முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிலாக்கணம்

இரண்டு மாதங்களுக்கு முன்னால் அது நிகழ்ந்தது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் என் மோட்டார் சைக்கிள் யாரோ கழுத்தைத் திருகியது போல நின்றுவிட்டது. கடந்த ஒருவருடமாகவே அவ்வப்பொழுது சின்னதாக பிரச்சனைகள் கொடுத்து வந்தாலும், இப்படி ஒன்றும் செய்ய இயலாத படிக்கு நின்றதில்லை. ஐயாயிரம் ரூபாய் கொடுத்துப் பழுது பார்த்தேன். ஒரு மாதம் ஓடியபின் மீண்டும் கழுத்து நெரிபட்டது போல நின்று விட்டது. இதை இன்னும் பழுது பார்த்து வைத்துக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும், அது பண விரயமே என்று தோன்றுகிறது. பத்து வருடங்கள், அறுபதினாயிரம் கிலோமீட்டர்கள்... மிகவும் நன்றி கெட்டவனாக உணருகிறேன் - இதைப் பிரிவதற்குத் தயாராகிவிட்டேன். ஒரு அற்புத விளக்கு கையைவிட்டுப் போவது போலவும், இதனால் இதுவரை கிட்டிய அதிட்டங்களும் இனிமேல் கிட்டாது போலவும் தோன்றுகிறது. எல்லா நல்ல விடயங்களுக்கும் முடிவு உறுதி போலும். இதைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம் பழைய வேகத்தையும் உற்சாகத்தையும், வேட்கையையும் மீட்க முடியும் என்று நம்புகிறேன். எவ்வளவு முயன்றாலும் மீண்டும் கிட்டுமோ இளமை? (எனக்கும் அதற்கும்) வாழ்க்கையின் கடிவாளமிப்படாத பகுதியின் முடிவை

செத்த பாம்பு

நேற்று இரவு பொதிகையில் 'அலசல்' நிகழ்ச்சியில் அசோகமித்திரன் செவ்வி. 'அந்த'க் கேள்வியும் கேட்கப்பட்டது. ஏதோ வழவழாவென்று எதையோ சொல்லிவைத்தார், பாவம். நாய்ப் பேச்சிற்குப் பிறகு ஜெயகாந்தன் நிலைமையும் மோசமாகிவிட்டது. ஈழநாதன் ஜெயகாந்தனின் இந்தப் பேச்சை தூசு தட்டி எடுத்திருக்கிறார். ஜெயகாந்தனும் பாவம் தான். இலக்கியவாதிகள் இன்று இரு தளங்களில் இயங்குபவர்கள் என்று தோன்றுகிறது. நிஜமான, சுய உணர்வுடன் இயங்கும் ஒரு சகஜ நிலைத் தளம். இன்னொன்று, அவர்களுக்கு வசப்பட்ட ஒரு கலையை, ஒழிந்த நேரத்தில் பயிலவும், அதனால் மனநிறைவும் ஓய்வும் பெறவோ, பின்னர் அதையே வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யவோ இயங்குவது - ஒரு கற்பனைத் தளம். அவர்களின் வாழ்க்கை நெறி, சமூக விழுமியங்கள் பற்றிய பார்வைகளை அவர்கள் படைப்புக்களில் அவ்வப்போது முன்வைப்பார்கள். வாசகனுக்கு ஒரு எழுத்தாளனின் இவ்வகை வெளியீடுகள் அந்த எழுத்தாளன் சார்ந்துள்ள நெறிகளை, விழுமியங்களைக் குறித்த ஒரு பார்வையை, காலப்போக்கில் உருவாக்கிக் கொள்ளப் பயன்படுகிறது. இது வாசகன் உருவாக்கிக் கொள்ளுகிற கருத்தேயன்றி எழுத்தாளன் சார்ந்த நெறி குறித்த துல்லியமான கணிப்பன்று.

