முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுதிச் செல்லும் கையின் விதி


 “எழுதிச் செல்லும் விதியின் கை” 

யார் முதலில் சொன்னது? உமர் கைய்யாமின் ருபாயத் ஒன்றில் வந்து தமிழ்ப்படுத்தப்பட்டது என்றறிகிறேன்

இன்றைக்கு மீண்டும் வானொலியில்ஆயிரம் மலர்களே மலருங்கள் - எப்போது கேட்டாலும் சலிப்பதில்லை. 

எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ கேட்கும்போது எப்போதும் தொண்டைக்குழி அடைத்துக்கொள்கிறதுஇது ஏனென்று புரியவில்லை.

அண்டங்கள் கடந்த பெருவெளியின் பிரம்மாண்டத்தின் முன்னால் ஒரு மணல்த் தரியளவும் காணாத அற்ப மனிதவாழ்வின் பதைபதைப்பு என்று கொள்கிறேன். 


இந்தக் கை எங்கும் நிறைந்ததுசந்தைப் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் 'கண்காணாக் கை'யும்  இதுதான்  போலும். 


கூடவே ஏனோ நினைவுக்கு வரும் கொசுறு பிரமிளின் இந்தக் கவிதை: 


சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின் தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

காதலைப் பாடுதும்

மனதை வெகு நாட்களாக ஆட்கொண்டிருக்கும் ஒரு பாடலைப் பற்றிப் பேசவேண்டும். பேசுவதில் / எழுதுவதில் மிகுந்த மொழியாற்றல் இருப்பவருக்கும் ஒரு பாடல் உருவாக்கும் நெகிழ்ச்சியையும், இணக்கத்தையும் சரியாக விளக்க முடியாது. உணர்ச்சிமிகுதியில் எளிமையான வரிகளையே எழுதமுடியாத நானெல்லாம் எம்மாத்திரம்? சுவாதித் திருநாள் இராம வர்மா திருவிதாங்கூரை 1800 களின் முற்பகுதியில் ஆண்டவர். கலைகளை, கலைஞர்களை மிகுதியும் ஆதரித்தவர், கலைஞர். பதுமநாபன் மேல் தீராக்காதல் கொண்டு பல பாடல்களை இயற்றியிருக்கிறார். நாடகம் (அல்லது) நாட்டியம் (நாட்டியம் என்பது ஆடலும் பாடலும் சேர்த்துக் கதை சொல்லும் ஒரு கலையே) என்ற கலைவடிவத்தின் துணைக்கே இசை பயன்பட்டது. கலையளவில் உயரமான இடத்தில் இருந்த நாட்டியமும் அதை ஆடுபவர்களும் (பெண்களேயாதலால்) நம் சமூகத்தில் இருந்த பெண்பாலினருக்கான பல கட்டுப்பாடுகளின் மத்தியில் கொச்சையான மதிப்பையே பெற்றார்கள். இப்போது கருநாடக இசையின் மேதைகள் என்றறியப்படும் பலரும் தாளம், இலயம் சார்ந்த பாடங்களை நாட்டியக் கலைஞர்களிடமிருந்தே கற்றிருக்கிறார்கள் என்பது பதிவான வரலாறு. அந்த நாட்டியக்காரர்கள் பக்தியையும் கதையாகச் சொன

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க