ஒரு பேருந்து நிறுத்தத்தில் காலியிடமுள்ள பேருந்திற்காய்ப் பல நிமிடம் காத்திருக்கிறேன். பல பேருந்துகளை வேண்டுமென்றே தவறவிடுகிறேன். இப்படி எங்கும் செல்லாமல், வரும் பேருந்துகளிலும் ஏறாமல் நேரம் ஓடுகிறது. இங்கே சில நேரம் நின்றுவிட்டால் ஒரு தொல்லை - இவ்வளவு நேரம் செலவு செய்த பிறகு காலியான பேருந்தில் போகவில்லையானால் காத்திருந்து நேரம் கடத்தியதில் அர்த்தமில்லை, அதனால் கடைசிப் பேருந்தானாலும் கூட்டமிருந்தால் ஏறுவதில்லை. ஒன்றும் பயனின்றி நடந்தே செல்ல முடிவு செய்கிறேன். நேரத்தோடு போகுமிடம் போய்ச்சேரும் நிர்பந்தம் எனக்கில்லை. கூட்டமிகுதியான பேருந்தில் ஏறமாட்டேன் என்ற பிடிவாதமே ஓங்குகிறது. ஒருவேளை பேருந்துகளில் ஏறுவதில்லை என்ற தீர்மானம் முதலிலேயே இருந்திருந்தால் பல நிமிடங்களை நிறுத்தத்தில் விரயம் செய்யாமல் நடக்கத் துவங்கியிருக்கலாம். ஆனால் காலியான பேருந்து ஒன்று வரும் என்கிற நப்பாசை விடுவதில்லை. இப்படி நடந்து போகும்போது ஒரு காலியான பேருந்து என்னைத் தாண்டிச் சென்றால் தப்பான முடிவெடுத்தலுக்கு மனது என்னைக் குற்றம் சொல்லி ஏளனம் செய்கிறது. நேரத்தோடு போகும் நிர்பந்தம் இல்லையானாலும், ஒன்றும் செய்யாமல் நேரவிரயம் செய்வது எனக்குச் சோர்வையே அளிக்கிறது.
அதே வண்டி நிறுத்தத்தில் ஒரு தீர்மானத்துடன் பலர் இருக்கிறார்கள். வரும் முதற் பேருந்தின் ஆட்கூட்டத்தில் அவர்களைத் திணித்துக் கொள்கிறார்கள். பின்னால் ஒரு காலியான பேருந்து வருமோ என்கிற எதிர்பார்ப்போ, வரப்போகும் ஒரு வாய்ப்பைத் தவறவிடும் கவலையோ அவர்களுக்கு இல்லை. போகுமிடத்தை விரைவில் அடைய அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்க முயலாத அவர்களைப் பார்த்து நான் பொறாமைப் படுகிறேன். அவர்களுக்கு எது முக்கியம் என்பதில் அவர்கள் திண்ணமாய் இருக்கிறார்கள்.
இந்த விஷயங்களை மேலிருந்து ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் நேர விரயத்தின் அர்த்தமின்மை நேர உபயோகத்திலும் இருப்பது தெரிகிறது - முக்கியமான மற்றும் முக்கியமல்லாதவை என்று பொதுவில் வகைப்படுத்தப்பட்ட யாவும் மிகச் சிறியதாய், பயனற்றவையாய்த் தோன்றுகிறது. நடப்புகளில் இருந்து விலகி இப்படிக் கற்பனைச் சிறகை விரித்துப் பறந்தால் இப்படியாகத்தான் தோன்றுகிறது.
ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்கென வந்திருக்கிறேன். போட்டியின் விதிமுறைகள் விசித்திரமானவை: இலக்கு எதுவென்று சொல்லப்படாது; எவ்வளவு நேரத்தில் போய்ச் சேரவேண்டுமென்ற விபரம் இல்லை; எப்படிச் செல்லவேண்டுமென்பதில் கட்டுப்பாடுமில்லை. பயணப் போட்டி என்பது மட்டும் தெரிகிறது. ஒரு பேருந்து நிறுத்தத்தில் காலியிடமுள்ள பேருந்திற்காய்ப் பல நிமிடம் காத்திருக்கிறேன். பல பேருந்துகளை வேண்டுமென்றே தவறவிடுகிறேன்...
