முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாஷிங் மஷின் காதை

வூட்ல வாஷிங் மஷின் ஊத்திக்கிச்சு.

ஒரு வாட்டி அவசரத்துல துணியெல்லாம் போட்டு, ஸ்விச்ச ஆன் பண்ணினதுக்கப்புறம் தான் சோப்புப் பொடி போடலன்னு ஞாபகம் வந்தது. அப்படியே ஸ்விச்ச ஆஃப் பண்ணிட்டு பொடியப் போடலாம்னு பாத்தா, ஆனான பாடு பட்டும் வாஷிங் மஷின் மூடி தொறக்கமாட்டேன்னுடிச்சு. எடுத்த காரியத்த முடிக்காம நடுவுல லூஸ்ல உடறது நம்பள மாதிரி அதுக்குப் பழக்கமில்ல போலிருக்கு. ஆனா, சோப்புப் பொடியே இல்லாம, தோச்சுத் தான் தீருவேன்னு அது நிக்கும்போது "கடம உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாப்பா" அப்படீன்னு தான் நெனக்கத் தோணிச்சு.

அதுல என்ன ஃபஸ்ஸி லாஜிக்கோ என்ன எழவோ, அதுக்கப்புறமா அது ஓடறதே இல்ல. ஏதோ ஒரு ஸ்டேட்ல அப்படியே நின்னுடிச்சி போல. எல்லா ஸ்விச்சயும் ஆஃப் பண்ணிட்டுப் போட்டா முதல்ல இருந்து ஓடும்னு நான் நெனைச்சா, போன வாட்டி எங்க உட்டமோ, அங்கிருந்து தான் நான் ஆரம்பிப்பேன்னு அது நெனைக்கிது. இந்த மாதிரி யோசிக்கிற மஷின் வாங்கறதுக்கு முன்னாடி நாம யோசிக்கணும் - அத விட நாம புத்திசாலியா இருக்கமான்னு. பேஸிக்கா, அது என்ன யோசிக்குதுன்னு நமக்குத் தெரியணும்.

(நல்ல வேளையா) இத நான் வாங்கல. வாடகை வீட்டோடையே வந்தது. வூட்டுக்காரர் ஏற்கனவே வச்சிருந்தது. அதோட கோனார் கைடு நம்ம கிட்ட இல்ல. ஸ்விச்சிலையோ படம் படமா போட்டிருக்கு, எழுத்து எங்கயுமே இல்ல. தொவை, காயப்போடு, அலசு - அப்படீங்கறதுக்கு என்ன படம்னே யோசிக்கத் தெரியல. இருக்கற படத்தப் பாத்து இந்த மூணு விஷயத்தோட பொருத்திப் பார்க்க முடியல. சின்ன வயசுல பெரியம்மாவோட தையல் மஷின்ல இருக்கற சக்கரம், கீழ இருந்து நூல விடற ஒரு பொறி (பாபி பின்னா?) இதெல்லாம் என்னன்னு தெரியாமலே, அத ட்ரெயின் இஞ்சின்னு இமாஜின் பண்ணிக்கிட்டு, நாமளே எதையோ திருகி என்னமோ பண்ற மாதிரி பில்டப்பு குடுத்து, மக்கானிக்கு கணக்கா வண்டியோட்டின மாதிரி, இப்போ கையில கிடச்சதயெல்லாம் திருகி ஒவ்வொரு வாட்டியும் இந்த வாஷிங் மஷின ஓட்டறேன்.

ஆனா தொவைக்க மாட்டேங்குது. எங்க வூட்டு சின்னப் பொண்ணுக்கு நான் பல்லுத் தேச்சி விடறேன்னு சொன்னா கேக்க மாட்டா. தானே தேய்க்கிறேன்னு போயி பேஸ்டக் கொஞ்சம் சாப்டிட்டு, சைட்ல திருட்டுத்தனமா தண்ணியக் குடிச்சிட்டு, தண்ணீல வெளையாடிட்டு ஆ..ஊ..ன்னு சவுண்டு விட்டுட்டு வந்திருவா. அந்த மாதிரி என்னமோ 747 ஃப்ளைட்டு கெளம்புற மாதிரி சவுண்டு எல்லாங்குடுத்துட்டு 40 நிமிஷம் ஓடுது இது. அப்புறமா எடுத்துப் பாத்தா, சோப்புப் பொடியெல்லாம் திட்டுத்திட்டா துணிமேலெயே இருக்கு. கொஞ்சம்கூட அழுக்குப் போன மாதிரியில்ல.

எல்லாத்தையும் வெளிய எடுத்து, இடுப்பு ஒடியக் குனிஞ்சு நிமிந்து நானே அலசிப் புழிஞ்சு காயப்போட்டேன்.

கருத்துகள்

Jazeela இவ்வாறு கூறியுள்ளார்…
ஏதோ ஒருநாள் செஞ்சிட்டு அலுத்துக்கிறீங்க இதைத்தானே உங்க வீட்டு பெண்கள் இத்தனை நாட்கள் செஞ்சாங்க? :-)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆமாங்க ஜெஸிலா, நீங்க சொல்லுறதும் சரிதான்...
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Ennada, Mathikare vaazhka nyabagam-varutha ???
மதி கந்தசாமி (Mathy Kandasamy) இவ்வாறு கூறியுள்ளார்…
couldn't wait for the tamil fonts. so this thanglish comment.

//
எல்லாத்தையும் வெளிய எடுத்து, இடுப்பு ஒடியக் குனிஞ்சு நிமிந்து நானே அலசிப் புழிஞ்சு காயப்போட்டேன்.//

thought of just peeping in and read the post written in september only in december! :)


anywayz, ithaRkuththaanae kaathirunthaay naNbaa. ensaai. ;)

nice to read the post.
(en kashtam unakkup nice'aannu kaekkakkoodaathu!)

-Mathy
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
Kannan,
Now only, I am seeing this post thanks to dynobuoy (from twitter)

Great Humour in this particular 'washing' experience of yours :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க