முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பி(ப)டித்த வலைப்பதிவுகள்

ஆரம்பம் இங்கே

ஃபீலியஸ் ஃபாக் மாதிரி நான் உலகம் (தமிழ்மணம் :D) சுற்றி வந்து பி(ப)டித்த வலைப்பதிவுகள் பற்றி எழுதும் போது புதன்கிழமை ஆகியிருக்கிறது - எப்படியேனும் ஏதோ ஒரு ஊரில் இது இன்னும் செவ்வாயாக இருக்காதா என்கிற நப்பாசையில்...

கடந்த வாரத்தில் நான் படித்த (மிகச் சொற்பமான) பதிவுகளில் இவை பிடித்திருந்தன:

நல்லவர்களும் கெட்டவர்களும் பிறரும்
இயல்பாய்க்கொஞ்சம் தண்ணீர்
கம்போடியா - மண்டை ஓடுகளின் நடுவில்
பொன்னான காற்று
தாராப்பூர் பன்னிரண்டு

இந்தப் பதிவுகளைக் குறித்து இன்னும் எழுத ஆசையிருந்தாலும், நேரமின்மையால் தற்போது முடியவில்லை.

***

இந்த நண்பர்களைத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பில் வரவேற்கிறேன்:

1. வித்யா சுரேஷ் (இப்போது ஆளைக் கொஞ்சம் நாளாய்க் காணவில்லை)

கவிதைக்கெனவே பதிவு் துவங்கியிருக்கும் இவரை நகுலனின் இந்த வரிகளை மனதிற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

"கவிதைதான் இலக்கியத்தின் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பொழுது கவிதையில் படிமத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பறைசாற்றுகிறார்கள். ஆனால், படிமம் கூட மனநிலையின் சூக்கும உருவாக, சிந்தாகதியின் பிரதிரூப பிம்பமாகச் செயல்படுவதில்தான் சிறக்கிறது. கவிதையில் இசையின் தொடர்பு வேண்டுமென்றாலும் அது மிகைப்படுவதால் மலினமடைகிறது. அதனால்தான் பழங்கவிதையைப் பின்பற்றுவதாகக் கற்பனை செறிவு இல்லாத யாப்புக் கவிதைகள் ஓசைக் குப்பைகளாக இருக்கின்றன. "

முழுக் கட்டுரையும் இங்கே

"பழகப் பழகவரும் இசைபோலே தினம் படிக்கப் படிக்க வரும் கவிபோலே" - இவர் எழுதியெழுதிச் சிறக்க வாழ்த்துக்கள்.

2. சுகா என்கிற சுப்பிரமணியன் கார்த்திகேயன் வந்திருக்கிறார். இந்தப் பதிவு பிடித்திருந்தது. இவர் pencil sketches செய்கிறார். தெருவில் அனாதையாய் விடபடும் குழந்தைகளை எடுத்துக் காப்பாற்றும் தொண்டு அமைப்பிற்கு ஒரு சிறு தொகையை நன்கொடையாய் வழங்கினால், நம் உருவப் படத்தை வரைந்து தருகிறார். இம்மாதிரியான சிறு செயல்கள் என்னைபோலப் பலபேருக்கு ஒரு ஊக்கியாகவும், பொதுவில் வாழ்க்கைமேல் நம்பிக்கை கொள்ளச் செய்வதாயும் இருக்கிறது. இவருக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்.

3. அப்புறம் நான் வரவேற்கும் இன்னொரு வலைப்பதிவர் மும்பையிலிருந்து வலைப் பதியும் 53 வயதுக்காரர் மணிமலர் மணியன் . 50 வயது நிரம்பிய (சொற்ப எண்ணிக்கை) வலைப்பதிபவர்கள் பெரும்பாலும் இடைவெளி விடாமல் எழுதுவதைப் பார்க்கும் போது அவர்கள் ஆர்வம் என்னை வியப்பிலாழ்த்துகிறது. மணியனுக்கு வாழ்த்துக்கள் - இவரது அனுபவப் பகிர்தல் நமக்குச் சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

***

டிசே
கண்ணன்
செல்வராஜ்
...

கருத்துகள்

மணியன் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் கண்ணன்,
என் பதிவை குறிப்பிட்டிருப்பதை கண்டு மகிழ்ந்தேன். நன்றிகள்.
எனது இடுகைகளை விட எனது வயதே தங்களை ஈர்த்திருப்பதாக தெரிகிறது :)
நீங்களும் வகைப்படுத்தலில் ஆட்கொள்ளப் பட்டுவிட்டீர்களே :))
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
மணியன்,

ஆ! கையும் களவுமாய் மாட்டிக்கொண்டேனே! :-)

வரவேற்புரை ஆற்றும் போது சிலதைச் சொல்வதில்லையா? அதுதான்; "இடுகைளை விட" என்பதற்கு இங்கே(வரவேற்புரையில்) இடமில்லை. (குப்புற விழுந்தாலும்...)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...