ஆரம்பம் இங்கே
ஃபீலியஸ் ஃபாக் மாதிரி நான் உலகம் (தமிழ்மணம் :D) சுற்றி வந்து பி(ப)டித்த வலைப்பதிவுகள் பற்றி எழுதும் போது புதன்கிழமை ஆகியிருக்கிறது - எப்படியேனும் ஏதோ ஒரு ஊரில் இது இன்னும் செவ்வாயாக இருக்காதா என்கிற நப்பாசையில்...
கடந்த வாரத்தில் நான் படித்த (மிகச் சொற்பமான) பதிவுகளில் இவை பிடித்திருந்தன:
நல்லவர்களும் கெட்டவர்களும் பிறரும்
இயல்பாய்க்கொஞ்சம் தண்ணீர்
கம்போடியா - மண்டை ஓடுகளின் நடுவில்
பொன்னான காற்று
தாராப்பூர் பன்னிரண்டு
இந்தப் பதிவுகளைக் குறித்து இன்னும் எழுத ஆசையிருந்தாலும், நேரமின்மையால் தற்போது முடியவில்லை.
***
இந்த நண்பர்களைத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பில் வரவேற்கிறேன்:
1. வித்யா சுரேஷ் (இப்போது ஆளைக் கொஞ்சம் நாளாய்க் காணவில்லை)
கவிதைக்கெனவே பதிவு் துவங்கியிருக்கும் இவரை நகுலனின் இந்த வரிகளை மனதிற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
"கவிதைதான் இலக்கியத்தின் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பொழுது கவிதையில் படிமத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பறைசாற்றுகிறார்கள். ஆனால், படிமம் கூட மனநிலையின் சூக்கும உருவாக, சிந்தாகதியின் பிரதிரூப பிம்பமாகச் செயல்படுவதில்தான் சிறக்கிறது. கவிதையில் இசையின் தொடர்பு வேண்டுமென்றாலும் அது மிகைப்படுவதால் மலினமடைகிறது. அதனால்தான் பழங்கவிதையைப் பின்பற்றுவதாகக் கற்பனை செறிவு இல்லாத யாப்புக் கவிதைகள் ஓசைக் குப்பைகளாக இருக்கின்றன. "
முழுக் கட்டுரையும் இங்கே
"பழகப் பழகவரும் இசைபோலே தினம் படிக்கப் படிக்க வரும் கவிபோலே" - இவர் எழுதியெழுதிச் சிறக்க வாழ்த்துக்கள்.
2. சுகா என்கிற சுப்பிரமணியன் கார்த்திகேயன் வந்திருக்கிறார். இந்தப் பதிவு பிடித்திருந்தது. இவர் pencil sketches செய்கிறார். தெருவில் அனாதையாய் விடபடும் குழந்தைகளை எடுத்துக் காப்பாற்றும் தொண்டு அமைப்பிற்கு ஒரு சிறு தொகையை நன்கொடையாய் வழங்கினால், நம் உருவப் படத்தை வரைந்து தருகிறார். இம்மாதிரியான சிறு செயல்கள் என்னைபோலப் பலபேருக்கு ஒரு ஊக்கியாகவும், பொதுவில் வாழ்க்கைமேல் நம்பிக்கை கொள்ளச் செய்வதாயும் இருக்கிறது. இவருக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்.
3. அப்புறம் நான் வரவேற்கும் இன்னொரு வலைப்பதிவர் மும்பையிலிருந்து வலைப் பதியும் 53 வயதுக்காரர் மணிமலர் மணியன் . 50 வயது நிரம்பிய (சொற்ப எண்ணிக்கை) வலைப்பதிபவர்கள் பெரும்பாலும் இடைவெளி விடாமல் எழுதுவதைப் பார்க்கும் போது அவர்கள் ஆர்வம் என்னை வியப்பிலாழ்த்துகிறது. மணியனுக்கு வாழ்த்துக்கள் - இவரது அனுபவப் பகிர்தல் நமக்குச் சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
***
கண்ணன்
செல்வராஜ்
...
ஃபீலியஸ் ஃபாக் மாதிரி நான் உலகம் (தமிழ்மணம் :D) சுற்றி வந்து பி(ப)டித்த வலைப்பதிவுகள் பற்றி எழுதும் போது புதன்கிழமை ஆகியிருக்கிறது - எப்படியேனும் ஏதோ ஒரு ஊரில் இது இன்னும் செவ்வாயாக இருக்காதா என்கிற நப்பாசையில்...
