகம், நகல், அசல், யதார்த்தம், வீதம், வீரம், மாதம், மதம், வருடம், இச்சை, அனிச்சை, தன்னிச்சை, வாக்கு, வாதம், அர்த்தம், சாமர்தியம், சமர்த்தம், சாவகாசம், சகவாசம்
என்ற சொற்கள் உடன் நினைவுக்கு வருவன. இப்பணியில் இணையத்தில் சில குழுக்கள் இணைந்து செயற்படுகின்றன என்றறிவேன். அவர்களுக்கு என் அன்பும் பாராட்டுகளும். முடிந்தவரையில் அவர்களுடன் இணைந்து என்னாலானதைச் செய்யவும் ஆசை.
கிரந்தக் கலப்பு மற்றும் அதன் புறக்கணிப்பு குறித்து இப்படியொரு தெளிவை அடைந்திருக்கிறேன்.
கிரந்தத்தை ஒழித்தலே நம் கடன் என்று எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்த முனைவதில் எனக்குச் சில மனத்தடைகள் உண்டு. அவற்றில் முதன்மையானது பெயர்களைத் தமிழ்ப்படுத்துவது. நாம் நம் பெயர்களைப் பெருமையோடு தாங்குபவர்கள்; தமிழ்ப் பெயர்களையும் பிற பெயர்களையும் பெயருக்குச் சொந்தக்காரர் எழுதுவது போலேயே எழுதவேண்டும் - அது கிரந்தம் கலந்ததானாலும். எழுத்துப்பிழைகளையும் ( இருப்பதாக நாம் கருதினாலும்) இலக்கணமீறல்களையும் நாம் பொருட்படுத்தலாகாது. ரவியை இரவி என்று விளிக்க இரவி தன் பெயரை அவ்வாறு அறிவித்திருக்க வேண்டும். இதை மீறி பெயர்களில் கிரந்தம் தவிர்ப்பதென்பது அப்பெயர்களைச் சிதைப்பதும் பெயர் தாங்கியவர்களை அவமதிப்பதும் ஆகும். மொத்தத்தில் பெயர்களுக்கு மொழி கிடையாது என்பது என் துணிபு. மகேஷை மகேசு என்றும், ராஜேஷை இராசேசு என்றும் ஜெயமொகனை செயமோகன் என்றும் விளித்ததற்கு இங்கே மன்னிப்புக் கோருகிறேன்.
அடுத்ததாக, பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போதும் கிரந்தக் கலப்பு இருக்கலாம் என்பது என் நிலைப்பாடு. இம்மாதிரி (கிரந்த) எழுத்துச் சேர்க்கைகள் பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது ஏற்படும் ஒலிப் பற்றாக்குறையைப் போக்கவே என்பதை நினைவில் கொள்ளலாம். ( தமிழரல்லாதோர் சிலர் இவ்வொலிப் பற்றாக்குறையை தமிழின் குறைபாடாகச் சொல்லுவர். தமிழிலேயே பேச, எழுத, தமிழெழுத்துகள் போதுமானவை). இதைச்சொல்லும்போது சிங்கப்பூர் தெம்பனீஸ் கிழக்குச் சமூக மன்றத்தில் "கேப்பி தீபாவளி" என்று வைத்திருந்த தட்டி நினைவுக்கு வருகிறது. பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தும்போது அதற்கு இணையான தமிழ்சசொல் இல்லாத / தெரியாத நிலையில் மட்டுமே உகந்தது என்று நம்புகிறேன். இப்படியொரு நிலை வாய்க்கும்பொழுது நல்ல கலைச்சொல்லகராதியை நாடலாம்.
மற்றபடி கிரந்தம் கலக்காத பிறமொழிச் சொற்கள் தமிழிலே ஏராளமாகப் புழங்குகின்றன. அவற்றை ஒதுக்கி அதற்கான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது (கண்மூடித்தனமான) கிரந்த எதிர்ப்பைக் காட்டிலும் தமிழுக்கு வளம் சேர்க்கும் எனபதும் எனக்கு ஏற்பட்ட தெளிவு.
லாகவம், இலகுவாக, மரணம், பூமி, நதி, ஆகாயம், சிங்கம், சாவதானம், அனாவசியம், அவசியம், அனாயாசம், ஆயாசம், சந்தேகம், பலம், நட்சத்திரம், ராசி, நாடகம், அகம், அவையம், நீதி/அநீதி, அநேகம், நகல், அசல், யதார்த்தம், வீதம், வீரம், மாதம், மதம், வருடம், இச்சை, அனிச்சை, தன்னிச்சை, வாக்கு, வாதம், அர்த்தம், சாமர்தியம், சமர்த்தம், சாவகாசம், சகவாசம்
என்ற சொற்கள் உடன் நினைவுக்கு வருவன. இப்பணியில் இணையத்தில் சில குழுக்கள் இணைந்து செயற்படுகின்றன என்றறிவேன். அவர்களுக்கு என் அன்பும் பாராட்டுகளும். முடிந்தவரையில் அவர்களுடன் இணைந்து என்னாலானதைச் செய்யவும் ஆசை.
கிரந்தக் கலப்பு மற்றும் அதன் புறக்கணிப்பு குறித்து இப்படியொரு தெளிவை அடைந்திருக்கிறேன்.
கருத்துகள்