என்னோடு நட்புப் பாராட்டுமுன் தெரிந்து கொள் - அல்ப்பத்தனம், பொறாமை, முன்கோபம், வெளி வேஷம் எல்லாங்கலந்த கலவை நான். என்னை ஒருநேரம் கடையில் நீ வாங்க நேர்ந்தால், இவைகளுக்கும் விலைகொடுத்து வாங்க வேண்டும் - தனியாய்க் கிடைக்கமாட்டேன். நான் சின்ன அறிவும் பெரிய ஆசையும் படைத்த, பல தவறுகளை இழைக்கிற, அவற்றை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கிற சாதாரணன். உந்தன் நட்புப் போர்வைக்குள் நான் வந்த பிறகு என்னுடன் வந்த என் சிறுமைகளை என் முகத்தில் எறிந்து காயப்படுத்தாதே. என் சிறுமைகள் அறிந்தும் நீ நட்பாய் இருப்பதிலேயே அச்சிறுமைகளைக் களையும் ஆசையும் உறுதியும் எனக்கு வாய்க்கிறது. எல்லாச் சிறுமைகளும் போக எனக்குள் எஞ்சி நிற்கும் மனிதத்தை நீ கண்டுகொண்டதன் அத்தாட்சி உன் நட்பு - இதுவே அச்சிறுமைகளைக் களைந்து அங்கே மனிதத்தை நிரப்புவதற்கான எனது பெரிய நம்பிக்கை. நான் இங்கே வருமுன்னரே மனத்தில் பலப்பல குப்பைகளை நிரப்பி வைத்திருக்கிறேன். இவைகளை ஒருநாளில் களைய முடியாது. மனத்துக்கண் நான் மாசிலன் ஆக ரொம்பக்காலம் பிடிக்கும். ஆனால் அதுவரை நீ என்மேல் நம்பிக்கையுடன் இரு, நெறிப்படுத்தும் நட்பே!
படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள் பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது. இன்றைக்கு பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம் - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல வெளிச்சத்தின் முன்னே தூக்கிப்பிடியுங்கள் என்றுதான் அவர்களை க் கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள் அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள், அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத் துழாவுங்கள் அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர
கருத்துகள்
அருமையான பதிவு...
சக மனிதனை அவனது குறைகளோடு ஏற்றுக்கொண்டு எல்லோரும் நட்பு பாராட்டினால் இந்த உலகத்தில் பிரச்சினைகளே இருக்காது. பிரச்சினை என்னவென்றால் பெரும்பாலானோருக்கு அவரவரது குறைகள் என்னவென்றே தெரியாது அப்படியே தெரிந்தாலும் அதை ஒப்புக்கொள்ளும் தைரியமும் இல்லை.
அப்படி நமது குறைகளை ஏற்றுக்கொண்டு நட்பு பாராட்டாதவர்களிடம் கூட அதை அவர்களின் இயல்பாக ஏற்றுக்கொண்டு நாம் நட்பு பாராட்டிவிடுவது அதனினும் நன்று.
( நல்ல நட்பு குறைகளையும் சுட்டிக் காட்டும்!!!)
தாணு- எனக்கென்னமோ இப்படி எழுதியிருப்பது பிடித்திருக்கிறது. எல்லாவற்றையும் கவிதையில் சொல்லவேண்டும் என்று இல்லைதானே?
-மதி
I'm a fan of your blog-posts - of your post about ThiJaa, in particular. :-) Your latest post is so very thought- provoking. Bravo!
[I'm writing in english, because there's some problem with my Tamil fonts set-up)
Could you please give me your email id?