முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வூட்ல சொல்லிகினு வந்தியா?

"You really never learn to swear until you learn to drive" என்று யாரோ சொல்லி, எங்கோ படித்த ஞாபகம் வருகிறது. இன்று நான் மனத்தில் சொல்லிக் கொண்ட, தினமும் காலையில் பைக் ஓட்டி வரும்போது சொல்லிக்கொள்கிற "ங்கோத்தா.." வகையறாக்கள் எண்ணிக்கையில் அடங்கா.

Traffic விதிகளை மதிப்பதை ஒரு காதலுடன் செய்ய முயற்சிக்கிறேன் - இதை என் தேசப்பற்றின் சிறு வெளியீடாகக் கூட நான் பார்ப்பதுண்டு. கொஞ்சம் civic sense, தேவையான அளவு traffic sense, துளி பொறுமை இருந்தால் நம்ம ஊர் சிங்கப்பூரோ, ம்யுநிக்கோ ஆகாவிட்டாலும், காலையில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் யார் "வாயிலும் விழ" வேண்டாம், உபயோகிக்கச் சரியான கெட்ட வார்த்தைகள் தேட வேண்டாம், முழு நாளையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம்...

யார் எக்கேடு கெட்டுப்போனாலும், தாம் மட்டும் "நேரத்தோட" போய் சேர்ந்தால் போதும் என்று, பாதி ரோட்டைத் தாண்டி எதிரில் வரும் வாகனங்களைப் போகவிடாமல் அழும்பு பண்ணுகிறவர்கள், பொலிஸ் இல்லாத நாற்சந்தியின் நெரிசலில், இண்டு இடுக்கிலெல்லாம் தத்தம் வாகனங்களைச் செருகிக்கொண்டு, அவர்களும் போகாமல், மற்றவர்களையும் நகர விடாமல் deadlock உண்டுபண்ணுபவர்கள், lane எக்கச்சக்கமாய் தாண்டுபவர்கள் (நம்மூர்ல பெரிய ராஜபாட்டையெல்லாம் கெடையாது, இருந்தாலும் எல்லாரும் போகிற ரோட்ல, செங்குத்தா, திரும்பிப் போறது கொஞம் ஓவர் தானே?) ஆகியோரை மசியவைக்க ஒரு யோசனை:

ஓரு நல்ல மைதானமாகப் பார்த்து, வண்டிகளை ஓரங்கட்டச் செய்வது; உள்ளே ஒரு கூடத்தில் சேர்கள் போட்டு, காபி, தேனீர் உபசாரம் செய்து, போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பான movie, அல்லது presentation ஒரு அரைமணி நேரத்திற்கு - இதில், வீட்டில் இருந்து 30 நிமிடங்கள் முன்னதாகக் கிளம்பி, பொறுமையுடன் வண்டி ஓட்டுவதன் அவசியத்தை வலியுறுத்துதல் என்று செய்யலாம். அவசரப்பட்டவர் licence-ல் ஒரு முத்திரை குத்தி, இந்தமாதிரி 5 முறைக்கு மேல் ஆனால் licence ஐ revoke செய்யலாம். மேலும் அவர் சமயத்திற்கு அலுவலகத்திற்கோ, கள்ளக்கடத்தல் partnerஐ சந்திப்பதற்கோ போகவிடாமல் (இந்த இடத்தில் கட்டணமுறைக் கழிப்பிடம் இருப்பதால், இதற்கு அவர் அவசரப்பட்டால் போகவிடலாம்) தாமதப்படுத்தலாமே? இந்தத் தாமதத்தினால் அவருக்கு விளையும் துன்பங்களே தண்டனையாகவும் இருக்காலாம் - "சம்திங்" எல்லாம் வாங்க வேண்டாம், அல்லது இதுதான் சாக்கு என்று அவரை வாய்க்கு வந்தபடி ஏச வேண்டாம் (படிச்சவன் தானே? அறிவில்லையா?...) ஒன்றும் சொல்லாமல் just தாமதப்படுத்துவதால், ஆசாமி சிறிது ஆசுவாசத்துடன் கிளம்பிச் செல்வார் என்று எதிர்பார்க்கலாம். பொலிஸுக்கு ஜீப், பைக் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து சமூகச் சேவை செய்யும் நிறுவனங்கள் இதற்கான உதவிகளைச் செய்யலாம்.

இதுமட்டுமல்லாமல், வேறொரு முக்கியமான விடயமும் இருக்கு. விபத்துக்கள் நிகழ்ந்தால் செய்ய வேண்டியது: நமக்கென்ன என்று ஒதுங்கிப் போவது, வேடிக்கை பார்ப்பது, பயந்து ஒன்றும் செய்யாமல் போவது (நான் மூன்றாவது ரகம்) என்றிருப்பதைவிட, பொலிஸும், NGOs உம் சேர்ந்து விபத்து நேர்ந்தால் அக்கம்பக்கத்தில் உள்ள சாதாரணர்கள் எப்படி உதவலாம் என்பதில் கொஞ்சம் வண்டி ஓட்டும் volunteersகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இதில் முதலுதவி, சட்டம் என்று எல்லா அம்சங்களும் இருக்க வேண்டும். mock விபத்துக்கள் நிகழ்த்த வேண்டும். இதில் நாமெல்லாம் பங்கெடுத்துத் தெரிந்துகொள்ள வேண்டும். (பயந்தாங்கொள்ளியான நானே இதற்கு உடன்படுகிறேன்)

இப்படியெல்லாம் இன்று காலை வண்டியோட்டி அலுவலகம் வந்து சேர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த அவஸ்தை எல்லாம் இல்லமல் சுகமாகப் பேருந்திலோ, பொடிநடையாகவோ கூடப் போகலாம். அதெல்லாம் அப்புறம். இப்பொ சோலியப் பாக்கோணும்...

கருத்துகள்

ஈழநாதன்(Eelanathan) இவ்வாறு கூறியுள்ளார்…
பெரிதாக ஒன்றும் வேண்டாம் ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு சந்தியில் வைத்து போக்குவரத்தை ஒளிப்பதிவு செய்து அத்தனை பேரையும் ஓரங்கட்டி அவர்களையே பார்க்கும் படி செய்தால் போதும் பயத்தில் அல்லது வெட்கத்தில் திருந்திவிட வாய்ப்புண்டு
Santhosh Guru இவ்வாறு கூறியுள்ளார்…
// யார் எக்கேடு கெட்டுப்போனாலும், தாம் மட்டும் "நேரத்தோட" போய் சேர்ந்தால் போதும் என்று, பாதி ரோட்டைத் தாண்டி எதிரில் வரும் வாகனங்களைப் போகவிடாமல் அழும்பு பண்ணுகிறவர்கள் //

அவர்கள் மட்டுமா... முன்னால் வாகனத்தை ஒரு அங்குலம் அளவுகூட நகர்த்த இயலாது என்று தெரிந்தும், பாம் பாம் என்று ஹாரன் அடிப்பவர்களைக் கண்டால், எனக்கு கேப்டன் விஜயகாந்த் போல கோபம் வருகிறது. அப்படியே இறங்கிச்சென்று அவர்கள் மூஞ்சியில் என் பீச்சாங்கையினை வைக்கவேண்டும் என்பது நீண்ட நாள் அவா.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க