செயமோகனின் கட்டுரையை முன்வைத்து:
செயமோகனின் கட்டுரைகளில் காணப்படும் பொதுமைப்படுத்தல்கள், தம் சொந்தக் கருத்துகளை முடிவான உண்மைகளாக முன்வைத்தல், பேசுபொருள் எதுவானாலும் தன்னையே முன்வைத்தல், தற்பெருமை பேசுதல், என்பவற்றைக் கடந்து, என்னால் அவர் கருத்துகளை சமனான மனநிலையில் அணுக முடிவதில்லை. எழுத்துச்சிக்கனமின்மையும் அவரைப் வாசிப்பதில் எனக்கொரு இடரே. இவற்றைத் தாண்டி இக்கட்டுரையை முழுதும் படித்து முடித்தேன். செயமோகனின் நீண்ட கட்டுரையில் சில விசயங்களில் எனக்கு நல்ல உடன்பாடு உண்டு. அதில் முக்கியமானது இது:
“பிராமண வெறுப்பு என்பது தலித்வெறுப்பின் மறுபக்கம். தலித் வெறுப்பு உள்ளடங்கி இருக்கிறது. பிராமண வெறுப்பு வெளிப்படையாக முற்போக்கு முகத்துடன் முன்வைக்கப்படுகிறது. பிராமண வெறுப்பு கொண்டவன் உறுதியாக தலித் வெறுப்பாளனே. தலித் வெறுப்பை கைவிடுபவன் பிறப்பு அடிப்படையில் எவரையும் வெறுக்கமுடியாதவன் ஆகிறான். அவனால் பிராமணர்களையும் வெறுக்கமுடியாது.”
கட்டுரையின் பல விசயங்களில் விமரிசனமுண்டு என்றாலும், அதை மேற்சொன்ன - எனக்குச் செயமோகனை வாசிப்பதில் உள்ள பிரச்சனை - சார்ந்தது என்பதால் அதைச் சொல்லப்போனால் இது செயமோக வெறுப்பு ஆகிவிடும். வெறுப்புக்கும் காழ்ப்புக்கும் எதிராகத் தானே இப்போது நம் நிலைப்பாடு?
ஆனாலும் இதை முன்வைத்துப் பொதுவாக பிராமணர் குறித்த சில வருத்தங்களைச் சொல்லுகிறேன்.
இந்தப் பலகால பிராமண எதிர்ப்பு / வெறுப்பினால் அவர்கள் அதிகாரத்தினின்றும் விரட்டப்பட்டிருக்கலாம், சமூகத்தில் அவமரியாதைகளையும் வசைகளையும் நேரிட்டிருக்கலாம், நாட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கலாம், பண்பாட்டைத் தக்கவைக்க அனுமதிக்கப்படாமலும் ஆகியிருக்கலாம். ஆனால் இக்காலம் தோறும் தம் சாதிக்குள்ளே எந்த விதமான சுயவிமரிசனங்களை, சீர்திருத்தங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள்? தங்களுக்கு மறுக்கபடும் உரிமைகளை ஏற்கெனவே இழந்து காலம் காலமாக ஒடுக்கப்படும் சாதியினரைச் சரிசமமாக நடத்தவும், அவ்வுரிமைகள் மற்றவர்களுக்கும் உடைத்தானவொன்று என்கிற பக்குவத்திற்கு வந்துவிட்டார்களா? இல்லை ‘தருக்கரீதியாக முன்னெடுக்கப்படும் பிராமண எதிர்ப்பு அரசியலுக்கு’ அறிவார்ந்த எதிர்வினை ஏதும் புரிந்திருக்கிறார்களா? இப்போது ‘தனிப்பட்ட பண்பாடாக’ அவர்கள் கொண்டாட விழைவது மேட்டிமைத்தனத்தையும், சகமனிதர்களைச் சூத்திரர்களாக விலக்கி வைக்கும் போக்கையும் சேர்த்துத்தானா? தமக்குள்ளேயே பல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருக்கும் பிராமண சாதியிலே ஒற்றுமைக்காக ஏதும் செய்திருக்கிறார்களா?
