முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாஷிங் மஷின் காதை

வூட்ல வாஷிங் மஷின் ஊத்திக்கிச்சு.

ஒரு வாட்டி அவசரத்துல துணியெல்லாம் போட்டு, ஸ்விச்ச ஆன் பண்ணினதுக்கப்புறம் தான் சோப்புப் பொடி போடலன்னு ஞாபகம் வந்தது. அப்படியே ஸ்விச்ச ஆஃப் பண்ணிட்டு பொடியப் போடலாம்னு பாத்தா, ஆனான பாடு பட்டும் வாஷிங் மஷின் மூடி தொறக்கமாட்டேன்னுடிச்சு. எடுத்த காரியத்த முடிக்காம நடுவுல லூஸ்ல உடறது நம்பள மாதிரி அதுக்குப் பழக்கமில்ல போலிருக்கு. ஆனா, சோப்புப் பொடியே இல்லாம, தோச்சுத் தான் தீருவேன்னு அது நிக்கும்போது "கடம உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாப்பா" அப்படீன்னு தான் நெனக்கத் தோணிச்சு.

அதுல என்ன ஃபஸ்ஸி லாஜிக்கோ என்ன எழவோ, அதுக்கப்புறமா அது ஓடறதே இல்ல. ஏதோ ஒரு ஸ்டேட்ல அப்படியே நின்னுடிச்சி போல. எல்லா ஸ்விச்சயும் ஆஃப் பண்ணிட்டுப் போட்டா முதல்ல இருந்து ஓடும்னு நான் நெனைச்சா, போன வாட்டி எங்க உட்டமோ, அங்கிருந்து தான் நான் ஆரம்பிப்பேன்னு அது நெனைக்கிது. இந்த மாதிரி யோசிக்கிற மஷின் வாங்கறதுக்கு முன்னாடி நாம யோசிக்கணும் - அத விட நாம புத்திசாலியா இருக்கமான்னு. பேஸிக்கா, அது என்ன யோசிக்குதுன்னு நமக்குத் தெரியணும்.

(நல்ல வேளையா) இத நான் வாங்கல. வாடகை வீட்டோடையே வந்தது. வூட்டுக்காரர் ஏற்கனவே வச்சிருந்தது. அதோட கோனார் கைடு நம்ம கிட்ட இல்ல. ஸ்விச்சிலையோ படம் படமா போட்டிருக்கு, எழுத்து எங்கயுமே இல்ல. தொவை, காயப்போடு, அலசு - அப்படீங்கறதுக்கு என்ன படம்னே யோசிக்கத் தெரியல. இருக்கற படத்தப் பாத்து இந்த மூணு விஷயத்தோட பொருத்திப் பார்க்க முடியல. சின்ன வயசுல பெரியம்மாவோட தையல் மஷின்ல இருக்கற சக்கரம், கீழ இருந்து நூல விடற ஒரு பொறி (பாபி பின்னா?) இதெல்லாம் என்னன்னு தெரியாமலே, அத ட்ரெயின் இஞ்சின்னு இமாஜின் பண்ணிக்கிட்டு, நாமளே எதையோ திருகி என்னமோ பண்ற மாதிரி பில்டப்பு குடுத்து, மக்கானிக்கு கணக்கா வண்டியோட்டின மாதிரி, இப்போ கையில கிடச்சதயெல்லாம் திருகி ஒவ்வொரு வாட்டியும் இந்த வாஷிங் மஷின ஓட்டறேன்.

