முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா?

ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு.

இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டிலும், செய்யாமல் விட்டால் என்ன வந்துவிடுமோ என்கிற பயத்தில் உந்தப்படும்போது, கடைபிடிக்கப்படும்போது, பொதுவில் தம்மீதும் பிறர்மீதும் நம்பிக்கையிழந்த தன்மையையே குறிக்கிறது என்று நினைக்கிறேன். அன்புவார்த்தைகளை ஒரு சடங்காய் நீ சொல்லக் கேட்பது பெரும் அவலம்! எந்த நிர்பந்தமும் இல்லாத இயற்கையான வெளிப்பாடே நான் விரும்புவது. உணர்வுகள் வார்தைகளை நம்பியில்லை - நாம் இப்போது வெறும் வார்த்தைகளை நம்பியிருப்பதிலே இந்தத் தொல்லை துவங்கியுள்ளது. ஆனால் சில நேரம் மௌனத்தையும் நாம் புரிந்து கொள்ளுதல் நன்று - வார்த்தைகளைக் காட்டிலும் உயிருள்ளவை அவை என்று இப்போதெல்லாம் எனக்குத் தோன்றுகிறது.

கருத்துகள்

சத்தியா இவ்வாறு கூறியுள்ளார்…
சில நேரம் மௌனத்தையும் நாம் புரிந்து கொள்ளுதல் நன்று - வார்த்தைகளைக் காட்டிலும் உயிருள்ளவை அவை என்று இப்போதெல்லாம் எனக்குத் தோன்றுகிறது.

சரியாகத்தான் சொல்லி இருக்கிறீங்கள்.
ஒரு பொடிச்சி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல உரையாடல்..
ஆமா சம்பிரதாயமான சில வார்த்தைகள் (சடங்குகள் போல) பொழுதுகளில் தேவையாவே இருக்கின்றன.

ஆனா
மௌனம் = தனிமை(யால்) என்றால் - தனிமைக்கு உயிரில்லை (Or அது உயிருள்ள பிணம்!).
உரையாடல்கள் சாத்தியமான இடத்தில்தான், மௌனம் ஆழமாக புரிந்துகொள்ளப்படவேண்டியது என நினைக்கிறேன்.
தொலை தூரங்களிலோ, நிறுவனப்பட்ட குடும்பம் போன்ற அமைப்பிலோ நபருகளுக்கிடையில் ஏற்படுகிற மௌனம் glorify பண்ண முடியாதது.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சத்தியா.


பொடிச்சி,
//உரையாடல்கள் சாத்தியமான இடத்தில்தான், மௌனம் ஆழமாக புரிந்துகொள்ளப்படவேண்டியது என நினைக்கிறேன்.
தொலை தூரங்களிலோ, நிறுவனப்பட்ட குடும்பம் போன்ற அமைப்பிலோ நபருகளுக்கிடையில் ஏற்படுகிற மௌனம் glorify பண்ண முடியாதது.//

அருமை. இன்னும் தெளிந்தேன், நன்றி.
வானம்பாடி இவ்வாறு கூறியுள்ளார்…
//மௌனத்தையும் நாம் புரிந்து கொள்ளுதல் நன்று - வார்த்தைகளைக் காட்டிலும் உயிருள்ளவை அவை //

அருமை. ஆனால் எதிரிலுள்ளவருக்கு அது புரியாமல் போவதுதான் பிரச்னையே. :)
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுதர்சன்.
Suka இவ்வாறு கூறியுள்ளார்…
நன்று கண்ணன்.. வார்த்தைகள் வரையறுக்கப்பட்டவை.. அவற்றால் ஒரு போதும் உணர்வுகளைத் துல்லியமாய்க் காட்ட முடியாது.. எழுத்தை விட .. ஓவியங்களும் ..அவற்றைவிட நாடகங்களும் உயிரோட்டமாய் ஓரளவுக்கு துல்லியமாய் உணர்வை வெளிப்படுத்துவதே இதற்கு சாட்சி.

உங்களின் கருத்தே நான் இங்கே http://sukas.blogspot.com/2005/12/blog-post.html எழுதியதின் கருத்தும். ஆனால் சிலரை வேறு மாதிரியாகப் பாதித்து விட்டதாக உணருகிறேன்.

சுகா
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுகா.
மாயவரத்தான் இவ்வாறு கூறியுள்ளார்…
About ur blog in today's dinamalar...

http://www.dinamalar.com/2006Mar04/flash.asp

In Thenkoodu webportal...

http://www.thenkoodu.com

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க