முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம்.

ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார்க்கத் தலைப்படுகிறோம். பின்னால் "நான் அப்பவே நெனச்சேன் இது ஒண்ணும் சரியில்லையேன்னு" என்று இவர்களைப் பற்றிப் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை எதிர்நோக்கி இருப்போம்.

***

சமுதாயமும் சுற்றங்களும் உருவாக்கித் தரும் ஏதோ பிம்பங்களைத் தனதென்று உருவகித்துக் கொண்டு, அதன் போதையில் சிக்குண்டு, அதை மிகவும் போற்றி வளர்த்த பிறகு, நம் சுவாபாவிகமான சில செயல்கள் அந்தப் பிம்பங்களை உடைக்கும் போது வலி உண்டாகிறது - சொறிந்து கொள்ளும் போது இன்பமளிக்கும் ரணம் இன்னும் வளர்ந்து பின்னால் வேதனை தருவது போல. இந்தப் பிம்பங்கள் நம்மைச் சுற்றியொரு பெரும் சுவரெழுப்புகிறது. இந்தச் சுவர்களை இடித்து வெளிவருவது கடினமானது. பல தருணங்களில் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிச் செயலைத் தியாகம் பண்ணவேண்டியுள்ளது - இதுவும் சில சமயங்களில் வேதனை தருவது.

"நீங்கள் உருவாக்கிக் கொண்ட என் பிம்பங்களுக்கு நான் ஒரு வகையிலும் பொறுப்பேற்க முடியாது" என்று ஒரு அட்டையைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு உலவ வேண்டுமென்று தோன்றுகிறது.


(நன்றி: ஆதவன் - பிம்பச்சிறை, பிம்பச்சிதைவு உள்ளிட்ட சில வார்த்தைப் பிரயோகங்களுக்காகவும் அவைகளின் பாதிப்பிற்காகவும்)


கருத்துகள்

ROSAVASANTH இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு. அதை சொல்வதற்காக அல்ல இந்த பின்னூட்டம். ஒரு சந்தேகம்.

துவக்கத்தில் ஆதவன் பெயர் வருகிறதே. பயன்படுத்திய வார்த்தைக்காக அவருக்கு நன்றி சொல்கிறீர்கள், பதிவு உங்களுடையது என்று நினைக்கிறேன்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
Eswar,

// I ain't them //
Yeah, right!

ரோசா,

ஆதவன் எழுதியது என்று அர்த்தம் வரும் குறிப்பை இப்போது மாற்றிவிட்டேன்.
வானம்பாடி இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன், வழக்கம் போல அருமையான பதிவு. எல்லாவற்றையும், எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் அடைத்தே தீருவது என்ற வகைப்படுத்தல் நோய்க்கு நம்மில் பெரும்பாலானோர் ஆட்பட்டிருக்கிறோம். இப்போது சிறுபிள்ளைத்தனமாக தோன்றும் இந்த பொதுப்படுத்தல்/வகைப்படுத்தலை நானும் செய்திருக்கிறேன்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
Sudarshan,

// எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் அடைத்தே தீருவது என்ற வகைப்படுத்தல் நோய்க்கு நம்மில் பெரும்பாலானோர் ஆட்பட்டிருக்கிறோம். //

இதைத்தான் சொல்லவந்தேன் - நீங்கள் இன்னும் எளிதாகச் சொல்லிவிட்டீர்கள்.

நன்றி.
மணியன் இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்கள் கூறுவது மிகச் சரி.மற்றவர்கள் நம்மை வகைப்படுத்தலைத் தவிர நாமும் சூழலின் தாக்கத்தால் அந்த வகைப்படுத்தலில் அடங்குகிறோம். சினிமா நடிகர்களுக்கு ஒருவித பிம்பச் சிறை என்றால் மக்களுக்கு தங்கள் பிறப்பினால்,மொழியால், மதத்தால்,தேசத்தால் மற்றும் இன்னபிற வகைபடுத்தலால் பிம்பச்சிறை. அதனை உடைத்துக் காணும் கருத்துக்கள் தெளிவானவை.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
மணியன்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
Suresh இவ்வாறு கூறியுள்ளார்…
பதிவை படித்தவுடன் சிறுவயது ஞாபகம் வந்தது.

