முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒப்பனை கலைத்த ஒரு பொழுதில்

என்னில் கள்ளம் குடிகொண்ட பொழுது எதுவெனக் கூறமுடியவில்லை. எனக்கு நடிப்புக் கற்றுக் கொடுத்தது அதுதான். உழலும் சூழலுக்கேற்ப நாளொரு வேடமும், பொழுதொரு ஒப்பனையுமாக நான் வேண்டும்படி பிறருக்கு என்னைக் காட்டுவதில் தேர்ந்துவிட்டேன். உடலை மறைக்கவே ஆடைகள் என்ற கருத்தாக்கம், என் அம்மணத்தைக் குறித்து நானே வெட்கும் அளவிற்கு என்னில் உருவேற்றப் பட்டு விட்டதைப் போலவே, குழந்தையாய், உண்மையாய் நான் இருந்தநிலை போய், என் உண்மையான தன்மை பற்றி நான் வெட்கும் அளவிற்கு உடல் மறைக்கும் ஆடைகளாய் என்னை மறைக்கும் இந்த ஒப்பனைகள்.

சில அரிதான பொழுதுகளில் உன் முன்னால் இந்த ஒப்பனைகளை முற்றிலுமாகக் கழற்றி விடுகிறேன். அந்நேரங்களில் கள்ளம் உடனே என்னை மீட்கிறது. தன்வயமிழப்பதை என் பலவீனமாகவும், அதே சமயம் நிதானமிழக்காததை உன் பலமாகவும் அது சித்தரிக்கிறது. மேலும் உன் முன்னால் என்னை இழந்தது மூலம் என்னை நானே வலிந்து முட்டாளாக்கிக் கொண்டது போலவும், நான் அம்மணமானது போலவும் அது காட்டுகிறது. இது என் தன்மானப் பிரச்சனை ஆகிறது. ஒப்பனைகளை கழற்றிய நான் அவசரமாக அவற்றை மீண்டும் அணியத் துவங்குகிறேன். நீ என்னை ஏமாற்றிவிட்டதாக உணர்கிறேன். உன்மேல் வீண்பழி சுமத்துகிறேன்.


உனக்காக நான் உருவாக்கிய ( நிதானமிழக்காத நான், ஒப்பனைகள் மூலம் நான் காட்டிக் கொள்ள விரும்புகிற இன்ன பிறவுமான நான் என்ற) என் பிம்பங்களும், நான் உன்னைக் குறித்து எழுப்பியுள்ள (என்னை ஆராதிக்கும் நீ, என்னை உயரத்திலேயே வைத்துப் பார்க்கும் நீ, என் வார்த்தைகளுக்கு மயங்கும் நீ, என்னால் எப்போதும் வசீகரிக்கப்பட்ட நீ, என்ற) பிம்பங்களும் ஒருங்கே உடைந்து சிதறும் தருணங்களில் நான் வேறெப்படித் தான் நடந்துகொள்வது?

***

ஒரு வகையில் இந்த பிம்பச் சேதங்கள் எனக்கு நன்மையே பயக்கின்றன. நான் நானாவதற்கு, என் உண்மையான தன்மையை எனக்கே இயல்பாக்கிக் கொள்ளுவதற்கு, பாசாங்கோ, தற்பெருமையோ, வெட்கமோ இல்லாமலிருப்பதற்கு இவை வழிவகுக்கின்றன.

நன்று.

பிம்பங்களும், பிம்பச்சேதங்களும் நல்லன. அவை வாழ்க.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//ஒரு வகையில் இந்த பிம்பச் சேதங்கள் எனக்கு நன்மையே பயக்கின்றன. நான் நானாவதற்கு, என் உண்மையான தன்மையை எனக்கே இயல்பாக்கிக் கொள்ளுவதற்கு, பாசாங்கோ, தற்பெருமையோ, வெட்கமோ இல்லாமலிருப்பதற்கு இவை வழிவகுக்கின்றன.
//

Very true!

//
பிம்பங்களும், பிம்பச்சேதங்களும் நல்லன. அவை வாழ்க.
//

AMEN!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...