முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மருந்து

பெங்களூர் ஜெயநகர் மூன்றாம் பிளாக்கின் சாலைச் சந்திப்பில் (இங்கே எல்லாமே 'சர்க்கல்' தான்) நாகார்ஜுனாவுக்கும் மூலைப் பெட்டிக்கடைக்கும் நடுவே இருந்தது மஞ்சுநாதா (என்று நினைக்கிறேன்) ஃபார்மசி. பழைய பெயர்ப்பலகை. கடையினுள்ளே அப்போத்திக்கரிகள் காலத்து மேசை, கண்ணாடி/மரக்கூண்டுகளுக்குள் மருந்துகள் என்ற அமைப்பு. மேசையின் அருகிலே இருக்கையில் அறுபதை நெருங்கும் வயதுடையவர் என்று நாம் ஊகிக்கக்கூடிய பெரியவர். மெலிந்த தேகம், அதிக உயரமில்லை, வெளுத்த தலை முடி, சின்னதாக கிராப் வைத்திருப்பார். கையில் விரித்து வைத்த ப்ரஜாவாணி பத்திரிகையை படித்த வண்ணம் இருப்பார்.

ஒரு முறை அவசரமாக மாத்திரை வாங்க வேண்டியிருந்ததில் மருந்தகம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். இந்தக் கடை தென்பட்டது - வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறதே என்று கடையில் மருந்தின் பெயரைச் சொல்லிக்கேட்டேன். பத்திரிக்கையினின்றும் தலையை எடுத்து சிரித்துக் கொண்டே சொன்னார் "இங்கே கிடைக்காது (அருகில் உள்ள பெரிய) மருந்தகத்தில் கிடைக்கும்". அப்போதிருந்த அவசரத்தில் ஓடிவிட்டேன். ஆனால் அங்கே ஒரு மருந்தகம் இருப்பதை மனம் குறித்துவைத்துக் கொண்டது.

அப்புறம் மருந்து வாங்க வேண்டுமானால் அதே கடைக்குச் செல்ல ஆரம்பித்தேன். அடுத்த முறை போனபோது கடைக்காரர் வயதையொத்த ஒருவர் கடைக்குவெளியே மடக்கு நாற்காலி போட்டு உட்கார்நதிருந்தார். கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தார். மருந்தைச் சொல்லிக் கேட்டதற்கு இம்முறை வெளியே உட்கார்ந்திருந்த நண்பரே மருந்து அங்கு கிடைக்காதென்று சொல்லி அருகில் இருந்த பெரிய மருந்தகத்திற்கு வழிகாட்டினார்.

வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. அப்புறம் மருந்து வாங்க நேர்ந்தால் அந்தக்கடைக்கு முதலில் சென்று கேட்பதும் (இருக்காது என்று தெரிந்தும்) அப்புறம் வேறுகடையில் மருந்து வாங்குவதும் வழக்கமாயிருந்தது. அங்கே வசித்தவரையில் அந்தக்கடையில் எதுவும் வாங்கியதில்லை - எதைக் கேட்டாலும் புன்னகையுடன் இல்லையென்ற பதிலே வரும். இருந்தும் அங்கே மீண்டும் மீண்டும் செல்ல விருப்பம் இருந்தது.

மிகவும் விரைவாக எதையோ நோக்கி எல்லோரும் ஓடிக்கொண்டிருக்க, அந்தக் கடையும் அங்கு சேரும் கடைக்காரரின் நண்பர் கூட்டமும் நவீன பெங்களூர் காட்சிக்கு முரணாகத் தோன்றியது. அருகிலிருந்த நாகார்ஜுனாவில் கூட சாரைசாரையாக மக்கள் வந்து அவசர கதியில் தின்று போய்க்கொண்டிருந்தனர். பெட்டிக்கடையிலும் டீ, சிகரட்டு என்று மனிதர்கள் வந்துபோய்க்கொண்டிருக்க, நடுவில் அந்த மருந்துக்கடை அமைதியாக ஆளரவமின்றி இயங்கிக்கொண்டிருந்தது.

மருந்துக்கடை பெரியவர் பற்றி எதுவும் தெரியாதானாலும் இப்படியாக அனுமானித்தேன்:
சாப்பாடு, இருப்பிடம், எளிய வாழ்க்கைக்கான வருமானத்தை அவர் சேமித்திருக்க வேண்டும். தினமும் கடையைத் திறந்து வைத்திருப்பது, ப்ரஜாவாணி படிப்பது, நண்பர்களுடன் அளவளாவிக்கொண்டு தேநீர் குடிப்பது என்பன தவிர்க்கமுடியாத பழக்கங்களாகி விட்டிருக்கவேண்டும். திரும்பி வராத பழையநாட்களின் வசந்தத்தையும், இளமைக் காலத்தின் உயிர்ப்பையும், நிறைவான, நிதானமான, வேட்கைகளற்ற வாழ்க்கையின் பழைய சுவடுகளையும்  இந்தப் பழைய மேசையும், மருந்து வாசம் கமழும் மரக்கூண்டுகளும், கடைக்கதவின் மரப்பட்டிகளும், மேசைமேல் பதித்த கண்ணாடிமூலம் தெரியும் பழைய ஒற்றை ரூபாய் நோட்டும் பெரியவருக்கு நினைவூட்டுவதாக இருக்கக்கூடும்.

இவரைப் பார்க்கப் பொறாமை மேலோங்கும் - எனக்கான பழைய மருந்துக்கடைக் கல்லா, மேசை நாற்காலி என்கிற விழைவும். கண்ணாப்புக் கட்டிய குதிரைபோல வாழ்க்கையின் எளிய மகிழ்ச்சிகளை மறந்து எதையோ நோக்கி ஓடுகிறோம். சன நெரிசலில், அவசரங்களுக்கு மத்தியில், ஒரு நிமிடம் நின்று நிதானித்துத் தேடினால் இந்த மருந்தகம் போன்ற எளிமை மிளிரும் ஒன்று கண்ணுக்குப் புலப்படலாம். அதைக் கண்டுகொண்ட பின்னர் வாழ்நாட்களில் உணரப்போகும் அமைதியை, மகிழ்ச்சியை பெரியவரின் சிரிக்கும் கண்கள் எப்போதும் உணர்த்தும்.

நான் அந்தப் பெரியவர் வாழ்க்கையையே காதலிக்கிறேன். நீங்கள் கேட்கும் மருந்து இங்கு கிடைக்காது; ஆனால் பூரண குணம் கிட்டும் வாய்ப்பு இருக்கிறது.

கருத்துகள்

surimountain இவ்வாறு கூறியுள்ளார்…
மிக நன்று. படிப்பதற்கு மிகவும் சுவையாக இருந்தது. வாழ்த்துக்கள் (சொல்லலாம்தானே? ஒரே தகுதி வயதுதான். 67)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க