முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழில் கிரந்தம் தவிர்ப்பது பற்றி...

தமிழ் எழுதுவதில் இயன்றவரை கிரந்தம் தவிர்க்கலாம் என்று முடிவெடுத்திருந்தேன். இது தமிழ் வெறியினாலோ பிறமொழிக் காழ்ப்பினாலோ உந்தப்பட்டதல்ல. தற்போது புழக்கத்தில் இருக்கும் தமிழ் மொழி தமிழல்லாத மொழிகளின் பல சொற்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இது பல்லாண்டுகளாக இயல்பாக, பையப்பைய நடந்தது - யாரும் திட்டமிட்டுச் செய்யவில்லை என்பது தெரிந்ததே. இம்மொழியின் தொன்மையையோ, செம்மைத் தன்மையையோ, பிற பெருமைகளையோ முதன்மைப்படுத்தாமல், ஒரு தனித்தன்மை வாய்ந்த, (பிறமொழிகளைப்போலவே) நம் தாய்மொழி என்கிற அளவில், நாம் மறந்துவிட்ட தமிழ்ச்சொற்களை ஞாபகப் படுத்திக்கொள்ள வேண்டும், அவற்றை நம் புறக்கணிப்பினின்றும் மீட்கவேண்டும் என்பதே என் குறிக்கோள்.

கிரந்தத்தை ஒழித்தலே நம் கடன் என்று எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்த முனைவதில் எனக்குச் சில மனத்தடைகள் உண்டு. அவற்றில் முதன்மையானது பெயர்களைத் தமிழ்ப்படுத்துவது. நாம் நம் பெயர்களைப் பெருமையோடு தாங்குபவர்கள்; தமிழ்ப் பெயர்களையும் பிற பெயர்களையும் பெயருக்குச் சொந்தக்காரர் எழுதுவது போலேயே எழுதவேண்டும் - அது கிரந்தம் கலந்ததானாலும்.  எழுத்துப்பிழைகளையும் ( இருப்பதாக நாம் கருதினாலும்) இலக்கணமீறல்களையும் நாம் பொருட்படுத்தலாகாது. ரவியை இரவி என்று விளிக்க இரவி தன் பெயரை அவ்வாறு அறிவித்திருக்க வேண்டும். இதை மீறி பெயர்களில் கிரந்தம் தவிர்ப்பதென்பது அப்பெயர்களைச் சிதைப்பதும் பெயர் தாங்கியவர்களை அவமதிப்பதும் ஆகும். மொத்தத்தில் பெயர்களுக்கு மொழி கிடையாது என்பது என் துணிபு. மகேஷை மகேசு என்றும், ராஜேஷை இராசேசு என்றும் ஜெயமொகனை செயமோகன் என்றும் விளித்ததற்கு இங்கே மன்னிப்புக் கோருகிறேன்.

அடுத்ததாக, பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போதும் கிரந்தக் கலப்பு இருக்கலாம் என்பது என் நிலைப்பாடு. இம்மாதிரி (கிரந்த) எழுத்துச் சேர்க்கைகள் பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது ஏற்படும் ஒலிப் பற்றாக்குறையைப் போக்கவே என்பதை நினைவில் கொள்ளலாம். ( தமிழரல்லாதோர் சிலர் இவ்வொலிப் பற்றாக்குறையை தமிழின் குறைபாடாகச் சொல்லுவர். தமிழிலேயே பேச, எழுத, தமிழெழுத்துகள் போதுமானவை). இதைச்சொல்லும்போது சிங்கப்பூர் தெம்பனீஸ் கிழக்குச் சமூக மன்றத்தில் "கேப்பி தீபாவளி" என்று வைத்திருந்த தட்டி நினைவுக்கு வருகிறது. பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தும்போது அதற்கு இணையான தமிழ்சசொல் இல்லாத / தெரியாத நிலையில் மட்டுமே உகந்தது என்று நம்புகிறேன். இப்படியொரு நிலை வாய்க்கும்பொழுது  நல்ல கலைச்சொல்லகராதியை நாடலாம்.

மற்றபடி கிரந்தம் கலக்காத பிறமொழிச் சொற்கள் தமிழிலே ஏராளமாகப் புழங்குகின்றன. அவற்றை ஒதுக்கி அதற்கான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது (கண்மூடித்தனமான) கிரந்த எதிர்ப்பைக் காட்டிலும் தமிழுக்கு வளம் சேர்க்கும் எனபதும் எனக்கு ஏற்பட்ட தெளிவு.

லாகவம், இலகுவாக, மரணம், பூமி, நதி, ஆகாயம், சிங்கம், சாவதானம், அனாவசியம், அவசியம், அனாயாசம், ஆயாசம், சந்தேகம், பலம், நட்சத்திரம், ராசி, நாடகம், அகம், அவையம், நீதி/அநீதி, அநேகம், நகல், அசல், யதார்த்தம், வீதம், வீரம், மாதம், மதம், வருடம், இச்சை, அனிச்சை, தன்னிச்சை, வாக்கு, வாதம், அர்த்தம், சாமர்தியம், சமர்த்தம், சாவகாசம், சகவாசம்

என்ற சொற்கள் உடன் நினைவுக்கு வருவன. இப்பணியில் இணையத்தில் சில குழுக்கள் இணைந்து செயற்படுகின்றன என்றறிவேன். அவர்களுக்கு என் அன்பும் பாராட்டுகளும். முடிந்தவரையில் அவர்களுடன் இணைந்து என்னாலானதைச் செய்யவும் ஆசை.

கிரந்தக் கலப்பு மற்றும் அதன் புறக்கணிப்பு குறித்து இப்படியொரு தெளிவை அடைந்திருக்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் கவிதை