பொதுவில் சாதிவெறுப்பு என்பது (அது பிராமண வெறுப்பானாலும், தலித் வெறுப்பானாலும்) இச்சுமூகத்திற்குக் கேடே. எந்தச் சமூகமும், சாதியும் இப்படிப்பட்ட காழ்ப்பை, வசைகளை எதிர்கொள்ளக்கூடாதுதான். அவ்வகையில் எந்தப் பிரிவினருக்கும் தம் உரிமைகளும், பண்பாட்டு அடையாளங்களும் மறுக்கப்படுவதை எதிர்க்கிறேன். பலவகைச் சாதிகளை ஏற்றத்தாழ்வின்றி, இம்மண்ணின் கலாச்சார, பண்பாட்டுப்பன்மைத்தன்மையின் கூறாகப் பார்க்கவும், இப்பன்மைத்தன்மையைக் கொண்டாடவும் ஒரு மனநிலை எல்லாச் சாதியினருக்கும் வாய்க்குமாயின் அதுவே நன்று. அப்படிப்பட்ட நிலையை எளிதில் அடைந்து மற்ற சமூகத்தினருக்கு எடுத்துக்காட்டாக இருக்க பிராமணர்களுக்கு எல்லாச் சாத்தியங்களும் உண்டு - செயமோகன் புகழ்த்திப் பேசும் அவர்களின் கல்வி ‘வழிபாட்டுத்தன்மையை’க் கொண்டு சொல்லுகிறேன். இவ்வளவு கற்ற, கற்பிக்கும் சமூகம் அறிவும் தருக்கமும் கொண்டு ஏற்றத்தாழ்வில்லாத சமூகத்தை ஏற்கவும் அங்கீகரிப்பதற்கும் ஏது தடை? இப்படிப்பட்ட நிலையை அடைந்துவிட்டு ஒட்டுமொத்த ஒடுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்தால் தோள்கொடுக்க ஆளில்லாமல் போகுமா?
செயமோகனின் கட்டுரைகளில் காணப்படும் பொதுமைப்படுத்தல்கள், தம் சொந்தக் கருத்துகளை முடிவான உண்மைகளாக முன்வைத்தல், பேசுபொருள் எதுவானாலும் தன்னையே முன்வைத்தல், தற்பெருமை பேசுதல், என்பவற்றைக் கடந்து, என்னால் அவர் கருத்துகளை சமனான மனநிலையில் அணுக முடிவதில்லை. எழுத்துச்சிக்கனமின்மையும் அவரைப் வாசிப்பதில் எனக்கொரு இடரே. இவற்றைத் தாண்டி இக்கட்டுரையை முழுதும் படித்து முடித்தேன். செயமோகனின் நீண்ட கட்டுரையில் சில விசயங்களில் எனக்கு நல்ல உடன்பாடு உண்டு. அதில் முக்கியமானது இது:
“பிராமண வெறுப்பு என்பது தலித்வெறுப்பின் மறுபக்கம். தலித் வெறுப்பு உள்ளடங்கி இருக்கிறது. பிராமண வெறுப்பு வெளிப்படையாக முற்போக்கு முகத்துடன் முன்வைக்கப்படுகிறது. பிராமண வெறுப்பு கொண்டவன் உறுதியாக தலித் வெறுப்பாளனே. தலித் வெறுப்பை கைவிடுபவன் பிறப்பு அடிப்படையில் எவரையும் வெறுக்கமுடியாதவன் ஆகிறான். அவனால் பிராமணர்களையும் வெறுக்கமுடியாது.”
கட்டுரையின் பல விசயங்களில் விமரிசனமுண்டு என்றாலும், அதை மேற்சொன்ன - எனக்குச் செயமோகனை வாசிப்பதில் உள்ள பிரச்சனை - சார்ந்தது என்பதால் அதைச் சொல்லப்போனால் இது செயமோக வெறுப்பு ஆகிவிடும். வெறுப்புக்கும் காழ்ப்புக்கும் எதிராகத் தானே இப்போது நம் நிலைப்பாடு?
