முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்சார் தொல்லை

 ஒருவரின் பெயர்சார்என்ற விகுதியுடன் இருக்கமுடியுமா?


ஆனால்என் கணக்கு வாத்தியார் கணேசன் சார்என்றால் யாரும் கண்டுகொள்வதில்லை. இது பெரிதும் எரிச்சலூட்டக்கூடியது. ஒருவேளை சாருக்கு பதில் ஐயா என்றிருந்தால் இவ்வளவு எரிச்சல் இருக்காதோ? 


இந்த கணேசன் சார், கீதாமேடம் போன்றவை ஒரு வகையென்றால் இதை அடுத்த தளத்திற்கு உயர்த்துவதுடியூசன் சார்’, ‘சும்மிங் சார்போன்றவை.


 “என் பையனோட வயலின் சார் இருக்காரே, அவர் பெரிய மேதை!”

-- இதில்சார்விளி பெயரையல்லாமல் கற்பிக்கும் தொழிலைக்குறிக்கிறது


இதில் கலாச்சாரம் (உடை) சாரந்த மொழி உளவியல் இருப்பதாக நினைக்கிறேன். அதாவது, வேட்டியைக் கச்சையாகக் கட்டிக்கொண்டு தலையில் உருமாலுடன் இருப்பவர் குஸ்திவாத்தியார்’. நீளக்காற்சட்டையுடன்இன்பண்ணிக்கொண்டு கான்வாஸ் காலணி அணிந்திருப்பவர் கராத்தேசாரேயாவார்.




நகரங்களில் இந்த வழக்கம் எல்லாத்ததட்டு மக்களிடயையேயும்  வெகுவாகப் பரவிக்கிடக்கிறது


பேச்சுத்தமிழ் தனதாக்கிக்கொண்ட பல வேற்றுமொழிச் சொற்களுண்டு


கல்லூரியில் தமிழ்ப்பேச்சுப்போட்டியில் சில கட்டுப்பாடுகளுடன் ஒரு நிமிடம் பேசக் கேட்டிருந்தார்கள். அதிலொன்று, வேற்றுமொழிச்சொற்களைப் பயன்படுத்தாமல் பேசுவது.


கோவையிலேயே பிறந்து வளர்ந்த, பஞ்சாபிலிருந்து பெயர்ந்த குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த நண்பன் பேசினான்:


 கண் - இதை வைத்துக்கொண்டு சைட் அடிக்கலாம்


உடனே அவனைப் போட்டியிலிருந்து விலக்குவதாக அறிவித்தார்கள். அவனுக்கும் தான் என்ன பிழை செயதோமென்றே புரியவில்லை. சைட் என்பது ஆங்கிலச் சொல் என்பதைச் சுட்டவும், அவன் வெகுண்டு, “நான் சொன்னது தமிழ் சைட்என்று சண்டைக்கு நின்றான் அப்பாவியாக.


தமிழ் சார் போலல்லாது தமிழ் சைட் எனபது பதின்வயதினரே மிகுதியும் (அதிலும் பழைய பத்தாண்டொன்றில்) பயன்படுதுவதாயிருந்தது. அவர்கள் வளர்ந்தவுடன் அதைவிட்டும் விட்டார்கள்; அந்தப் பயன்பாடு ஏறக்குறைய அற்றும்போய்விட்டது. ஆனால் இப்போது சார் பயன்பாடு தமிழைப் பீடித்துள்ளது


இயல்பான தாய்மொழியறிவு குன்றியும், இந்தித் திணிப்பு மீண்டும் தலைதூக்கிக்கொண்டும் இருக்கிற இந்தக்காலத்தில் தமிழை மறக்காமல் பேசுவதே பெரிது என்றாகிவிட்டது. இதிலேசாரைவிட்டொழித்து ஐயா, வாத்தியார் என்பனவற்றைப் பயன்படுத்தச் சொல்லிக்கேட்பதுராவுத்தரே கொக்காப் பறக்கிறார், குதிரைக்குக் கோதுமை ரொட்டி கேட்கிறதோ?’ என்பதுபோலத்தான் இருக்கிறது.


அப்படிச்சொன்னாலும்நான் சொன்னது தமிழ் சார்என்று நம்மிடம் மல்லுக்கட்டினாலும் வியப்பதற்கில்லை.


இருந்தாலும் கேட்பதற்குச் சகியாமல் நாராசமாய் இருப்பதால் சொல்லிவைக்கிறேன்; நண்பர்களுக்கும் அறிவுரைக்கிறேன். 


இது மொழிசார்த் தொல்லையே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...