கற்றுக்குட்டி

இன்றைக்கு ஆட்டோவில் அலுவலகம் வந்தேன். ஆட்டோ மீட்டரின் துடிப்பும் என் இதயத் துடிப்போடு இணைந்து பதற்றமாகக் கழிகின்றன நாற்பது நிமிடங்கள். அறுபத்தி ஐந்து ரூபாய் காட்டியது மீட்டர். பதினொன்று கி.மீட்டர்களுக்கும் குறைவான தூரம். ஐம்பத்து ஐந்து ரூபாய் சரியாக இருந்திருக்கும். ஒரு புறம் ஆட்டோக்காரனது வாழ்க்கையை நினைத்துக் கொண்டாலும், நான் ஏமாற்றப் படுகிறேன் என்பது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தைக் கொடுக்கிறது. சரியாக ஓடும் மீட்டர் பொருத்தப் பெற்ற ஆட்டோக்களில் இரண்டு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் வரை நான் சில்லறை பெற்றுக் கொள்வதில்லை. நண்பியுடன் ஆட்டோவில் போகும்போது அவள் பேசுவதைக் கேட்காமல் நான் மீட்டரை எரித்துவிடுவது போலப் பார்ப்பதில் அவள் இப்போதெல்லாம் அதோ பார் அம்புலிமாமா என்கிற ரீதியில் என் கவனத்தை மீட்டரினின்றும் திருப்புகிறாள். என்னை மட்டும் இந்த அற்பவிடயம் இவ்வளவு பாதிப்பதேன் என்று யோசித்திருக்கிறேன். *** மத்தியத் தர வர்க்கத்தின் பிறவிப் பயனை அடையப் போகிறேன். ஆம் - ஒரு வீடு கட்டப்போகிறேன். சுதந்திரம், மற்றும் பாதுகாப்பு கருதி தனி வீட்டுக் குடியிருப்புகள் கட்டித்தரும் நிறுவனம் ஒன்றில் சதுர அடிக்

கோபாலி...

தமிழ் எழுத்தாளர்களில், இசையை அறிந்து, அதை எழுத்தோடு கலந்து (சில சமயம் நாம் ரசிப்பது இசையா தமிழா என்று இனம் கண்டுபிடிக்க முடியாமல் போவது உண்டு), அல்லது இசையைக் கதைக் களனாகக் கொண்டு, அல்லது சொல்வது எதுவானாலும், இசை சம்பந்தமான ஒரு காட்சியை இணைப்பது என்று செய்பவர் பலர். நான் படித்ததில் கல்கி, தி.ஜா போன்றோர் இதை மிகவும் அனுபவித்துச் செய்வதாக எனக்குத் தோன்றுவதுண்டு. இந்த அனுபவத்தைக் கொடுப்பவர்களில் தி.ஜானகிராமனைத் தான் நான் முதன்மையாகக் குறிப்பிடுவேன். அவரின் சில வரிகளைக் கூர்ந்து படித்தால் ஒரு தம்புரா ஒலியின் ரம்மியம் நம்மைச் சூழ்வது போல் இருக்கும். அவர் வருணிக்கும் தஞ்சை, கும்பகோணமும், காவிரியும், சங்கீத மணமும், கதைமாந்தரும் (அந்த வசீகரமான, வலிமையான பெண் கதாபாத்திரங்களும்) என்னை வேறு உலகிற்கு இட்டுச் செல்லும். அந்த மாதிரியான அனுபவம் ஒன்று எனக்கு மரப்பசு படிக்கும்போது ஏற்பட்டது. பாம்பின் கால் பாம்பறியும் என்பப்போல, தி. ஜா என்ற கலைஞன் கோபாலி என்ற கலைஞனின் உள்ளத்து உணர்ச்சிகளை உணர்ந்து, அந்தப் பாத்திரமேற்று, உள்திறந்து காட்டுவபோல் எனக்குப் பட்டது. "ஆகா", என்று தன்னை மறந்து ஒரு வார்த

Save Darfur!

ருவாண்டாவிற்குப் பிறகு, அதை விட பல மடங்கு கொடூரமான இனப்படுகொலைகள் சுடான் நாட்டின் டர்ஃபூர் பகுதியில் நடந்து வருகிறது. சுடான் அரசின் பின்பலத்தில் ஜஞ்சாவீத் என்ற கும்பல் கருப்பின சாதாரணர் மீது வன்முறையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பெண்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பாலியல் வன்முறைக்கும், ஆண்கள், சிறுவர்கள் படுகொலைக்கும் ஆளாகிறார்கள். இதுவரையில் பாலியல் வன்கொடுமை ஒரு இன அழிப்பிற்கு முக்கியமான ஆயுதமாகப் பயன் படுத்தப் படுவது நான் கேள்வியுறாதது. கடந்த இரண்டு வருடங்களாக நடந்தேறி வரும் இந்த கோரத்திற்கு சுடான் அரசு மறைமுகமாகத் துணை போவதுடன், உதவிக்குச் செல்லும் மனிதாபிமான அமைப்புக்களுக்கு உரிய ஒத்துழைப்பையும் நல்குவதில்லை. சர்வதேச அளவில் ஓட்டரசியல் நடத்தும் வல்லரசுகளுக்கு இதில் தலையிட அரசியல் ஆதாயம் இல்லாமல் போகலாம். ஐ நா வின் மென்மையான வலியுறுத்தல்கள் நிலைமையை பெரிய அளவில் மாற்றியமைக்கப் போவதில்லை. மனித உயிர்கள் மிகப் பகிரங்கமாக துச்சமாக மதிக்கப் படுவதும், அவமானப் படுத்தப் படுவதும் மனித உரிமை மீறலின் புதிய எல்லைகளைத் தொடுகின்றனவாகும். ஹோட்டல் ருவாண்டா என்ற திரைப்படம் பார்த்த பிறகே எ

