முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

101 கனவுகள் - 2. கனவில் மிதத்தல்…


இது உண்மைதானா? 

எதற்கும் சரிபார்த்துக்கொள்வோம் என்று மறுபடியும் எம்பிப் பார்த்தேன். சரிதான்! ஆனாலும் எவ்வளவு நேரத்திற்கு இது தாக்குப்பிடிக்கும்?

கடற்கரையை அடைந்து நீருக்கு மேலாக எம்பிப்பார்த்தேன். நினைத்தபடியே வேலை செய்தது. நடுக்கடலில் பயம் வயிறைச் சுண்டியிழுத்தது. திரும்பிவிடலாம் என்று வலப்புறம் சாய்ந்தேன். சரிப்படவில்லை. இடது புறமாகத் திரும்ப முடிந்தது, அதுவும் கொஞ்சமாக. ஹாண்டில் பார் வளைந்த சைக்கிளை ஒரு மாதிரித் ‘தேற்றி’ ஓட்டிக்கொண்டுபோவதுபோல் இருந்தது.

இதற்குள் அக்கரையை அடைந்துவிட்டேன். 

எங்கள் ஊரில் அந்தக்காலத்தில் பொட்டல்காட்டில் முளைத்த புதிய குடியிருப்பு மாதிரி ஓரிடம். தார் போடாத, மாட்டுவண்டித்தடங்கள் மிகுந்து அதுவே பாதையாகிவிட்ட சிறிய சாலை. இடது பக்கம் பார்த்தால் ஓடு வேய்ந்த கடையின் முன்புறம் வாழைத்தாரும், சணல்க்கயிறும் தொங்கிக்கொண்டிருந்தது. 

அட! நம்மூர் மாதிரித்தான் இங்கெல்லாம் இருக்கிறது.  ஊர்ப்புறம் வந்தால் தானே உண்மையான ‘வளர்ச்சி’ தெரியும்? 

இருந்தாலும் அப்போது நினைத்துக்கொண்டேன் “ஒரு பெருநகரத்தை நேர்த்தியாக கட்டியெழுப்பியிருக்கிறார்கள். அந்தப் பாடங்கள் மறந்துவிடுமா? நாளைக்கு இந்த இடங்களும் அதே நேர்த்தியுடன் இருக்கப்போகிறது”. அப்படி நினைத்ததை கண்களால் உறுதி செய்ய மீண்டும் சுற்றிலும் நோட்டம் விட்டேன் - அகலச்சாலைகள், சாக்கடை, இம்மாதிரி ‘திட்டமிட்ட’ கூறுகள் இருக்கிறதா என்று…

சற்று முன்னால் நடந்து போனால் பழைய கடைவீதி மாதிரி ஒன்று. ஒரு டீக்கடையில் நுழைந்து டீ குடித்தேன். ரேடியோவில் அறிவிப்பு ஏதோ புரியாத மொழியில். வெளியே கடைப் பலகையில் பார்த்தால் என்னவோ ‘காட்டோங்’ என்று எழுதியிருக்கிறது. இம்மாதிரி முன்னர் பார்த்ததில்லையே என்று யோசிக்கும்போதே தெரிந்து விட்டது. 

இது மலேசியா! 

அதனால் தான் ஊர் இப்படிப் “பழையதாக” இருக்கிறது. அடடா, விசா இல்லாமலே வந்து உட்கார்ந்திருக்கிறேன். இப்படி வந்து மாட்டிக்கொண்டேனே!

உடனே கிளம்பிவிட்டேன். 

மீண்டும் கடல். மாலை மங்கலில் அக்கரையில் சீமைக்கட்டிடங்கள் பளீரென்ற விளக்கொளியுடன் கண்ணுக்குப் புலப்பட்டன. 

எப்படி யாருக்கும் தெரியாமல் திரும்புவது? 

மறுபடி ஹாண்டில் பார் கோணல் சைக்கிள் படுத்தியது. அக்கரையில் நினைத்த இடத்திற்குப் போக முடியவில்லை.

சரியாக ஒரு படகுத் துறையில் குடியுரிமை அதிகாரிகள் கண்முன்பாக வந்து இறங்கினேன். "சரி, உண்மையைச் சொல்லிவிடுவோம் - வேறென்ன வழி?” என்று ஒரு பெண் அதிகாரியை அணுகி, வேறு அதிகாரிகள், பயணிகள் என்று சூழ்ந்திருக்கும் மற்றவர்கள் யாருக்கும் கேட்காத விதத்தில் அவரிடம் சொல்கிறேன்:

“மேடம், எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. எனக்கு திடீரென்று “பறக்க” வந்துவிட்டது. அதைச் சோதிப்பதற்காகக் கடல் மேல் பறந்து பார்த்தேன். சரியாகத் திரும்ப முடியாமலும், நினைத்த இலக்கிற்கு என்னைச் செலுத்த முடியாமலும் போனதில் அப்படியே காற்று வாக்கில் மலேசியா போய்விட்டேன். அங்கே இறங்கியதும் தான் அது மலேசியா என்றே தெரியும்… … …”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...