முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வூட்ல சொல்லிகினு வந்தியா?

"You really never learn to swear until you learn to drive" என்று யாரோ சொல்லி, எங்கோ படித்த ஞாபகம் வருகிறது. இன்று நான் மனத்தில் சொல்லிக் கொண்ட, தினமும் காலையில் பைக் ஓட்டி வரும்போது சொல்லிக்கொள்கிற "ங்கோத்தா.." வகையறாக்கள் எண்ணிக்கையில் அடங்கா.

Traffic விதிகளை மதிப்பதை ஒரு காதலுடன் செய்ய முயற்சிக்கிறேன் - இதை என் தேசப்பற்றின் சிறு வெளியீடாகக் கூட நான் பார்ப்பதுண்டு. கொஞ்சம் civic sense, தேவையான அளவு traffic sense, துளி பொறுமை இருந்தால் நம்ம ஊர் சிங்கப்பூரோ, ம்யுநிக்கோ ஆகாவிட்டாலும், காலையில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் யார் "வாயிலும் விழ" வேண்டாம், உபயோகிக்கச் சரியான கெட்ட வார்த்தைகள் தேட வேண்டாம், முழு நாளையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம்...

யார் எக்கேடு கெட்டுப்போனாலும், தாம் மட்டும் "நேரத்தோட" போய் சேர்ந்தால் போதும் என்று, பாதி ரோட்டைத் தாண்டி எதிரில் வரும் வாகனங்களைப் போகவிடாமல் அழும்பு பண்ணுகிறவர்கள், பொலிஸ் இல்லாத நாற்சந்தியின் நெரிசலில், இண்டு இடுக்கிலெல்லாம் தத்தம் வாகனங்களைச் செருகிக்கொண்டு, அவர்களும் போகாமல், மற்றவர்களையும் நகர விடாமல் deadlock உண்டுபண்ணுபவர்கள், lane எக்கச்சக்கமாய் தாண்டுபவர்கள் (நம்மூர்ல பெரிய ராஜபாட்டையெல்லாம் கெடையாது, இருந்தாலும் எல்லாரும் போகிற ரோட்ல, செங்குத்தா, திரும்பிப் போறது கொஞம் ஓவர் தானே?) ஆகியோரை மசியவைக்க ஒரு யோசனை:

ஓரு நல்ல மைதானமாகப் பார்த்து, வண்டிகளை ஓரங்கட்டச் செய்வது; உள்ளே ஒரு கூடத்தில் சேர்கள் போட்டு, காபி, தேனீர் உபசாரம் செய்து, போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பான movie, அல்லது presentation ஒரு அரைமணி நேரத்திற்கு - இதில், வீட்டில் இருந்து 30 நிமிடங்கள் முன்னதாகக் கிளம்பி, பொறுமையுடன் வண்டி ஓட்டுவதன் அவசியத்தை வலியுறுத்துதல் என்று செய்யலாம். அவசரப்பட்டவர் licence-ல் ஒரு முத்திரை குத்தி, இந்தமாதிரி 5 முறைக்கு மேல் ஆனால் licence ஐ revoke செய்யலாம். மேலும் அவர் சமயத்திற்கு அலுவலகத்திற்கோ, கள்ளக்கடத்தல் partnerஐ சந்திப்பதற்கோ போகவிடாமல் (இந்த இடத்தில் கட்டணமுறைக் கழிப்பிடம் இருப்பதால், இதற்கு அவர் அவசரப்பட்டால் போகவிடலாம்) தாமதப்படுத்தலாமே? இந்தத் தாமதத்தினால் அவருக்கு விளையும் துன்பங்களே தண்டனையாகவும் இருக்காலாம் - "சம்திங்" எல்லாம் வாங்க வேண்டாம், அல்லது இதுதான் சாக்கு என்று அவரை வாய்க்கு வந்தபடி ஏச வேண்டாம் (படிச்சவன் தானே? அறிவில்லையா?...) ஒன்றும் சொல்லாமல் just தாமதப்படுத்துவதால், ஆசாமி சிறிது ஆசுவாசத்துடன் கிளம்பிச் செல்வார் என்று எதிர்பார்க்கலாம். பொலிஸுக்கு ஜீப், பைக் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து சமூகச் சேவை செய்யும் நிறுவனங்கள் இதற்கான உதவிகளைச் செய்யலாம்.

