முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்று தீரும் ஆடுகளச் சர்சை?

மும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள் - இந்தியா 104 & 5/0 (3 ஓவர்கள்) - கம்பீர் 1*, சேவாக் 4*, ஆஸ்திரேலியா 203

இன்று ஹிந்துவில் பீட்டர் ரீபெக் பத்தி(column) பார்த்தீர்களா? வான்கடே ஆடுகளம், களங்களுக்கெல்லாம் இழுக்கு என்றும், நம்மாட்கள் இத்தொடரில் ஒரு ஆட்டத்தையாவது வெல்ல வேண்டி கேவலமாக ஆடுகளம் தயாரித்திருக்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார். ஆடுகளம் தவிர்த்த, மைதானத்தின் எந்தப் பகுதியுமே இதைவிட மேம்பட்டது என்றும், பயிற்சிக் களமே தேவலை என்றும் தாறுமாறாக எழுதியிருக்கிறார்.

களம் அவ்வளவு மோசமா? இல்லை இது அளுகுணியா? நம்மூரில் ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் களம் பற்றிய சர்ச்சைகள் வந்தவண்ணம் இருக்கிறதே! பாகிஸ்தான், இலங்கைக் களங்கள் பற்றி "ஸ்லோ விக்கட்" என்ற விமரிசனத்தை மீறி வேறொன்றும் வருவதில்லையே. நம்மாட்கள் விழுந்து புரண்டு அரை நாளில் பத்து விக்கட் எடுத்தாலும், இம்மாதிரி யாராவது குறை சொல்லி அழுகிறார்கள்.

பேசாமல், இனிமேல் நியூட்ரல் இடங்களில் தான் டெஸ்ட் பந்தயங்கள் வைப்பது என்று சொல்லலாம் - ஆனால் இது சரிப்பட்டு வராது; நம்மாட்கள் ஆடுவதை நம் மண்ணில் பார்க்காமல் என்ன கிரிக்கெட் வேண்டியிருக்கு? வேறொன்று நடைமுறைச் சாத்தியம் என்று நினைக்கிறேன் - ICC ஆடுகளம் அமைப்பதற்கான சில விதிமுறைகள்/கோட்பாடுகள் வகுத்தால், எல்லா ஊரிலும் அடிப்படையான சில வரைமுறைகளுக்குட்பட்டு, (அதற்குமேல் நாம் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்) ஆடுகளங்கள் தயாரிக்கலாம்.

இதற்கு மேல் களங்களைப் பற்றி யாரும் எதுவும் சொல்லத் தேவையில்லை. இந்த மாதிரி நம்மாட்கள் அபூர்வமாய் நன்றாய்ச் செய்தால் நிம்மதியாய் சந்தோஷப்படலாம்.

கருத்துகள்

rajkumar இவ்வாறு கூறியுள்ளார்…
இந்டியாவில் மட்டும் பிட்ச் தயாரிப்பதை குறை கூறுவதே இவர்களது வழக்கமாய் இருக்கிறது.

உலகக் கோப்பைக்கு முன் நியுஸிலாந்தில் நடந்த டெஸ்ட் மேட்சிற்க்கு போட்ட பிட்சுகளைப் பற்றி ரோபோக் குறையேதும் சொன்னாரா?

இதைத் தவிர சவுத் ஆப்ரிக்காவில் கிங்ஸ்மெட்டில் இரண்டு ஆள் உயரத்திற்கு பந்து எழும்புவதைப் போல் பிட்ச் அமைத்தார்கள்.

இவையெல்லாம் கண்டிக்கப்ப்ட மாட்டாது. இந்தியாவில் பந்து திரும்பினால் கோபம் வரும்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
உள்ளது, ராஜ்குமார்...
Badri Seshadri இவ்வாறு கூறியுள்ளார்…
மும்பை ஆடுகளம் மோசமானதுதான். சும்மா பந்தைத் தூக்கிப்போடும் கிளார்க் எல்லாம் கொத்து கொத்தாக விக்கெட் எடுத்தார் அல்லவா? ஆனால் அவ்வப்போது ஒருசில ஆட்டங்கள் மோசமான ஆடுகளத்தில் நடப்பதில் தவறொன்றுமில்லை. இந்தியா நியூசிலாந்தில் போய் மூன்று நாள்களுக்கு ஒரு டெஸ்ட் என்று இரண்டு டெஸ்ட்களில் உதை வாங்கிக்கொண்டு வந்ததில்லையா? அவையும் கூட மோசமான ஆடுகளங்கள்தான்.

கர்ட்லி ஆம்புரோசும், கோர்ட்னி வால்ஷும் உச்சத்தில் இருந்த நேரம் மேற்கிந்தியத் தீவுகளில் அமைக்கப்பட்ட சில ஆடுகளங்களும் (முக்கியமாக ஜமாய்க்கா) படு மோசமானவை. ஒருமுறை ஆட்டம் தொடங்கி முதல் பந்து நடுக்களத்தில் விழுந்து விக்கெட் கீப்பர் தலைக்கு மேலாகப் பறந்து எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்றது. நாலைந்து ஓவர்களுக்குப் பிறகு அந்த டெஸ்ட் ஆட்டத்தை ரத்து செய்துவிட்டனர். அது மோசமான ஆடுகளம்தான்.

மும்பை போல தொடர்ச்சியாக ஆடுகளங்களை அமைப்பது நல்லதில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க