முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிர்க் காதலன் இப்படிச் செய்தானே!

ஜாவளி என்கிற கருநாடக இசை / பாடல் வடிவம் பற்றிச் சொல்லுகையில், இவை சிற்றின்பத்தைத் தூண்டும் வகையில் அமைந்த, வெளிப்படையான வழக்குமொழியில் அமைந்த பாடல்கள் என்று பகுக்கிறார்கள். ஏதோ தீண்டத்தகாததாகவும், பெரிய தாக்கத்தை உண்டுபண்ணாததாகவும் கருதப்படும், மற்றும் கச்சேரிகளில் ‘துக்கடா’ வாகப் பாடப்படும் இவைகளை நான் நேசிக்கிறேன். மனிதர்கள் புனையும் எதுவும் மனித உறவுகளின் இழையைக் கொண்டிருப்பதில் வியப்பில்லைதானே?  தாய்-சேய், தந்தை-தமையன், ஆண்டான் - அடிமை, காதலன் - காதலி இப்படி ஏதோ ஒரு மனிதர் உறவைச் சொல்லியே அடியார்கள் பலரும் இறையைப் பாடியிருக்கிறார்கள்.

இயல்பான மனித உணர்வாக எல்லோரும் தத்தம் சொந்த அனுபவங்களுடன் பொருத்திப் பார்துக்கொள்ள ஏதுவானதும், அதனாலேயே மனதிற்கு நெருக்கமானதாக இருப்பதுமான  காதல், ஊடல், பிரிவாற்றாமை என்பவற்றை பெருமைபடுத்துவது (glorify)ஆகாதது என்று இருந்துவருகிறது. எப்போதும் உணரும், வாழ்ந்து திளைக்கும் இவ்வுணர்ச்சிகளை (இதைத் தனியாகப் பெரிதுபடுத்திப்பாட என்ன இருக்கிறது என்று) எதற்கு மிகையுணர்வின்பாற்படுத்துவது (to romanticize) என்று விட்டுவிட்டார்கள் போலும். எந்தக் கலையிலும் பெரும் பாடுபொருளாகக் காதல் இல்லாததும் (அவ்வாறு கொண்டிருக்கும் சினிமா போன்றவற்றை இகழ்வதும்) இறையுணர்ச்சி, பேரின்பம் முதலியன புனிதப் பிம்பம் பெறுவதும் எனக்குச் சகிக்க முடியாததாக இருக்கிறது. குறிப்பாகக் கருநாடக இசையில் இது மனிதர்களை விலத்திவைக்கும் போக்கிற்கும் இடமளிக்கிறது. இசையும், பாடல் வரிகளும், அவைதரும் பொருளும், இராகங்களில், தாளங்களில் கலைஞர்கள் செய்யும் வித்தைகள் மூலம் மனத்திற்கும், அறிவுக்கும் ஒருங்கே இன்பமளிக்கக் கூடியதாகவே தற்காலக் கருநாடக இசைவடிவம் இருக்கிறது. இதிலே பாடல்வரிகள் தமிழிலே இருத்தல் புனிதத் தன்மையைக் கெடுத்துவிடும் என்று ஒரு போக்கு இருந்தது. இப்போது எதற்கும் இருக்கட்டும் என்று ’தமிழ்’ப்பாடல்களும் பாடப் படுகின்றன.

மொழி, பாடுபொருள் என்று பலவகையியே புனிதத் தன்மையைக் காப்பாற்றுவதிலேயே இதனைப் போற்றுபவர்கள் குறியாயிருக்கிறார்கள். ஏன் அப்படிச் செய்யவேண்டும்? மனிதர் நேர்கொள்ளும் அன்றாட நடப்புகள் பாடுபொருளாவதிலே என்ன தவறு? தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல இறைப்பாடல்களும் இருக்கலாம். இப்படியான புதிய வெளி ஜாவளிகள் மூலம் சாத்தியமாகிறது. தருமபுரி சுப்பராயர் இயற்றிய இந்தத் தெலுங்கு மொழி ஜாவளியைக் கேளுங்கள். (இதை எனக்குத் தெரிந்ததுபோல மொ(மு)ழிபெயர்த்திருக்கிறேன்)




”தோழி, என்னுயிர்க் காதலன் இப்படிப் படுத்துகிறானே!
இதோ வருகிறேனென்று தேனொழுகப் பேசிவிட்டுப் வேறு பெண்ணுடன் போய்விட்டானே!
முன்பென்னோடு பழகி என் கள்ளங்களை அறிந்தவன் (என்னை) மறந்தானே!”

பிரிவாற்றாமையைக் குரலிலும் பாவனையிலும் பாடலினூடே ஓடும் ஏக்கத்தைச் சரியாகப் பரிமாறுகிறார் இப்பாடகி. இவ்விசை நம் செவிகளிலிருந்து இதயம் நுழைந்து உணர்ச்சிகளின் மையத் நரம்பொன்றை மீட்டுகிறது.. பிரிவுத்துயரில் ஆழ்த்திவிட்டானானலும் அவனைப் பற்றிச் சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும் காதல் இன்னும் வழிந்தோடுகிறது! அவன் மேல் சற்றும் கோபமில்லை; இன்னும் அவன் தன்னிடமிருந்து விலகிச் செல்லுவது ஏனென்று புரியவில்லை; ஆற்றாமை நம்மையும் பீடிக்கிறது. இந்தப் பெண்ணின் துயர் எப்படியும் தீர்ந்துவிடாதா என்று மனது ஏங்குகிறது. இதற்கு உருகினால் என்ன கேடு வந்துவிடப்போகிறது?

இதுபோன்ற பாடல்களை மிகுதியும் கச்சேரிகளில் பாடினால் என்ன? வேதம் - புராணம் - காவியம் என்ற வடமொழிப் பகுப்பிலே இப்படிச் சொல்லுவார்கள்: வேதம் அரிய உண்மைகளை ஆசிரியன் போல போதிக்கிறது. புராணங்கள் இவற்றை இன்னும் நெருக்கமான மொழியிலே தாய் தந்தையரின் அறிவுரைகள் போலச் சொல்லுகின்றன; காவியங்கள் அதைவிட நெருக்கமான மொழியில் காதல்த் தலைவி, தலைவனிடம் உரைக்குமுகமாகச் சொல்லுகின்றன. இதிலே நன்மை தீமைகளை, ஒழுக்கங்களை, காவியங்கள் போலக் காதல் மொழியிலே சொன்னால்தான் என்ன? அதற்குக் கருநாடக இசை இடையீடாக இருந்தால் இன்பத்திற்குக் குறைவுமுண்டோ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...