என்னில் கள்ளம் குடிகொண்ட பொழுது எதுவெனக் கூறமுடியவில்லை. எனக்கு நடிப்புக் கற்றுக் கொடுத்தது அதுதான். உழலும் சூழலுக்கேற்ப நாளொரு வேடமும், பொழுதொரு ஒப்பனையுமாக நான் வேண்டும்படி பிறருக்கு என்னைக் காட்டுவதில் தேர்ந்துவிட்டேன். உடலை மறைக்கவே ஆடைகள் என்ற கருத்தாக்கம், என் அம்மணத்தைக் குறித்து நானே வெட்கும் அளவிற்கு என்னில் உருவேற்றப் பட்டு விட்டதைப் போலவே, குழந்தையாய், உண்மையாய் நான் இருந்தநிலை போய், என் உண்மையான தன்மை பற்றி நான் வெட்கும் அளவிற்கு உடல் மறைக்கும் ஆடைகளாய் என்னை மறைக்கும் இந்த ஒப்பனைகள்.
சில அரிதான பொழுதுகளில் உன் முன்னால் இந்த ஒப்பனைகளை முற்றிலுமாகக் கழற்றி விடுகிறேன். அந்நேரங்களில் கள்ளம் உடனே என்னை மீட்கிறது. தன்வயமிழப்பதை என் பலவீனமாகவும், அதே சமயம் நிதானமிழக்காததை உன் பலமாகவும் அது சித்தரிக்கிறது. மேலும் உன் முன்னால் என்னை இழந்தது மூலம் என்னை நானே வலிந்து முட்டாளாக்கிக் கொண்டது போலவும், நான் அம்மணமானது போலவும் அது காட்டுகிறது. இது என் தன்மானப் பிரச்சனை ஆகிறது. ஒப்பனைகளை கழற்றிய நான் அவசரமாக அவற்றை மீண்டும் அணியத் துவங்குகிறேன். நீ என்னை ஏமாற்றிவிட்டதாக உணர்கிறேன். உன்மேல் வீண்பழி சுமத்துகிறேன்.
உனக்காக நான் உருவாக்கிய ( நிதானமிழக்காத நான், ஒப்பனைகள் மூலம் நான் காட்டிக் கொள்ள விரும்புகிற இன்ன பிறவுமான நான் என்ற) என் பிம்பங்களும், நான் உன்னைக் குறித்து எழுப்பியுள்ள (என்னை ஆராதிக்கும் நீ, என்னை உயரத்திலேயே வைத்துப் பார்க்கும் நீ, என் வார்த்தைகளுக்கு மயங்கும் நீ, என்னால் எப்போதும் வசீகரிக்கப்பட்ட நீ, என்ற) பிம்பங்களும் ஒருங்கே உடைந்து சிதறும் தருணங்களில் நான் வேறெப்படித் தான் நடந்துகொள்வது?
***
ஒரு வகையில் இந்த பிம்பச் சேதங்கள் எனக்கு நன்மையே பயக்கின்றன. நான் நானாவதற்கு, என் உண்மையான தன்மையை எனக்கே இயல்பாக்கிக் கொள்ளுவதற்கு, பாசாங்கோ, தற்பெருமையோ, வெட்கமோ இல்லாமலிருப்பதற்கு இவை வழிவகுக்கின்றன.
நன்று.
பிம்பங்களும், பிம்பச்சேதங்களும் நல்லன. அவை வாழ்க.
சில அரிதான பொழுதுகளில் உன் முன்னால் இந்த ஒப்பனைகளை முற்றிலுமாகக் கழற்றி விடுகிறேன். அந்நேரங்களில் கள்ளம் உடனே என்னை மீட்கிறது. தன்வயமிழப்பதை என் பலவீனமாகவும், அதே சமயம் நிதானமிழக்காததை உன் பலமாகவும் அது சித்தரிக்கிறது. மேலும் உன் முன்னால் என்னை இழந்தது மூலம் என்னை நானே வலிந்து முட்டாளாக்கிக் கொண்டது போலவும், நான் அம்மணமானது போலவும் அது காட்டுகிறது. இது என் தன்மானப் பிரச்சனை ஆகிறது. ஒப்பனைகளை கழற்றிய நான் அவசரமாக அவற்றை மீண்டும் அணியத் துவங்குகிறேன். நீ என்னை ஏமாற்றிவிட்டதாக உணர்கிறேன். உன்மேல் வீண்பழி சுமத்துகிறேன்.
உனக்காக நான் உருவாக்கிய ( நிதானமிழக்காத நான், ஒப்பனைகள் மூலம் நான் காட்டிக் கொள்ள விரும்புகிற இன்ன பிறவுமான நான் என்ற) என் பிம்பங்களும், நான் உன்னைக் குறித்து எழுப்பியுள்ள (என்னை ஆராதிக்கும் நீ, என்னை உயரத்திலேயே வைத்துப் பார்க்கும் நீ, என் வார்த்தைகளுக்கு மயங்கும் நீ, என்னால் எப்போதும் வசீகரிக்கப்பட்ட நீ, என்ற) பிம்பங்களும் ஒருங்கே உடைந்து சிதறும் தருணங்களில் நான் வேறெப்படித் தான் நடந்துகொள்வது?
***
ஒரு வகையில் இந்த பிம்பச் சேதங்கள் எனக்கு நன்மையே பயக்கின்றன. நான் நானாவதற்கு, என் உண்மையான தன்மையை எனக்கே இயல்பாக்கிக் கொள்ளுவதற்கு, பாசாங்கோ, தற்பெருமையோ, வெட்கமோ இல்லாமலிருப்பதற்கு இவை வழிவகுக்கின்றன.
நன்று.
பிம்பங்களும், பிம்பச்சேதங்களும் நல்லன. அவை வாழ்க.
கருத்துகள்
//
Very true!
//
பிம்பங்களும், பிம்பச்சேதங்களும் நல்லன. அவை வாழ்க.
//
AMEN!