ஆனா தொவைக்க மாட்டேங்குது. எங்க வூட்டு சின்னப் பொண்ணுக்கு நான் பல்லுத் தேச்சி விடறேன்னு சொன்னா கேக்க மாட்டா. தானே தேய்க்கிறேன்னு போயி பேஸ்டக் கொஞ்சம் சாப்டிட்டு, சைட்ல திருட்டுத்தனமா தண்ணியக் குடிச்சிட்டு, தண்ணீல வெளையாடிட்டு ஆ..ஊ..ன்னு சவுண்டு விட்டுட்டு வந்திருவா. அந்த மாதிரி என்னமோ 747 ஃப்ளைட்டு கெளம்புற மாதிரி சவுண்டு எல்லாங்குடுத்துட்டு 40 நிமிஷம் ஓடுது இது. அப்புறமா எடுத்துப் பாத்தா, சோப்புப் பொடியெல்லாம் திட்டுத்திட்டா துணிமேலெயே இருக்கு. கொஞ்சம்கூட அழுக்குப் போன மாதிரியில்ல.

எல்லாத்தையும் வெளிய எடுத்து, இடுப்பு ஒடியக் குனிஞ்சு நிமிந்து நானே அலசிப் புழிஞ்சு காயப்போட்டேன்.

கருத்துகள்

Jazeela இவ்வாறு கூறியுள்ளார்…
ஏதோ ஒருநாள் செஞ்சிட்டு அலுத்துக்கிறீங்க இதைத்தானே உங்க வீட்டு பெண்கள் இத்தனை நாட்கள் செஞ்சாங்க? :-)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆமாங்க ஜெஸிலா, நீங்க சொல்லுறதும் சரிதான்...
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Ennada, Mathikare vaazhka nyabagam-varutha ???
மதி கந்தசாமி (Mathy Kandasamy) இவ்வாறு கூறியுள்ளார்…
couldn't wait for the tamil fonts. so this thanglish comment.

//
எல்லாத்தையும் வெளிய எடுத்து, இடுப்பு ஒடியக் குனிஞ்சு நிமிந்து நானே அலசிப் புழிஞ்சு காயப்போட்டேன்.//

thought of just peeping in and read the post written in september only in december! :)


anywayz, ithaRkuththaanae kaathirunthaay naNbaa. ensaai. ;)

nice to read the post.
(en kashtam unakkup nice'aannu kaekkakkoodaathu!)

-Mathy
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
Kannan,
Now only, I am seeing this post thanks to dynobuoy (from twitter)

Great Humour in this particular 'washing' experience of yours :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

கிச்சா பாறைகள்!

Screenshot from https://www.poetryfoundation.org/poems/42839/i-know-a-man பாண்டியில் படித்துக்கொண்டிருக்கும்போது (இது அந்தக்காலத்திற்கான இடுகுறிச் சொற்றொடர் - உண்மையில் ‘படித்த’ நினைவு இல்லை) ஒரு பின்னந்திப்பொழுதில் தெருத்தெருவாகச் சுற்றித்திரிந்தபோது கிச்சா, இதரர்களுடன் ஒரு கோவிலுக்குள் போன நினைவிருக்கிறது. மறுநாள் ம்யுபி என்ற மைக்ரோகபுராசஸர் இழவுத் தேர்வு இருந்தது பல்கலையில். கோவிலில் ஓ எஸ் தியாகராஜன் கச்சேரி என்று தட்டி வைத்திருந்தார்கள். ஓ எஸ் டி பின்னாட்களில்  கச்சேரி பண்ணுகிறேன் என்ற பெயரில் ஒப்பேத்தல் மன்னராக இருந்தாலும்  (இதைச் சொன்னதற்காக என்னை அடிக்க வராதீர்கள்) அருமையான பாடாந்தரம், வெண்கலக்குரல், களையான கச்சேரிகள், என்று 93ல் என் விருப்பத்திற்குரியவராகவே இருந்தார்.   நான் தட்டியைப்பார்த்துப் பரபரத்தேன். “ஓ எஸ் டி பாடறாரு மச்சான் - என்ன, எங்கன்னு விசாரிப்போம்”. இந்தவிடத்தில் கிச்சா அவனுடைய பாணியில் என்னைத் தடுத்தாட்கொண்டான்.  “ ஓ எஸ் தியாகராஜனையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், நாம  இப்ப ம்யுபி தியாகராஜனை கவனிப்போம்”... (முதுநிலைப் படிப்பில் அந்த அர...