ருவாண்டாவிற்குப் பிறகு, அதை விட பல மடங்கு கொடூரமான இனப்படுகொலைகள் சுடான் நாட்டின் டர்ஃபூர் பகுதியில் நடந்து வருகிறது. சுடான் அரசின் பின்பலத்தில் ஜஞ்சாவீத் என்ற கும்பல் கருப்பின சாதாரணர் மீது வன்முறையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பெண்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பாலியல் வன்முறைக்கும், ஆண்கள், சிறுவர்கள் படுகொலைக்கும் ஆளாகிறார்கள். இதுவரையில் பாலியல் வன்கொடுமை ஒரு இன அழிப்பிற்கு முக்கியமான ஆயுதமாகப் பயன் படுத்தப் படுவது நான் கேள்வியுறாதது.
கடந்த இரண்டு வருடங்களாக நடந்தேறி வரும் இந்த கோரத்திற்கு சுடான் அரசு மறைமுகமாகத் துணை போவதுடன், உதவிக்குச் செல்லும் மனிதாபிமான அமைப்புக்களுக்கு உரிய ஒத்துழைப்பையும் நல்குவதில்லை. சர்வதேச அளவில் ஓட்டரசியல் நடத்தும் வல்லரசுகளுக்கு இதில் தலையிட அரசியல் ஆதாயம் இல்லாமல் போகலாம். ஐ நா வின் மென்மையான வலியுறுத்தல்கள் நிலைமையை பெரிய அளவில் மாற்றியமைக்கப் போவதில்லை. மனித உயிர்கள் மிகப் பகிரங்கமாக துச்சமாக மதிக்கப் படுவதும், அவமானப் படுத்தப் படுவதும் மனித உரிமை மீறலின் புதிய எல்லைகளைத் தொடுகின்றனவாகும்.
ஹோட்டல் ருவாண்டா என்ற திரைப்படம் பார்த்த பிறகே எனக்கு 94-95 களில் நடந்தேறிய ருவாண்டாவின் கோரம் ஓரளவிற்கு இப்போது புரிந்தது. இப்போது அதையும் தாண்டுகின்ற மனித உரிமை மீறல் நம் கண்முன்னே நடந்தேறுகிறது. இதற்கு ஏதேனும் செய்தாக வேண்டும்.
இந்த அநியாயம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவே இப்பதிவு.
நன்றி: திண்ணையில் ஆசாரகீனன் கட்டுரை (டர்ஃபூர் பிரச்சனை குறித்து ஹிந்து மூலமே முதலில் தெரிந்து கொண்டேன். இது குறித்த அவர்கள் தலையங்கமும், அதற்கு இந்திய சுடான் தூதரகம் வெளியிட்ட மறுப்பும் சுமார் 4 மாதங்களுக்கு முன்னால் பிரசுரமாகியது. இதையும் தவிர இப்பிரச்சனை குறித்த மூன்று-நான்கு கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன என்ததை ஒரு தகவலுக்காக மட்டும் சொல்லி வைக்கிறேன்)
சில சுட்டிகள் (ஆசாரகீனன் கட்டுரையில் இருந்து):
Darfur : A Genocide We Can Stop
Save Darfur
கடந்த இரண்டு வருடங்களாக நடந்தேறி வரும் இந்த கோரத்திற்கு சுடான் அரசு மறைமுகமாகத் துணை போவதுடன், உதவிக்குச் செல்லும் மனிதாபிமான அமைப்புக்களுக்கு உரிய ஒத்துழைப்பையும் நல்குவதில்லை. சர்வதேச அளவில் ஓட்டரசியல் நடத்தும் வல்லரசுகளுக்கு இதில் தலையிட அரசியல் ஆதாயம் இல்லாமல் போகலாம். ஐ நா வின் மென்மையான வலியுறுத்தல்கள் நிலைமையை பெரிய அளவில் மாற்றியமைக்கப் போவதில்லை. மனித உயிர்கள் மிகப் பகிரங்கமாக துச்சமாக மதிக்கப் படுவதும், அவமானப் படுத்தப் படுவதும் மனித உரிமை மீறலின் புதிய எல்லைகளைத் தொடுகின்றனவாகும்.
ஹோட்டல் ருவாண்டா என்ற திரைப்படம் பார்த்த பிறகே எனக்கு 94-95 களில் நடந்தேறிய ருவாண்டாவின் கோரம் ஓரளவிற்கு இப்போது புரிந்தது. இப்போது அதையும் தாண்டுகின்ற மனித உரிமை மீறல் நம் கண்முன்னே நடந்தேறுகிறது. இதற்கு ஏதேனும் செய்தாக வேண்டும்.
இந்த அநியாயம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவே இப்பதிவு.
நன்றி: திண்ணையில் ஆசாரகீனன் கட்டுரை (டர்ஃபூர் பிரச்சனை குறித்து ஹிந்து மூலமே முதலில் தெரிந்து கொண்டேன். இது குறித்த அவர்கள் தலையங்கமும், அதற்கு இந்திய சுடான் தூதரகம் வெளியிட்ட மறுப்பும் சுமார் 4 மாதங்களுக்கு முன்னால் பிரசுரமாகியது. இதையும் தவிர இப்பிரச்சனை குறித்த மூன்று-நான்கு கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன என்ததை ஒரு தகவலுக்காக மட்டும் சொல்லி வைக்கிறேன்)
சில சுட்டிகள் (ஆசாரகீனன் கட்டுரையில் இருந்து):
Darfur : A Genocide We Can Stop
Save Darfur
கருத்துகள்