முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெங்களூர் டயரி - 2

கடைசியில் நானும் ஒரு அகலப்பாட்டை (Broadband) இணைப்புக்கு மனுப்போட்டுவிட்டேன். ட்ராயின் (TRAI) விதிமுறைப்படி குறைந்தபட்சமாக 256 Kbps திறன் உள்ள இணைப்பே அகலப்பாட்டை இணைப்பு. ஆனால் இந்தச் சேவை வழங்கிகள் 48 Kbps திறனையே அகலப்பாட்டை என்று கூவி விற்கிறார்கள். இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கு டயல்-அப் (Dial-up) முறையில் முக்கி முக்கி 10 Kbpsஇற்கும் குறைவான திறனை அனுபவித்தவர்களுக்கு 48 கொடுத்தாலே ராஜபாட்டை.

பாரத் சஞ்சார் நிகமின் (BSNL) இணைப்புத்திறன் பற்றிப் பரவலாக நல்ல கருத்தே நிலவுகிறது. இப்போது மாதம் இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு 256 Kbps என்ற திட்டம் வந்தபின்னால் தினமும் மூவாயிரம் மனுக்கள் அகலப்பாட்டை இணைப்புக்காய் இவர்கள் பெறுகிறார்கள்.

மொபைல் (Mobile) தொலைபேசி நிறுவனங்களில் இருந்து அகலாஇணைப்புச் (Fixed line) சேவை வழங்கிகளுக்குக் கடும் போட்டி நிலவுகிறது. இம்மாதிரி தரை (Land Line) இணைப்புக்களை மொபைல் இணைப்புக்கள் என்றோ எண்ணிக்கையில் மிஞ்சி விட்டன. அதுவும் அடிப்படையான தொலைபேசும் சேவைகள் மட்டுமல்லாமல், குறுஞ்செய்திகள், படக்குறுஞ்செய்திகள் (SMS, MMS) என்று பற்பல சேவைகள்களை மொபைல் இணைப்பு வழங்குகிறது. உங்களைக் கூப்பிடும் நண்பருக்குச் சாதா 'டிரிங் டிரிங்' சப்தத்தை விட மம்மதராசா கேட்பது சுகமாய் உள்ளது. இங்கே நிலவும் கடும் போட்டியில் இச்சேவைகள் எல்லாம் தரைவிலைக்குக் கிடைப்பதல்லாமல், எங்கும் எப்போதும் தொலைபேசியை எடுத்துச் செல்லும் வசதி வேறு!

நாடு முழுதும் செம்புக்கம்பிகள் பின்னி தரை இணைப்பின் முடிசூடா மன்னர்களாய்த் திகழும் BSNL/MTNL இற்கு இப்போது போட்டியின் உச்சத்தில் இணைப்புக்களைச் சந்தாதாரர்கள் திரும்பப்பெறும் நிலை. இப்போட்டியை வெல்வது எப்படி? சாதா செம்புக்கம்பிகள் கொண்டு மம்மதராசா சேவைகளைத் தோற்கடிப்பது எங்கனம்? விடை DSL என்கிற தொழில்நுட்பத்தில் இருக்கிறது.

இத்தொழில்நுட்பம் மூலம் 8 Mbps வரையிலான திறனைச் செம்பிலிருந்து பெறமுடியும்! இதன்மூலம் அகலப்பாட்டை எல்லா வீடுகளையும் குறைந்த செலவில் சேரும். இதற்காக "Broadband India:Recommendations on Accelerating Growth of Internet and Broadband Penetration" என்கிற பரிந்துரைகளை TRAI 2004ல் வெளியிட்டது. இதன்படி 2006ன் முடிவில் இந்தியாவில் 3.35 மில்லியன் அகலப்பாட்டை சந்தாதாரர்கள் சேரவேண்டும் என்று நிர்ணயித்துள்ளார்கள். இச்சேவையின் வழங்குமுறைகளில் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது DSL வழி இணைப்புக்களே. இதன் மூலம் உங்கள் தொலைபேசிக் கம்பியை ஒரு சிறு கருவியுடன்(DSL Modem) வீட்டிலே இணைத்துவிட வேண்டும். இக்கருவி தகவலையும், குரலையும் பிரித்துக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. நாம் தொலைபேசிக்கொண்டே இணையத்தை மேயலாம்!

