முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்து ஊக்கிகள்


எங்களூர் நூலகத்தின் பழைய புத்தகங்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்தார்கள். நானும் கால்கடுக்க மூன்று மணி நேரம் செலவிட்டதில் நான்கைந்து புத்தகங்கள் தேறின. அதிலே தமிழிலே ஸ்ரீரங்கத்து தேவதைகள் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது நண்பன் ஒருவன் பழைய புத்தகக் கடையிலிருந்து இதை வாங்கி வந்திருந்தான். ரொம்ப நாட்கள் அதை வைத்திருந்து இரவல் கொடுத்ததிலோ வீடு மாற்றியதிலோ தொலைந்து விட்டது. இப்போது இது கிடைத்ததும் உற்சாகமாகி விட்டேன். ஸ்ரீரங்கத்துக் கதைகள் என்கிற தொகுப்பு 'தேவதைகள்' உட்பட மேலும் சில கதைகளைக் கொண்டு வெளிவந்திருக்கிறது. ஆனாலும் தொலைத்த, பழைய தொகுப்பு கிட்டியது சந்தோஷமாகத் தான் இருக்கிறது.

சில எழுத்துகள் படித்ததும் அலையலையான நினைவுகளைக் கிளறிவிட வல்லன. ஸ்ரீரங்கத்து தேவதைகள் அவ்வாறான ஒன்று. சுஜாதாவின் மிக அருமையான படைப்பென்றே இதைச் சொல்லுவேன். நம் இளமைக்காலத்தின் நினைவுகளோடு பொருத்திப் பார்க்க முடிவதாலும், சொந்த அனுபவங்களை ஒத்திருப்பதாலும், இன்னும் சில மனதிற்கு நெருக்கமான உணர்வுகளை, காலங்களை நினைவு படுத்துவதாலும் இது எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் மேலாக சுஜாதாவின் தனித்தன்மை வாய்ந்த துள்ளலும், எள்ளலும், self-deprecating humor உம் தான் இதை ஒரு ஒப்பற்ற வாசிப்பு அனுபவமாக மாற்றுகிறது.

======
இன்னும் சில எழுத்துகளை வாசித்தபின் எண்ணங்கள் குறுகலான முட்டுச் சந்துகளை விட்டு விசாலமான ஒரு பெருவெளிக்கு விடுதலை பெற்றுப் போகின்றன. ஒவ்வொரு முறையும் இப்படி மூச்சு முட்டியிருக்கையிலே புதிய சாத்தியங்களுக்கான வெளிகள் வாசிப்பிலிருந்தே கிட்டிவிடுகின்றன. கொடுமையான கனவு உறக்கம் கலைத்தபின் நிகழ்வாழ்வின் போதம் தரும் ஆசுவாசம் போல இவை பொதுவில் வாழ்வில் புது நம்பிக்கை கொள்ளச் செய்வன.

======

Principles of good writing என்கிற கட்டுரை பள்ளியிலே ஆங்கிலப் பாடத்தில் இருந்தது. அதிலே நல்ல எழுத்துக்கு perspiration 99%, inspiration 1% என்றும், தெளிவான சிந்தனையே தெளிவான எழுத்துக்கு வழி செய்யும் என்றும் சொல்லியிருந்தது. மேலும், ஒரு குறிப்புப் புத்தகமும், பென்சிலும் எப்போதும் கைவசமிருக்கவேண்டும் என்றும், ஏதேனும் நல்ல கருத்தோ, சொற்றொடரோ, எழுத ஏதுவான எதுவோ தோன்றியவுடன் இக்குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அக்கட்டுரையிலே இருந்தது. தற்சமயம் தெளிவான எண்ணங்கள் இல்லை; குறிப்புப் புத்தகமும் இல்லை. இருந்திருந்தால் கடந்த சில தினங்களில் எழுதத் தூண்டிய சில விஷயங்கள் பற்றியும், அலையலையாக அப்போது கிளர்ந்தெழுந்த நினைவுகளையும் குறித்து வைத்துக் கொண்டிருக்கலாம். இப்போது அடித்தும் திருத்தியும் எழுதிப்போகும் இக்கணம் நிலவும் கற்பனை வறட்சியும் அதனால் ஏற்படும் சோர்வும் இல்லாமல் இருந்திருக்கலாம்.

சிந்திக்க, எழுதத் தூண்டிய அத்தகைய ஒரு விஷயம்: அருளின் மெய்யியல் / புன்னகையில் மின்சாரம் பற்றிய பதிவு. இப்போதைக்கு எஸ்கேப்.

கருத்துகள்

Sri இவ்வாறு கூறியுள்ளார்…
This is aka, aadikku oru post, amavasaikku oru post.

CC
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
CC,

Point noted. And thanks for registering @ blogspot just to comment on this :) I had taken off the Anonymous option to avoid comment spamming.

Well, your Srirangathu thevathaikal copy was with me till I lost it quite recently when I shifted my house. Was happy to find it and reminisce our days at M.kere...
ஜெ. ராம்கி இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க. வாங்க்... வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்க..

அன்புடன் ராம்கி
http://wwww.thaiyal.com
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Knski

The book Srirangathu Thevathaikal is with me.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க