கழுதைப்புலி, துள்ளுமான் வரிசையில்...

ஒரு அருவமான மிருகத்தைப் பற்றிய பதிவிது. எல்லா மென்பொருள் நிறுவனங்கள் போலவும், எங்கள் நிறுவனமும் தகவல் திருட்டைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது - அலுவலகத்தில் அடையாள அட்டை மாலையை எப்பொழுதும் கழுத்தில் தொங்க விடவேண்டும் என்பதில் இருந்து, வக்கீல், மருத்துவரிடம் கூட ரகசியங்களைச் சொல்லக் கூடாது என்று முத்திரைத் தாளில் கையொப்பம் வாங்குவது வரை. இது நிற்க. அலுவலக வாயிலில் அடையாள அட்டை மாலையைக் கழுத்தில் மாட்டிக்கொள்ள மரியாதையுடன் நினைவுறுத்தும் காப்பாளரிடம் அரை விநாடியில் துளிர்த்த கோபத்துடன் சொல்கிறேன் "அய்யா, உள்ளே சென்றதும் நெற்றியில் வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்கிறேன் இந்த அட்டையை". அவர் அதற்கு ஏதோ சமாதானம் சொல்ல வந்ததைப் பொருட்படுத்தாது, முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே நுழைகிறேன். எல்லாம் உள்ளிருக்கும் மிருகம் படுத்தும் பாடு. "எனக்குத் தெரியாதா?" "இவன் யார் சொல்ல?" என்று பலகுரல்களில் அது தன் அதிருப்தியை உணர்த்துகிறது. பல மணிநேரம் கால்கடுக்க நின்று, ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு செய்யும் வேலையின் monotony தரும் அயற்சி எனக்குப் புரியவில்லையா? கொடுத்த வே

புத்தக 'மீம்' - பட்டியல்

மதியின் அழைப்புக்கு நன்றி. புத்தகப் பட்டியல் போடுவது எனக்கு ஒரு உவப்பான பொழுது போக்கு. கைவசம் உள்ள புத்தகங்கள் : 100 - 120 படித்ததில் பிடித்தது: 1. பாரதியார் கதைகள் (உரைநடை, நம்முடன் நேரடியாகப் பேசுவது போன்றது, பாசாங்கற்றது. பாரதியை இன்னும் புரியவைத்தது, நெருங்கச் செய்தது. புதுச்சேரியின் மீது இனம் புரியாத காதல் வரச் செய்தது) 2. வெள்ளிப் பாதசரம் - இலங்கை சிறுகதைகள் தொகுப்பு - செ. யோகனாதன் - தொ. ஆ. (அற்புதமான கதைகள். வேறொரு புலத்தில்,என் மொழி பேசி, என் போல் உடுத்து என்னைப் போல் சிந்திக்கும் ஈழத்தமிழரை, அவரது சந்தோஷங்கள், அவலங்கள் முதலியவற்றை நான் அதுவரை அறிந்திராத அருமையான மொழியில் [தமிழ் இத்தனை இனமமையா!] அறிமுகப்படுத்தியது) 3. மானுடம் வெல்லும், வானம் வசப்படும் - பிரபஞ்சன் ("தமிழில் ஒரு நல்ல சரித்திர நாவல் இல்லையென்ற வசை இனி என்னால் ஒழிந்தது" என்று பிரபஞ்சனே சொன்னதை ஓரளவு ஒப்புக்கொள்ள வைத்தது. பாண்டிச்சேரியின் மீது மேலும் காதல் கொள்ளச் செய்தது) 4. வாடிவாசல் - சி சு செல்லப்பா (என்ன சொல்லுவதென்று தெரியவில்லை) 5. ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா (சுஜாதாவின் படைப்புக்களிலேயே இதைத்