ஆனாலும் இதை முன்வைத்துப் பொதுவாக பிராமணர் குறித்த சில வருத்தங்களைச் சொல்லுகிறேன்.
இந்தப் பலகால பிராமண எதிர்ப்பு / வெறுப்பினால் அவர்கள் அதிகாரத்தினின்றும் விரட்டப்பட்டிருக்கலாம், சமூகத்தில் அவமரியாதைகளையும் வசைகளையும் நேரிட்டிருக்கலாம், நாட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கலாம், பண்பாட்டைத் தக்கவைக்க அனுமதிக்கப்படாமலும் ஆகியிருக்கலாம். ஆனால் இக்காலம் தோறும் தம் சாதிக்குள்ளே எந்த விதமான சுயவிமரிசனங்களை, சீர்திருத்தங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள்? தங்களுக்கு மறுக்கபடும் உரிமைகளை ஏற்கெனவே இழந்து காலம் காலமாக ஒடுக்கப்படும் சாதியினரைச் சரிசமமாக நடத்தவும், அவ்வுரிமைகள் மற்றவர்களுக்கும் உடைத்தானவொன்று என்கிற பக்குவத்திற்கு வந்துவிட்டார்களா? இல்லை ‘தருக்கரீதியாக முன்னெடுக்கப்படும் பிராமண எதிர்ப்பு அரசியலுக்கு’ அறிவார்ந்த எதிர்வினை ஏதும் புரிந்திருக்கிறார்களா? இப்போது ‘தனிப்பட்ட பண்பாடாக’ அவர்கள் கொண்டாட விழைவது மேட்டிமைத்தனத்தையும், சகமனிதர்களைச் சூத்திரர்களாக விலக்கி வைக்கும் போக்கையும் சேர்த்துத்தானா? தமக்குள்ளேயே பல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருக்கும் பிராமண சாதியிலே ஒற்றுமைக்காக ஏதும் செய்திருக்கிறார்களா?
பொதுவில் சாதிவெறுப்பு என்பது (அது பிராமண வெறுப்பானாலும், தலித் வெறுப்பானாலும்) இச்சுமூகத்திற்குக் கேடே. எந்தச் சமூகமும், சாதியும் இப்படிப்பட்ட காழ்ப்பை, வசைகளை எதிர்கொள்ளக்கூடாதுதான். அவ்வகையில் எந்தப் பிரிவினருக்கும் தம் உரிமைகளும், பண்பாட்டு அடையாளங்களும் மறுக்கப்படுவதை எதிர்க்கிறேன். பலவகைச் சாதிகளை ஏற்றத்தாழ்வின்றி, இம்மண்ணின் கலாச்சார, பண்பாட்டுப்பன்மைத்தன்மையின் கூறாகப் பார்க்கவும், இப்பன்மைத்தன்மையைக் கொண்டாடவும் ஒரு மனநிலை எல்லாச் சாதியினருக்கும் வாய்க்குமாயின் அதுவே நன்று. அப்படிப்பட்ட நிலையை எளிதில் அடைந்து மற்ற சமூகத்தினருக்கு எடுத்துக்காட்டாக இருக்க பிராமணர்களுக்கு எல்லாச் சாத்தியங்களும் உண்டு - செயமோகன் புகழ்த்திப் பேசும் அவர்களின் கல்வி ‘வழிபாட்டுத்தன்மையை’க் கொண்டு சொல்லுகிறேன். இவ்வளவு கற்ற, கற்பிக்கும் சமூகம் அறிவும் தருக்கமும் கொண்டு ஏற்றத்தாழ்வில்லாத சமூகத்தை ஏற்கவும் அங்கீகரிப்பதற்கும் ஏது தடை? இப்படிப்பட்ட நிலையை அடைந்துவிட்டு ஒட்டுமொத்த ஒடுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்தால் தோள்கொடுக்க ஆளில்லாமல் போகுமா?
கருத்துகள்