நேற்று மதியம் நண்பர் ஜாலி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் - யோகி மாமா நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். நான் சாதாரணமாகச் செல்பேசியை உபயோகிப்பதில்லை. இப்போதெல்லாம் விமானத்தில் ஏறி சென்னையில் இறங்கும் போது என்னைக் கொணர வருபவர்கள் அழைப்பதற்காக இதை வைத்திருக்கிறேன். என் ஏழு வயது மகன் பராந்தகன் தான் குறுஞ்செய்தி வந்த விபரத்தைக் கூறினான். நான் உடனடி காரில் ஏறிக்கொண்டு கொச்சி விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்ததால் கிளம்பிவிட்டேன். இன்று காலை ஜாலி மறுபடியும் தொலைபேசி யோகி மாமா காலமாகிவிட்டதைத் தெரிவித்தார். நான் மலையாள இயக்குனர் பிஜாயோடு இருந்தேன் - இருவரும் யோகியின் இழப்பை துக்கம் கொண்டாடினோம்.
யோகி நெகிழ்த்தவைக்கும் கலைக்குச் சொந்தக்காரர். ஜாலியின் சமீபத்திய கட்டுரை ஒன்றே யோகியின் கண்டுகொள்ளப்படாத கடைசி நாட்களில் அவரது தன்னம்பிக்கையை மீட்டு, தன்னை மாபெரும் கலைஞனாக கருதிக்கொள்ள வைத்தது. அந்த வகையில் இக்கலைஞனை ஒற்றைக்கட்டுரையில் மீட்டெடுத்த பெருமை ஜாலியைச் சேரும். அதற்காக அவருக்கு என் நன்றிகள். மிகையுணர்ச்சிக்கும், கலையடர்த்திக்கும் இடைப்பட்ட ஒரு மெல்லிழையை யோகி பிடித்துக் கொண்டார். இதனாலேயே இவர் சாமானியர்களின் கொண்ட்டாட்டத்திற்கு உரியவராகிறார். ஆழ்ந்த கலையுணர்ச்சியின் தர்க்கத்தையோ, கலையும் வாழ்க்கையும் இணையும் அரிதான புள்ளிகளையோ கண்டுகொள்ள முடியாதவர் இவர் என்று புறவயமாகச் சிந்திப்பவர் எவரும் எளிதில் தெரிந்துகொள்ளலாம். இவரின் கலைவெளிப்பாடுகள் அழுத்தமில்லாத மெல்லுணர்ச்சிகளால் ஆனது என்று ஜாலி தனது கட்டுரையில் எழுதியிருப்பார். கலையாளுமை நுகர்வுப் பரப்பை அணுகும் இந்த நுண்ணிய சரடை ஜாலி போல யாரும் படம் பிடித்துக் காட்டியதில்லை. தமிழ்ச் சூழலில் இது பற்றிய உரையாடல்களோ அலசல்களோ ஜாலிக்கு முன்னால் எவரும் செய்ததில்லை. ஜேம்ஸ் பாஸ்வெல் சாமுவேல் ஜான்ஸன் என்ற கலைஞனின் வாழ்க்கையை ஆவணப்படுத்திய "ஜான்ஸனின் வாழ்க்கை" மட்டுமே ஜாலியின் கட்டுரைக்கு இணையானது.
யோகியின் மறைவு ஒரு மாபெரும் இழப்பு.
- அ.கு.
யோகி நெகிழ்த்தவைக்கும் கலைக்குச் சொந்தக்காரர். ஜாலியின் சமீபத்திய கட்டுரை ஒன்றே யோகியின் கண்டுகொள்ளப்படாத கடைசி நாட்களில் அவரது தன்னம்பிக்கையை மீட்டு, தன்னை மாபெரும் கலைஞனாக கருதிக்கொள்ள வைத்தது. அந்த வகையில் இக்கலைஞனை ஒற்றைக்கட்டுரையில் மீட்டெடுத்த பெருமை ஜாலியைச் சேரும். அதற்காக அவருக்கு என் நன்றிகள். மிகையுணர்ச்சிக்கும், கலையடர்த்திக்கும் இடைப்பட்ட ஒரு மெல்லிழையை யோகி பிடித்துக் கொண்டார். இதனாலேயே இவர் சாமானியர்களின் கொண்ட்டாட்டத்திற்கு உரியவராகிறார். ஆழ்ந்த கலையுணர்ச்சியின் தர்க்கத்தையோ, கலையும் வாழ்க்கையும் இணையும் அரிதான புள்ளிகளையோ கண்டுகொள்ள முடியாதவர் இவர் என்று புறவயமாகச் சிந்திப்பவர் எவரும் எளிதில் தெரிந்துகொள்ளலாம். இவரின் கலைவெளிப்பாடுகள் அழுத்தமில்லாத மெல்லுணர்ச்சிகளால் ஆனது என்று ஜாலி தனது கட்டுரையில் எழுதியிருப்பார். கலையாளுமை நுகர்வுப் பரப்பை அணுகும் இந்த நுண்ணிய சரடை ஜாலி போல யாரும் படம் பிடித்துக் காட்டியதில்லை. தமிழ்ச் சூழலில் இது பற்றிய உரையாடல்களோ அலசல்களோ ஜாலிக்கு முன்னால் எவரும் செய்ததில்லை. ஜேம்ஸ் பாஸ்வெல் சாமுவேல் ஜான்ஸன் என்ற கலைஞனின் வாழ்க்கையை ஆவணப்படுத்திய "ஜான்ஸனின் வாழ்க்கை" மட்டுமே ஜாலியின் கட்டுரைக்கு இணையானது.
யோகியின் மறைவு ஒரு மாபெரும் இழப்பு.
- அ.கு.
கருத்துகள்
-CC