கடந்த வாரத்தில் நான் படித்த (மிகச் சொற்பமான) பதிவுகளில் இவை பிடித்திருந்தன:
நல்லவர்களும் கெட்டவர்களும் பிறரும்
இயல்பாய்க்கொஞ்சம் தண்ணீர்
கம்போடியா - மண்டை ஓடுகளின் நடுவில்
பொன்னான காற்று
தாராப்பூர் பன்னிரண்டு
இந்தப் பதிவுகளைக் குறித்து இன்னும் எழுத ஆசையிருந்தாலும், நேரமின்மையால் தற்போது முடியவில்லை.
***
இந்த நண்பர்களைத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பில் வரவேற்கிறேன்:
1. வித்யா சுரேஷ் (இப்போது ஆளைக் கொஞ்சம் நாளாய்க் காணவில்லை)
கவிதைக்கெனவே பதிவு் துவங்கியிருக்கும் இவரை நகுலனின் இந்த வரிகளை மனதிற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
"கவிதைதான் இலக்கியத்தின் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பொழுது கவிதையில் படிமத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பறைசாற்றுகிறார்கள். ஆனால், படிமம் கூட மனநிலையின் சூக்கும உருவாக, சிந்தாகதியின் பிரதிரூப பிம்பமாகச் செயல்படுவதில்தான் சிறக்கிறது. கவிதையில் இசையின் தொடர்பு வேண்டுமென்றாலும் அது மிகைப்படுவதால் மலினமடைகிறது. அதனால்தான் பழங்கவிதையைப் பின்பற்றுவதாகக் கற்பனை செறிவு இல்லாத யாப்புக் கவிதைகள் ஓசைக் குப்பைகளாக இருக்கின்றன. "
முழுக் கட்டுரையும் இங்கே
"பழகப் பழகவரும் இசைபோலே தினம் படிக்கப் படிக்க வரும் கவிபோலே" - இவர் எழுதியெழுதிச் சிறக்க வாழ்த்துக்கள்.
2. சுகா என்கிற சுப்பிரமணியன் கார்த்திகேயன் வந்திருக்கிறார். இந்தப் பதிவு பிடித்திருந்தது. இவர் pencil sketches செய்கிறார். தெருவில் அனாதையாய் விடபடும் குழந்தைகளை எடுத்துக் காப்பாற்றும் தொண்டு அமைப்பிற்கு ஒரு சிறு தொகையை நன்கொடையாய் வழங்கினால், நம் உருவப் படத்தை வரைந்து தருகிறார். இம்மாதிரியான சிறு செயல்கள் என்னைபோலப் பலபேருக்கு ஒரு ஊக்கியாகவும், பொதுவில் வாழ்க்கைமேல் நம்பிக்கை கொள்ளச் செய்வதாயும் இருக்கிறது. இவருக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்.
3. அப்புறம் நான் வரவேற்கும் இன்னொரு வலைப்பதிவர் மும்பையிலிருந்து வலைப் பதியும் 53 வயதுக்காரர் மணிமலர் மணியன் . 50 வயது நிரம்பிய (சொற்ப எண்ணிக்கை) வலைப்பதிபவர்கள் பெரும்பாலும் இடைவெளி விடாமல் எழுதுவதைப் பார்க்கும் போது அவர்கள் ஆர்வம் என்னை வியப்பிலாழ்த்துகிறது. மணியனுக்கு வாழ்த்துக்கள் - இவரது அனுபவப் பகிர்தல் நமக்குச் சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
***
டிசே
கண்ணன்
செல்வராஜ்
...
கருத்துகள்
என் பதிவை குறிப்பிட்டிருப்பதை கண்டு மகிழ்ந்தேன். நன்றிகள்.
எனது இடுகைகளை விட எனது வயதே தங்களை ஈர்த்திருப்பதாக தெரிகிறது :)
நீங்களும் வகைப்படுத்தலில் ஆட்கொள்ளப் பட்டுவிட்டீர்களே :))
ஆ! கையும் களவுமாய் மாட்டிக்கொண்டேனே! :-)
வரவேற்புரை ஆற்றும் போது சிலதைச் சொல்வதில்லையா? அதுதான்; "இடுகைளை விட" என்பதற்கு இங்கே(வரவேற்புரையில்) இடமில்லை. (குப்புற விழுந்தாலும்...)