முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் தமிழ் எழுத்து மேம்பட...

"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார்

பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது.

என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது.

சின்னச் சின்ன வாக்கியங்கள் தான் அமைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. பெரிய வாக்கியங்களில் உள்ள பிரச்சனை, அதன் தொடக்கத்திற்கும், முடிவுக்கும் இடையே நான் தொலைந்து போய்விடுவது தான். கொஞ்சம் கவனம் தேவை. அதனால், முதலில் வாக்கியக் கட்டுமானத்தில், ஒற்றுப் பிழைகளில் கவனம் செலுத்தலாமென்றிருக்கிறேன்.

தமிழில் எழுதுவதே எனக்கு ஒரு இனிமையான இளைப்பாறல். ஹரியண்ணா சொல்வது போல "You should have a feel for the language". மிகச்சரி!

கருத்துகள்

துளசி கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
//என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. //

எனக்கும் இந்த ஆசை இருக்கின்றது. ஆனால் பேச்சுத்தமிழில் இருக்கும் ஒரு அண்மை மற்றவைகளில் இல்லையே?

என்றும் அன்புடன்,
துளசி.
இளங்கோ-டிசே இவ்வாறு கூறியுள்ளார்…
//என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது.//

கண்ணன், உங்களுக்குள்ள இதே ஆசைதான் எனக்கும் உள்ளது. கைகூடினால மகிழ்ச்சிதான்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
துளசி,
டிசே,

உங்கள் தமிழ் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.
மதி கந்தசாமி (Mathy Kandasamy) இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கும் இதே ஆசை/முயற்சிதான் கண்ணன்.

-மதி
இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன், உங்கள் ஆசை எனக்கும் உண்டு. நீங்கள் இப்படிச் சொல்லியிருந்தாலும் உங்கள் எழுத்துக்கள் பெரும்பாலும் நன்றாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இப்படி மேலும் மேலும் சிறப்புற எழுத வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதாலேயே கூட இருக்கலாம். சரி, அப்படியே, முடிந்தால் இப்படிச் சிறப்பாக எழுதக் கற்றுக்கொள்வதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்றும் பகிர்ந்து கொள்ளுங்கள். எனக்கும் உதவக் கூடும். அப்படியே procrastinate பண்ணாமல் செய்வீர்களா?:-) :-)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
The pieces you choose to write, and your style as well, are quite nice. It takes a lot of effort for me to read Tamil, which I still do, for I quite enjoy your pieces.

Are you still writing on arattaikutchery?

Saumya
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
மதி,

உங்கள் நல்ல முயற்சிகள் (எல்லாம்) வெற்றி பெற வாழ்த்துக்கள்.

செல்வா,
பாராட்டுவதும், பிறரை ஊக்குவிப்பதும் உங்கள் இயல்பு என்ற அளவிலேயே இந்தப் பின்னூட்டையும் ஏற்றுக் கொள்கிறேன். நன்றி!

//சரி, அப்படியே, முடிந்தால் இப்படிச் சிறப்பாக எழுதக் கற்றுக்கொள்வதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்றும் பகிர்ந்து கொள்ளுங்கள். எனக்கும் உதவக் கூடும். அப்படியே procrastinate பண்ணாமல் செய்வீர்களா?:-) :-)//
இது நியாயமா?
கற்கும் முயற்சியை procrastinate செய்யாமல் இருக்க இம்மாதிரிப் பின்னூட்டங்கள் நிச்சயம் உதவும்!

Saumya,
Thanks again for the kind words. Want to keep arattaikutchery going too...
//It takes a lot of effort for me to read Tamil, which I still do//
This makes me really happy!
Ramya Nageswaran இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுக்கு இருக்கும் அதே ஆசை தான் எனக்கும்! கொஞ்சம் பேராசை என்று கூட சொல்லலாம். பள்ளியில் இருந்த வரை தமிழ் third language. 'வீட்டில் தான் தமிழ் பேசுகிறோமே, பள்ளியில் ஹிந்தி கற்றுக் கொள்!' என்பது அப்பாவின் முடிவு. ஆனால் அவரின் பங்குக்கு வானதி பதிப்பகத்தில் நிறைய தழிழ் புத்தகங்கள் வாங்கி தருவார். நான் தான் அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்ப வருந்துகிறேன்.
தாசரதி/Dhasarathy இவ்வாறு கூறியுள்ளார்…
என்னதான் இருந்தாலும்... மன ஓட்டத்தின் வேகத்தை எழுத்தினில் கொண்டு வருவது மிக மிகக்கடினமாக இருக்கிறது! ஆங்கில மூலம் தமிழ் தட்டச்ச மனதும்/உடலும் ஒத்துழைக்க மறுக்கிறது.... அனைத்துக்கும் இப்போதைய தேவை "பயிற்சி!". முன்னேற வேண்டும்..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Feeling lonely? Hook up with Real Singles now for $4.99 to connect, and only $0.99 a min. A true match is only a phone call away. Give it a try 1-800-211-9293.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க