முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்புத்தோழிக்கு...

மகிழ்ச்சியான தருணங்களை அவை நிகழும்போது நான் அனுபவிப்பதில்லை. கிடைக்கும்பொழுது ஆனமட்டும் புல்லை விழுங்கிவிட்டுப் பின்னால் அசைபோடும் மாடு போலச் சில தருணங்களைச் சுவைக்காமல் விழுங்கிப் பின்னால் ஒரு தனியான பொழுதில் எல்லாவற்றையும் மீட்டு நினைவுகளைச் சுவைப்பதில் மகிழ்ச்சி. அப்படியே நேசத்தோடு கழித்த நல்ல பொழுதுகளையும் விழுங்கிவிடுகிறேன். இதை நினைவிலிருந்து மீட்டெடுப்பதில் துளியும் மகிழ்ச்சியில்லை இப்போது. நீ புறப்பட்டுப் போனபின் சுவாசக் காற்றுப் பிரிந்த வெறும் கூடு போல உன்னுடன் புழங்கிய இடமெல்லாம் உயிரற்றுக் கிடக்கிறது.

முன்னாளில் பேசிய கடும் வார்த்தைகளை விடுத்து வாஞ்சையுடன் இன்னும் அன்பைப் பரிமாறியிருக்கலாம் - இனி அதற்கான வாய்ப்பு என்று கிடைக்குமோ...சிறுபிள்ளைத்தனமான கோபங்களை விடுத்து நம்மிடையே பேசிக்கொள்ளாத அந்தப் பொழுதுகளை அன்பான வெற்றுப் பேச்சாலேனும் நிரப்பியிருக்கலாம். இந்த வாய்ப்பையெல்லாம் தவறவிட்டுவிட்டு, கையசைத்து வழியனுப்பும் ஒரு மணிநேரப் பொழுதில் எவ்வளவுதான் நாம் செய்துவிட முடியும்? பிரிவையும் விட இந்தத் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் மேலும் துயரைத் தருகின்றன.

காலம் நின்றுவிட்டதாய்த் தோன்றினாலும் வாழ்க்கையும் அதன் நிகழ்வுகளும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன - இவ்வுலகம் அவசர கதியில் இயங்கும் ஒன்று. அம்மாவைக் காணாமல் அழும் பிள்ளைக்குப் பொம்மைகள் கொடுத்து கவனத்தைத் திருப்புவது போல இனி வேறு பல விஷயங்களில் மனத்தை ஆழ்த்துவதில் துயரம் மறக்கும். ஆனால் என் மனத்தில் நீ இட்ட அன்பின் வித்து வேரூன்றித் தழைத்துச் செடியாய், மரமாய் வளரும். பின்னொரு நாள் நிழலும், பறிக்கப் பறிக்கத் தீராத கனிகளும் கொடுக்கும்.

என் அன்பான "ரெட்டை வால்" சகியே! போய் வா. நாம் மீண்டும் சந்திக்கும் வரை இவ்வன்பை அடைகாத்திருப்பேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க