முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பி(ப)டித்த வலைப்பதிவுகள்

ஆரம்பம் இங்கே

ஃபீலியஸ் ஃபாக் மாதிரி நான் உலகம் (தமிழ்மணம் :D) சுற்றி வந்து பி(ப)டித்த வலைப்பதிவுகள் பற்றி எழுதும் போது புதன்கிழமை ஆகியிருக்கிறது - எப்படியேனும் ஏதோ ஒரு ஊரில் இது இன்னும் செவ்வாயாக இருக்காதா என்கிற நப்பாசையில்...

கடந்த வாரத்தில் நான் படித்த (மிகச் சொற்பமான) பதிவுகளில் இவை பிடித்திருந்தன:

நல்லவர்களும் கெட்டவர்களும் பிறரும்
இயல்பாய்க்கொஞ்சம் தண்ணீர்
கம்போடியா - மண்டை ஓடுகளின் நடுவில்
பொன்னான காற்று
தாராப்பூர் பன்னிரண்டு

இந்தப் பதிவுகளைக் குறித்து இன்னும் எழுத ஆசையிருந்தாலும், நேரமின்மையால் தற்போது முடியவில்லை.

***

இந்த நண்பர்களைத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பில் வரவேற்கிறேன்:

1. வித்யா சுரேஷ் (இப்போது ஆளைக் கொஞ்சம் நாளாய்க் காணவில்லை)

கவிதைக்கெனவே பதிவு் துவங்கியிருக்கும் இவரை நகுலனின் இந்த வரிகளை மனதிற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

"கவிதைதான் இலக்கியத்தின் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பொழுது கவிதையில் படிமத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பறைசாற்றுகிறார்கள். ஆனால், படிமம் கூட மனநிலையின் சூக்கும உருவாக, சிந்தாகதியின் பிரதிரூப பிம்பமாகச் செயல்படுவதில்தான் சிறக்கிறது. கவிதையில் இசையின் தொடர்பு வேண்டுமென்றாலும் அது மிகைப்படுவதால் மலினமடைகிறது. அதனால்தான் பழங்கவிதையைப் பின்பற்றுவதாகக் கற்பனை செறிவு இல்லாத யாப்புக் கவிதைகள் ஓசைக் குப்பைகளாக இருக்கின்றன. "

முழுக் கட்டுரையும் இங்கே

"பழகப் பழகவரும் இசைபோலே தினம் படிக்கப் படிக்க வரும் கவிபோலே" - இவர் எழுதியெழுதிச் சிறக்க வாழ்த்துக்கள்.

2. சுகா என்கிற சுப்பிரமணியன் கார்த்திகேயன் வந்திருக்கிறார். இந்தப் பதிவு பிடித்திருந்தது. இவர் pencil sketches செய்கிறார். தெருவில் அனாதையாய் விடபடும் குழந்தைகளை எடுத்துக் காப்பாற்றும் தொண்டு அமைப்பிற்கு ஒரு சிறு தொகையை நன்கொடையாய் வழங்கினால், நம் உருவப் படத்தை வரைந்து தருகிறார். இம்மாதிரியான சிறு செயல்கள் என்னைபோலப் பலபேருக்கு ஒரு ஊக்கியாகவும், பொதுவில் வாழ்க்கைமேல் நம்பிக்கை கொள்ளச் செய்வதாயும் இருக்கிறது. இவருக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்.

3. அப்புறம் நான் வரவேற்கும் இன்னொரு வலைப்பதிவர் மும்பையிலிருந்து வலைப் பதியும் 53 வயதுக்காரர் மணிமலர் மணியன் . 50 வயது நிரம்பிய (சொற்ப எண்ணிக்கை) வலைப்பதிபவர்கள் பெரும்பாலும் இடைவெளி விடாமல் எழுதுவதைப் பார்க்கும் போது அவர்கள் ஆர்வம் என்னை வியப்பிலாழ்த்துகிறது. மணியனுக்கு வாழ்த்துக்கள் - இவரது அனுபவப் பகிர்தல் நமக்குச் சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

***

டிசே
கண்ணன்
செல்வராஜ்
...

கருத்துகள்

மணியன் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் கண்ணன்,
என் பதிவை குறிப்பிட்டிருப்பதை கண்டு மகிழ்ந்தேன். நன்றிகள்.
எனது இடுகைகளை விட எனது வயதே தங்களை ஈர்த்திருப்பதாக தெரிகிறது :)
நீங்களும் வகைப்படுத்தலில் ஆட்கொள்ளப் பட்டுவிட்டீர்களே :))
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
மணியன்,

ஆ! கையும் களவுமாய் மாட்டிக்கொண்டேனே! :-)

வரவேற்புரை ஆற்றும் போது சிலதைச் சொல்வதில்லையா? அதுதான்; "இடுகைளை விட" என்பதற்கு இங்கே(வரவேற்புரையில்) இடமில்லை. (குப்புற விழுந்தாலும்...)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க