முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்தும் வாசிப்பும்

நாட்குறிப்பு எழுதிப் பல நாட்கள் ஆகின்றன.  அலுவலகத்தில் கட்டுப்பாடுகளுடன் செய்த வேலை சலித்து, அம்மனிதர்களைச் சகித்துக்கொள்ள முடியாமல் போனது.  அலுவலக வேலையை விட்டொழித்து, மீண்டும் அந்நரகத்துக்குப் போகக்கூடாது   என்று  வெஞ்சினம் கொண்டு  வேறு பல வேலைகளை மேலிழுத்துப் போட்டுக்கொண்டேன்.   நாய்க்கு வேலையில்லை; ஆனால் நிற்பதற்கும் நேரமில்லை என்று சில நாட்கள் ஓடின.  தொண்டூழியம், வீட்டுறையப்பன் (stay-home dad), என்று பல அடவுகள்,  இந்த இடைவெளியில். நண்பர்களை அலுவல் நேரத்தில் அரைநிஜாருடன் போய்ப் பார்த்து காபி குடிக்க அழைத்து வில்லச்சிரிப்பும் எக்காளமுமாய் அவர்களை வயிறெரிய வைத்தேன்.   இன்னும், ஆபீசென்னும் நரகத்திலிருந்து தப்புவதெப்படி என்று  அவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்யவாரம்பித்தேன் . சட்டையில் ‘ask me how?’ என்ற வில்லையைக் குத்திக்கொண்டு நடுத்தெருவில் நிற்கவும் ஆயத்தமானேன்.  ஆனால் இரண்டேயாண்டுகளில்  விதி என் காலரைப் பிடித்துத் ‘தறதற’ வென  இழுத்து வந்து மீண்டுமொரு  வேலைஸ்தலத்தில் விட்டுச் சென்றுவிட்டது. நமக்கு அவ்வளவுதான் ஆசீர்வாதம். வேலை முந்தைக்கிப்போது எவ்வளவோ பரவாயில்லை.   இனி மனத்திற