முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விட்டு விடுதலையாகி...

...நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போலே!



தனிமனித சுதந்திரத்தின், உரிமையின் உண்மையான தேவையை உணர்ந்தவர்கள் பெண் விடுதலையின் இன்றியமையாமையையும் அறிவார்கள். ஒடுக்குமுறை என்பது உடல்வினை சார்ந்தது அல்ல - அது மனம் சார்ந்தது. அதற்கு எதிரான போராட்டம் ஒரு கருத்தாக்கத்திற்கு எதிரான போராட்டம். பெண்விடுதலை என்பது காலங்காலமாய் நம் சமூகத்தில் ஊறியிருக்கும் பெண்ணியல்புக் கருத்தாக்கங்களில் இருந்து நாம் ஒவ்வொருவரும் விடுதலையடைவதே!



பெண்களுக்கென்று எழுதப்படாத வாழ்க்கை விதிமுறைகளை, கருத்தாக்கங்களை கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் அவர்கள் மீது திணிக்கிறோம். தனிமனித உரிமை மற்றும் சுதந்திரம் குறித்து நரம்பு புடைக்கப் பேசும்போது, அச்சுதந்திரம் மற்றும் உரிமைகள் பெண்களையும் உள்ளடக்கியது என்பதை மறந்துவிடுகிறோம். பிறப்பால் உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்பதும் இப்படி வலிந்து திணிக்கப்பட்ட/படுகின்ற ஒரு சமூகக் கருத்தாக்கமே. கவனமாகப் பார்த்தால் இந்த இரண்டு ஒடுக்குமுறைகளுக்கும் வேராக ஒரு பொதுவான கருத்து வன்முறை தெரிகிறது.



ஒரு சமயம் தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறையை தனிமனித சுதந்திரத்திற்கு எதிராகப் பார்ப்பவர்கள், வேறொரு சமயம் பெண்களை மனிதராகப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். ஒருவேளை மனிதர்களின் சமூக ஏற்றத்தாழ்வுகள் மறைந்து விட்டாலும், பெண்களுக்கு எதிரான வன்முறை இருக்கும் வரை பேதம் பாராட்டும் போக்கு ஏதோ ஒரு வகையில் மனத்தில் ஒளிந்துகொண்டுதானிருக்கும் - என்றாவது கொடூரமாகத் தலைதூக்கும். ஆக, இவற்றில் ஒன்றை அடைந்து, இன்னொன்றை அடையாமல் இருப்பதில் உண்மையான சமவுரிமைச் சமுதாயம் காண்பதில் வெற்றி கிட்டாது.



சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நாகரீகமடைந்த (அல்லது அப்படிச் சொல்லிக்கொள்கிற) சமூகத்தில் எவ்வளவு இகழ்வோ, அவ்வளவு இகழ்வு பெண்களுக்கு எதிரான வன்முறையும். இவ்விரண்டுக்கும் எதிரான போராட்டங்கள் தனிமனித உரிமை மற்றும் சுயமரியாதை என்கிற பொதுவான தேவைகளை முன்வைத்தது. இவற்றில் ஒன்றை ஆதரித்தும், இன்னொன்றைப் புறந்தள்ளியும் ஒழுகுபவர்கள் பொய்யர்களன்றி வேறில்லை.

முக்கியமானதொரு பின்குறிப்பு: பல காரணங்களினால் மேற்கூறிய கருத்தாக்கங்கள் சில என் மனதிலும் வேரூன்றியிருக்கின்றன. வெளிச்சத்தை நோக்கிய ஒரு பெரும்பயணத்தின் ஆரம்பநிலையிலேயே நானும் இருக்கிறேன். பெண்ணியம் பற்றிய சிலரின் எழுத்துக்களையும், தலித் இலக்கியங்களையும் இப்போதுதான் கடந்த சில வருடங்களாய்ப் படித்து வருகிறேன். அதன் வழியாக உலக நடப்புகளைப் புதிய கண் கொண்டு பார்க்கவும் பழகி வருகிறேன்.

கருத்துகள்

வானம்பாடி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் கண்ணன், அருமை.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுதர்சன்!
இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன், மிகவும் அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். தெரிந்தோ தெரியாமலோ இந்தக் கருத்துருவாக்கங்கள் என்னுள்ளும் எங்கோ மூலைகளில் பதிந்து கிடக்கலாம். சமீப காலங்களில் அவற்றை இனங்கண்டுகொண்டு உள்ளுக்குள்ளேயே நசுக்கி எறிந்து விட முயல்கிறேன். இந்தப் பயணம் நீங்கள் சொன்னது போல் இன்னும் தூரம் அதிகம்.

வலைப்பதிவுகளும், வாழ்க்கையும் கூட இந்தக் கல்விக்குப் பெரிதும் உதவுகின்றன. ஒரு சமுதாயப் புரட்சி என்றில்லாமல் இது ஒவ்வொருவரின் மனதுள்ளும் நடக்க வேண்டும். அதுவே உண்மையான மாற்றத்திற்கு வழிகோலும். அந்த வகையில் உங்களது இந்தப் பதிவும், இது சொல்லும் சுயபயணங்களும் முக்கியம்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
//ஒரு சமுதாயப் புரட்சி என்றில்லாமல் இது ஒவ்வொருவரின் மனதுள்ளும் நடக்க வேண்டும். அதுவே உண்மையான மாற்றத்திற்கு வழிகோலும்.//
மிகச்சரி, செல்வா.

நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க