நீ ரஜினி ஃபேனா? என்று கேட்பார்கள்? இல்லை என்று சொன்னால் உனக்கு எதுக்கு கமலை பிடிக்கும் என்று அடுத்த கேள்வி வரும்.

நாம் எப்போதும் ஏதாவது வகுப்பை சார்த்து தான் அறியப்படுகிறோம்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
சுரேஷ்,

எல்லாம் இருக்கட்டும். ஆனா ரஜினி ஃபேன் இல்லைன்னு நீங்க சொல்லியிருக்கக் கூடாது.

:-)
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பில் கண்ணன்,

தேவையான ஒரு பதிவு !!! எதையும்/எவரையும் வகைப்படுத்துதலை வியாதி என்பதை விட நம் வாழ்வின் ஓர் அங்கம் என்றே
கூறலாம் !! மலையாளிகள் என்றால் இப்படி, குறிப்பிட்ட சாதிக்காரர்கள் (அல்லது ஊர்க்காரர்கள்) என்றால் இப்படி, என்று ப்ரொக்ராம்
செய்து கொண்டு வாழ்வதிலிருந்து சிரமப்பட்டால் தான் வெளியே வர முடியும் என்று தோன்றுகிறது.

//நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்ப ட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார்க்கத்
தலைப்படுகிறோம்.பின்னால் "நான் அப்பவே நெனச்சேன் இது ஒண்ணும் சரியில்லையேன்னு" என்று இவர்களைப் பற்றிப்
பேசுவதற்கான சந்தர்ப்பங்களை எதிர்நோக்கி இருப்போம்
//
மிகச் சரி!

சிறிது காலமாக என் வலைப்பதிவு பக்கம் தங்களை காண முடிவதில்லை !!! எனது சமீபத்திய பதிவுகளை படித்தீர்களா ? சமயம்
கிடைக்கும்போது பார்க்கவும். நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
பாலா,

பின்னூட்டத்திற்கு நன்றி.

இங்கே தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன், படித்துவருகிறேன்.

பிகு: நிஜமாகவே நான் அன்பு இல்(லாக்) கண்ணன் தானா? :-)
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
Kannan,

I refuse to get into "WORD PLAY" with you on this count ;-)

More seriously, "அன்பில்" சரியான வார்த்தைப் பிரோயகமா, இல்லையா ?

என்றென்றும் அன்புடன்
பாலா
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
பிரோயகமா = பிரயோகமா
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
பாலா,

அன்பில் = அன்பு + இல் (லா)

என்று நினைக்கிறேன்.

(என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்)

நீங்கள் கூற விழைந்தது 'அன்பின்' என்றும் 'அன்பில்' ஒரு typo என்றும் நினைத்தேன்.
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
Kannan,
நன்றி !!! I was using the word without thinking :-(
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் புளாகு மிகவும் போர் அடிக்கிறது
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
Anonymous,

// உங்கள் புளாகு மிகவும் போர் அடிக்கிறது //
தெரியும் - ஆனால்...

நன்றி.
Suka இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன்..

எதையோ தேடப் போய் இங்கே வந்து முடிந்தது..

பதிவு பழையாதாகினும் பின்னூட்டமிடாமல் செல்ல மனமில்லை..

வெகு அருமையான பதிவு.. பிம்பச் சிறைகளைப் பிழக்க முயல்வோரும் அதனாலேயே தனியொரு அடையாளத்தைப் பெறுவதைத் தவிர்க்க முடிவதில்லை.


வாழ்த்துக்கள்
சுகா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க