இதுமட்டுமல்லாமல், வேறொரு முக்கியமான விடயமும் இருக்கு. விபத்துக்கள் நிகழ்ந்தால் செய்ய வேண்டியது: நமக்கென்ன என்று ஒதுங்கிப் போவது, வேடிக்கை பார்ப்பது, பயந்து ஒன்றும் செய்யாமல் போவது (நான் மூன்றாவது ரகம்) என்றிருப்பதைவிட, பொலிஸும், NGOs உம் சேர்ந்து விபத்து நேர்ந்தால் அக்கம்பக்கத்தில் உள்ள சாதாரணர்கள் எப்படி உதவலாம் என்பதில் கொஞ்சம் வண்டி ஓட்டும் volunteersகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இதில் முதலுதவி, சட்டம் என்று எல்லா அம்சங்களும் இருக்க வேண்டும். mock விபத்துக்கள் நிகழ்த்த வேண்டும். இதில் நாமெல்லாம் பங்கெடுத்துத் தெரிந்துகொள்ள வேண்டும். (பயந்தாங்கொள்ளியான நானே இதற்கு உடன்படுகிறேன்)

இப்படியெல்லாம் இன்று காலை வண்டியோட்டி அலுவலகம் வந்து சேர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த அவஸ்தை எல்லாம் இல்லமல் சுகமாகப் பேருந்திலோ, பொடிநடையாகவோ கூடப் போகலாம். அதெல்லாம் அப்புறம். இப்பொ சோலியப் பாக்கோணும்...

கருத்துகள்

ஈழநாதன்(Eelanathan) இவ்வாறு கூறியுள்ளார்…
பெரிதாக ஒன்றும் வேண்டாம் ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு சந்தியில் வைத்து போக்குவரத்தை ஒளிப்பதிவு செய்து அத்தனை பேரையும் ஓரங்கட்டி அவர்களையே பார்க்கும் படி செய்தால் போதும் பயத்தில் அல்லது வெட்கத்தில் திருந்திவிட வாய்ப்புண்டு
Santhosh Guru இவ்வாறு கூறியுள்ளார்…
// யார் எக்கேடு கெட்டுப்போனாலும், தாம் மட்டும் "நேரத்தோட" போய் சேர்ந்தால் போதும் என்று, பாதி ரோட்டைத் தாண்டி எதிரில் வரும் வாகனங்களைப் போகவிடாமல் அழும்பு பண்ணுகிறவர்கள் //

அவர்கள் மட்டுமா... முன்னால் வாகனத்தை ஒரு அங்குலம் அளவுகூட நகர்த்த இயலாது என்று தெரிந்தும், பாம் பாம் என்று ஹாரன் அடிப்பவர்களைக் கண்டால், எனக்கு கேப்டன் விஜயகாந்த் போல கோபம் வருகிறது. அப்படியே இறங்கிச்சென்று அவர்கள் மூஞ்சியில் என் பீச்சாங்கையினை வைக்கவேண்டும் என்பது நீண்ட நாள் அவா.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

எதையும் உடுக்காமல்/ பகல் வெளிச்சத்தை ஊடுருவி/அவள் இறங்குகிறாள்

சித்திரக்கலை குறித்த முறையான அறிமுகம் எனக்கில்லை. சில ஓவியங்களைப் புரிந்துகொள்ள அவற்றைப் பற்றிய கவிதைகள் எனக்கு நுழைவாயிலாக அமைந்திருக்கின்றன. மேற்கத்திய (சித்திரக்) கலையில், கருத்தியல் ரீதியாகப் பல பாய்சல்கள் நிகழ்ந்துள்ளன என்று புரிந்துகொண்டேன். மற்ற கலைவடிவங்களிலும், குறிப்பாகக் கவிதையில், இவற்றுக்கு இணையான மொழி மற்றும் வடிவப் பாய்ச்சல்கள் நிகழ்ந்ததாக என் சொற்ப வாசிப்பின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆரம்ப காலத்து இமேஜிஸ்டு கவிதைகள் சிலவற்றைப் படித்தபோது பிரமிப்பாக இருந்தது. அதிலும் எஸ்ரா பவுண்டின் In a Station of the Metro இரண்டே வரிகளில் ஒரு அசையும் காணொளியையே காட்டுவது மொழியின் இத்தகைய பாய்ச்சலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்னும் சில பிரபலமான ஓவியங்களை ஒட்டி (அவற்றைப் பற்றி) எழுதப்பட்ட கவிதைகளையும் படித்தேன். காரவஜியோவின் The Calling of Saint Matthew என்ற ஓவியத்தை James Lasdun எழுதிய The Calling of the Apostle Matthew  கவிதை   மூலம் தெரிந்துகொண்டேன். கவிதையின் பொருள் மாத்தியூவின் ஆன்மிகப் பயணத்தைப் பற்றியதா க இருந்தாலும், அது தொடங்குவது இந்த ஓவியத்தில் உறைந்திருக்கும் ‘ஆட்கொள்...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...