அதே வண்டி நிறுத்தத்தில் ஒரு தீர்மானத்துடன் பலர் இருக்கிறார்கள். வரும் முதற் பேருந்தின் ஆட்கூட்டத்தில் அவர்களைத் திணித்துக் கொள்கிறார்கள். பின்னால் ஒரு காலியான பேருந்து வருமோ என்கிற எதிர்பார்ப்போ, வரப்போகும் ஒரு வாய்ப்பைத் தவறவிடும் கவலையோ அவர்களுக்கு இல்லை. போகுமிடத்தை விரைவில் அடைய அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்க முயலாத அவர்களைப் பார்த்து நான் பொறாமைப் படுகிறேன். அவர்களுக்கு எது முக்கியம் என்பதில் அவர்கள் திண்ணமாய் இருக்கிறார்கள்.
இந்த விஷயங்களை மேலிருந்து ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் நேர விரயத்தின் அர்த்தமின்மை நேர உபயோகத்திலும் இருப்பது தெரிகிறது - முக்கியமான மற்றும் முக்கியமல்லாதவை என்று பொதுவில் வகைப்படுத்தப்பட்ட யாவும் மிகச் சிறியதாய், பயனற்றவையாய்த் தோன்றுகிறது. நடப்புகளில் இருந்து விலகி இப்படிக் கற்பனைச் சிறகை விரித்துப் பறந்தால் இப்படியாகத்தான் தோன்றுகிறது.
ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்கென வந்திருக்கிறேன். போட்டியின் விதிமுறைகள் விசித்திரமானவை: இலக்கு எதுவென்று சொல்லப்படாது; எவ்வளவு நேரத்தில் போய்ச் சேரவேண்டுமென்ற விபரம் இல்லை; எப்படிச் செல்லவேண்டுமென்பதில் கட்டுப்பாடுமில்லை. பயணப் போட்டி என்பது மட்டும் தெரிகிறது. ஒரு பேருந்து நிறுத்தத்தில் காலியிடமுள்ள பேருந்திற்காய்ப் பல நிமிடம் காத்திருக்கிறேன். பல பேருந்துகளை வேண்டுமென்றே தவறவிடுகிறேன்...
கருத்துகள்
---
வழக்கமான உங்கள் இனிய எழுத்து நடை மிகவும் கவர்கிறது. கிளம்பிய இடத்திலேயே வந்து முடித்திருக்கும் சுழற்சியும் நன்றாக இருக்கிறது.
நல்லன விழைதலும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் இன்னும் எழுதுவதற்கு மட்டுமல்லாமல், பொதுவில் வாழ்க்கையிலும் பெரும் நம்பிக்கை பெற உதவுகிறது. சக மனிதரின் அங்கீகாரம் - எந்த வகையினதாய் ஆனாலும் - நம் மேல் நமக்கே மரியாதை வரச் செய்யும் ஒன்று.
தொடர்ந்த ஊக்கத்திற்காய் உங்களுக்கு நன்றி!
நன்றி!
//இந்த விஷயங்களை மேலிருந்து ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் நேர விரயத்தின் அர்த்தமின்மை நேர உபயோகத்திலும் இருப்பது தெரிகிறது - முக்கியமான மற்றும் முக்கியமல்லாதவை என்று பொதுவில் வகைப்படுத்தப்பட்ட யாவும் மிகச் சிறியதாய், பயனற்றவையாய்த் தோன்றுகிறது.//
எனக்கு இந்த எண்ணம் வேறு விதத்தில் தோன்றும்: இன்றைக்கு அதிமுக்கியமாக தோன்றும் பல விஷயங்கள் சில வருடங்களில் அர்த்தமற்று போகலாம் என்று...
நன்றி. நீங்க சொல்றதும் சரிதான்.
Continue...
Wishes...