மேலும் TRAI BSNL இற்கு இன்னொரு கெடுபிடியும் விதித்தது. அதாவது, 2005 ஆம் ஆண்டிறுதிக்குள்ளாக ஒரு மில்லியன் DSL இணைப்புக்களை வழங்காவிட்டால், BSNL தனது செம்புக்கம்பிகளை இதர சேவை வழங்கிகளுக்கு (DSL சேவைக்காய்)உபயோகிக்க உரிமம் வழங்கவேண்டும் (Copper unbundling) என்பது. இதன் மூலம் போட்டி பெருகும், விலை இன்னும் குறையும். ஆனால் நாளொன்றிற்கு மூவாயிரம் வீதம் இணைப்புகளோடு BSNL செம்பைத் தக்கவைத்துக்கொள்ளும் என்றே தோன்றுகிறது.

சரி, இந்த DSL அகலப்பாட்டை தமிழ்மணம் மேய்வதற்கு மட்டுமா என்றால் இல்லை. இப்போது மூவழிச் சேவை என்கிற 'triple play' (telephone, internet, TV) சேவைகள் பிரபலமடைந்து வருகின்றன. DSL அகலப்பாட்டை கொண்டு சில சேவைகளும் நன்மைகளும்:
1. அதிவேக இணைய உலாவல், தரவிறக்கம்
2. IP TV என்கிற சேவை மூலம் அகலப்பாட்டையில் தொலைக்காட்சி பார்க்கலாம். (உங்கள் வீட்டிலிருக்கும் set-top பெட்டிகள் இணையம் மூலம் நீங்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை, சானல்களை இறக்கிக் கொடுப்பதுடன், நீங்கள் பார்ப்பவைக்கே விலை கொடுக்க வேண்டியும் ஆகிவிடும். 500 ரூபாய் கேபிள் சந்தா இல்லை)
3. தேவைக்கு வீடியோ என்ற Video on Demand : சில தனியார் content வழங்கிகள் மூலம் நீங்கள் கேட்கும் ஒரு திரைப்படமோ, ராமாயணமோ, மெட்டி ஒலியோ பார்க்க முடியும். (இணைய சூப்பர் மார்க்கெட்டுகள் போல, நீங்கள் 'மாயாபஜார்' படத்தை ஒரு தளத்தில் shopping cartல் போட்டு check-out செய்தால், அப்புறம் உங்கள் set-top பெட்டிக்கு அந்தப் படம் நீங்கள் கேட்ட நேரத்தில் அனுப்பப் படும்)
4. முக்கியமாக, இம்மாதிரி சேவைகளை உபயோகிக்கும் போது, அடைப்படை தொலைபேசும் சேவை இலவசமாக வழங்கப் படலாம்! இதன் மூலம் BSNL தனது பழம்தின்று கொட்டைபோட்ட சந்தாதாரர்களை தக்கவைத்துக்கொள்வதுடன், புதிய தொலைபேசி இணைப்புக்களையும் வழங்கலாம்.

BSNL இன் DSL அகலப்பாட்டை மூலம் இதர நிறுவனங்களுக்கு IP-TV, VoD சேவைகள் வழங்கும் உரிமம் வரும் வருடங்களில் வழங்கப் படலாம் என்று தெரிகிறது. இம்மாதிரி அகலக்கால் வைக்கும் முன்னர், வாக்குறுதிப்படி குறைந்தபட்சமாக 256 Kbps அகலப்பாட்டை என்கிற அடிப்படை சேவையை இப்போது கொடுத்தாலே எனக்குப் போதும்.

கருத்துகள்

NambikkaiRAMA இவ்வாறு கூறியுள்ளார்…
thakalukku mikka nantri
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
PositiveRama,
Thanks
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
vurupadiyaana thagaval...

-RV

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க