முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெங்களூர் டயரி - 3

எனக்கு சந்தோஷ் குருவுடன் பேசுவது என்பது ஒரு உரையாடல் இல்லை. இந்த மாதிரிப் பேச ஒரு ஆள் கிடைத்தானே என்று, நான் வார்த்தைகளை அவர் மீது வாந்தியெடுப்பேன். அவருக்கு நல்ல பொறுமை. இதைப் பின்னால் நானே யோசித்துப் பார்த்தபோது கிளைத்துக் கிளைத்துப் பரந்த பேச்சில் கோர்வையாக ஒரு இழைகூட இருக்காது. கிடைக்கும் இரண்டு மணிநேரத்தில் எல்லாவற்றையும் பேசிவிட வேண்டும் என்ற நோக்கிலோ என்னவோ தாவித் தாவிப் போகும் பேச்சில் எந்த ஒரு விஷயமும் மையச் சரடுக்கு மீள்வதில்லை. எல்லா விஷயங்களும் ஆங்காங்கே தொக்கி நிற்கும்.

***

இப்படியாகப் போனவாரம் ஒரு இழை நவீன ஓவியங்கள், நாடகங்கள், எழுத்து, இவற்றில் குறியீடுகளைப் (symbolism?) புரிந்து கொள்ளுதல் பற்றி நீண்டது. ஒரு விஷயத்தை எந்த முறையாலும் முழுமையாக, நம் திருப்திக்கேற்ப வெளிக்காட்ட முடியாதது எவ்வளவு அவஸ்தையைக் கொடுக்கிறது என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்க முடிகிறது. மொழி extensible இல்லை. அதை ஒரு வெளிக்காட்டு முறையாகப் பயன் படுத்தும் போது எழுத்துகள் தரும் மேலார்ந்த பொருள்களுக்கு அப்பால் ஒன்ற உணர்த்த அந்த basic set ஐ வைத்துக் கொண்டே தகிடுதத்தம் பண்ண வேண்டியிருக்கிறது. சாதாரணமானவற்றைத் தாண்டிச் சிலவற்றைச் சொல்லத் தேவை இருப்பவர்களுக்கும், அம்மாதிரி விஷயங்களைக் கேட்டுக் கொள்ள விழைபவர்களுக்கும், எப்படியோ இந்த protocol synch ஆகிறது. சன்னாசியின் இந்தப் பதிவைப் பார்த்து பிரமிப்பாக இருந்தது. ஆனால் ப்ரத்யேக மொழிக்கான (Private Language) தேவைகள் புரிகிறதே ஒழிய, அம்மொழிகளையும் இன்ன பிற குறியீடுகளையும் கண்டு கொள்ள முடிவதில்லை. எழுத்துக்களைப் பார்த்துப் பார்த்து எனக்கு இன்னும் சலிக்கவில்லை போலும். அதனால தான் எழுதப்பட்டவைகளையே ஒரு விடமுடியாத ஆசையுடன் பார்க்கிறது போல இருக்கிறது. எழுத்துக்களும், உத்திகளும், எதைக் குறிக்கிறதோ அதை நேராகப் படிக்க, உணர, இந்தக் கருவிகளின் பால் உள்ள மோகத்தை இன்னும் தாண்ட முடிவதில்லை. 'வார்தைகளின் வசீகரம்' எனக்கு அவைகளின் உடல்மீதே - ஆவியின் மீது இல்லை!

***

சந்தோஷ் குருவின் சகவாச தோஷத்தில் பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் நான்கு வெங்கட் சாமிநாதன் புத்தகங்களும், ஆதவனின் காகித மலர்களும் வாங்கினேன். பர்ஸை எவ்வளவு காலியாக வைத்திருந்தும், கிரெடிட், டெபிட் என்று என்ன அட்டையாக இருந்தாலும் தேய்த்துக் கொள்வோம் என்று அங்கே சொல்வார்கள் என்று தெரியாமல் போயிற்று. முத்துலிங்கத்தின் ஒரு கட்டுரைத் தொகுப்பும் வாங்கினேன். காவ்யா பதிப்பகம் கடை விரிக்காதது ஆச்சரியமாக இருந்தது. சன்னாசியின் மேற்சொன்ன பதிவைப் படித்ததில் இருந்து நகுலனின் தொகுப்பை வாங்கிவிட வேண்டுமென்று இருந்தேன். காவ்யாவின் வெளியீடுகளை காலச்சுவடு ஸ்டாலில் வைத்திருந்தார்கள். நகுலனின் கவிதைத் தொகுப்பு மட்டுமே இருந்தது - சத்தமில்லாமல் அதை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டேன். கிழக்கு பதிப்பகத்தில் இருந்தவரிடம் "பத்ரி திரும்பிப் போயிட்டாரா" என்று பெரிய 'இவன்' மாதிரி நான் விசாரித்தது எனக்கே அப்புறம் சிரிப்பை வரவழைத்தது.

கருத்துகள்

ஒரு பொடிச்சி இவ்வாறு கூறியுள்ளார்…
//...'வார்தைகளின் வசீகரம்' எனக்கு அவைகளின் உடல்மீதே - ஆவியின் மீது இல்லை!//
அழகா இருக்கு!
--------
ஆவியின்மீதும் வசீகரம் இருக்கிறது.
என்றாலும்
/வார்த்தைகளை வாந்தியெடுக்க/ நண்பர்கள் இருக்கும்போது private language பற்றிய தேவை இருக்காதோ...!
;-)
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
பொடிச்சி,

நன்றி!

வாந்தி அதிகமானால் நண்பர்கள் நம்மை வசைபாட அதி-Private Language அவசியமே!
:-)
Jayaprakash Sampath இவ்வாறு கூறியுள்ளார்…
//பேச ஒரு ஆள் கிடைத்தானே என்று, நான் வார்த்தைகளை அவர் மீது வாந்தியெடுப்பேன்.//

ரைட்... :-)

//சன்னாசியின் இந்தப் பதிவைப் பார்த்து பிரமிப்பாக இருந்தது ......................
................................................ எனக்கு அவைகளின் உடல்மீதே - ஆவியின் மீது இல்லை! //

உங்களுக்குச் சொல்ல வருது... சொல்லிட்டீங்க... எனக்கு வரலை.. அதனால், உங்க பின்னூட்டுப் பொட்டியில வந்து ஆமாஞ்சாமின்னு ஒத்து ஊதறேன்...
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
// உங்களுக்குச் சொல்ல வருது... சொல்லிட்டீங்க //

பிரகாஷ்,

ஒண்ணும் புரியலைன்னு தானே சொல்லியிருக்கேன். எனக்கு இதை ரொம்ப நல்லாச் சொல்ல வரும் - பல வருடப் பயிற்சி

:-)
Santhosh Guru இவ்வாறு கூறியுள்ளார்…
//இந்த மாதிரிப் பேச ஒரு ஆள் கிடைத்தானே என்று, நான் வார்த்தைகளை அவர் மீது வாந்தியெடுப்பேன். அவருக்கு நல்ல பொறுமை. //

ஆங்.. நானும் உங்களைப் பத்தி இப்படித்தானே நினைச்சுக்கிட்டு இருந்தேன் :).

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க