முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்புத்தோழிக்கு...

மகிழ்ச்சியான தருணங்களை அவை நிகழும்போது நான் அனுபவிப்பதில்லை. கிடைக்கும்பொழுது ஆனமட்டும் புல்லை விழுங்கிவிட்டுப் பின்னால் அசைபோடும் மாடு போலச் சில தருணங்களைச் சுவைக்காமல் விழுங்கிப் பின்னால் ஒரு தனியான பொழுதில் எல்லாவற்றையும் மீட்டு நினைவுகளைச் சுவைப்பதில் மகிழ்ச்சி. அப்படியே நேசத்தோடு கழித்த நல்ல பொழுதுகளையும் விழுங்கிவிடுகிறேன். இதை நினைவிலிருந்து மீட்டெடுப்பதில் துளியும் மகிழ்ச்சியில்லை இப்போது. நீ புறப்பட்டுப் போனபின் சுவாசக் காற்றுப் பிரிந்த வெறும் கூடு போல உன்னுடன் புழங்கிய இடமெல்லாம் உயிரற்றுக் கிடக்கிறது.

முன்னாளில் பேசிய கடும் வார்த்தைகளை விடுத்து வாஞ்சையுடன் இன்னும் அன்பைப் பரிமாறியிருக்கலாம் - இனி அதற்கான வாய்ப்பு என்று கிடைக்குமோ...சிறுபிள்ளைத்தனமான கோபங்களை விடுத்து நம்மிடையே பேசிக்கொள்ளாத அந்தப் பொழுதுகளை அன்பான வெற்றுப் பேச்சாலேனும் நிரப்பியிருக்கலாம். இந்த வாய்ப்பையெல்லாம் தவறவிட்டுவிட்டு, கையசைத்து வழியனுப்பும் ஒரு மணிநேரப் பொழுதில் எவ்வளவுதான் நாம் செய்துவிட முடியும்? பிரிவையும் விட இந்தத் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் மேலும் துயரைத் தருகின்றன.

காலம் நின்றுவிட்டதாய்த் தோன்றினாலும் வாழ்க்கையும் அதன் நிகழ்வுகளும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன - இவ்வுலகம் அவசர கதியில் இயங்கும் ஒன்று. அம்மாவைக் காணாமல் அழும் பிள்ளைக்குப் பொம்மைகள் கொடுத்து கவனத்தைத் திருப்புவது போல இனி வேறு பல விஷயங்களில் மனத்தை ஆழ்த்துவதில் துயரம் மறக்கும். ஆனால் என் மனத்தில் நீ இட்ட அன்பின் வித்து வேரூன்றித் தழைத்துச் செடியாய், மரமாய் வளரும். பின்னொரு நாள் நிழலும், பறிக்கப் பறிக்கத் தீராத கனிகளும் கொடுக்கும்.

என் அன்பான "ரெட்டை வால்" சகியே! போய் வா. நாம் மீண்டும் சந்திக்கும் வரை இவ்வன்பை அடைகாத்திருப்பேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...