முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு வாழ்க்கைக் குறிப்பு

திங்கள் முதல் வெள்ளிவரை நாள்தொடங்கி முன்னிரவு வரை அலுவலக அர்ப்பணிப்பு. காபி டம்ப்ளரைக் கழுவாததில் இருந்து, அம்மாவை 'செக்கப்'புக்கு கூட்டிப்போகாதது வரைக்கும் இது தான் சாக்கு. வேறெதற்கும் நேரமின்றி வேறெதிலும் நாட்டமுமின்றி உழலும் பொழுதுகள் .இன்று பேசுவதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும் சம்பாஷணைகளை பின்னொருநாள் நடத்த நேரும்போது உறுப்பினர் குறையலாம். அன்பை, கவலையை, உரிமையை, பரிவை வீட்டில் இப்போது நிகழும் சின்ன ஊடாடல்களுக்குள் புகுத்துவது கடினம்; சொல்லாதவை தேங்கி கனக்கும் மனம். எல்லாம் இருந்தமைந்த பின்பு வாழ்க்கையை விரும்பிய படி வாழவென்று, அலை ஓய்ந்தபின் கடலிலே குளிக்கும் ஆசை. மறந்துவிட்ட நண்பனின் திருமண அழைப்புக்கு மன்னிப்பு மடலேனும் எழுதலாமே என்று தோன்றும் போது வருகிறது அவன் மகளின் முதல் பிறந்தநாளுக்கான அழைப்பு. இதுவும், தாடியில் தென்படும் நரைகளுமே ஒன்றும் சாதிக்காத கால ஓட்டத்தின் அத்தாட்சிகள். தினமும் சுவர்க்கோழி கத்தும் வரை டிவி முன் குத்த வைத்து, 'சனி, ஞாயிறு ரெண்டு நாள் தான் கிடைக்குது தூங்க - பாவம்' என்று தூங்கிய நேரம் போக வாரயிறுதி வாரயிறுயாய்த் தீரும் வாழ்க்கை.

குழந்தை மனசுக்காரன்

'மானத்தைக் காக்கவோர் நாலு முழத்துணி வாங்கித் தர வேணும் தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கித் தரவும் கடனாண்டே ! ' (கண்ணன் என் ஆண்டான்) ஹிந்துவில் நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன்னால் தொண்ணூறு வயது நிரம்பிய பெரியவர் ஒருவர் பாரதியுடனான ஒரு பரிச்சியத்தைப் பகிர்ந்து கொண்டார். (சுட்டியைத் தேடித் தோற்றுவிட்டேன் - இதை எழுதியவர் பெயர், மற்றும் விபரங்கள் நினைவில்லை. சம்பவம் மட்டும் மனதிற்பதிந்து விட்டது) இவரின் சிறுவயதில் திருவல்லிக்கேணியில் பாரதியின் வீட்டை அடுத்த தன் உறவினர் (மாமா என்று நினைவு) வீட்டில் சில காலம் இருந்திருக்கிறார். ஒருநாள் செல்லம்மாள் இவரின் மாமியிடம் ஏதோ கடன் கேட்டு வரும்போது, பாரதி அந்த மாதத்திற்கான செலவிற்கு சம்பளப் பணம் ஒன்றும் தரவில்லையென்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டிருக்கிறார். மாமா உடனே பாரதியிடம் சென்று விசாரிக்கிறார். பாரதி அன்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது ரிக்ஷாவில் வந்திருக்கிறார். ஒரு திசை திருப்பு: பாரதியார் கதைகள் என்ற திரட்டு கிடைத்தால் கட்டாயம் படியுங்கள். அவர் தினசரி வாழ்க்கையை அறியத்தரும் ஒரு சின்ன ஜன்னல் இது! பல சுவாரசியமான விடயங்கள் உள