முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கற்றுக்குட்டி

இன்றைக்கு ஆட்டோவில் அலுவலகம் வந்தேன். ஆட்டோ மீட்டரின் துடிப்பும் என் இதயத் துடிப்போடு இணைந்து பதற்றமாகக் கழிகின்றன நாற்பது நிமிடங்கள். அறுபத்தி ஐந்து ரூபாய் காட்டியது மீட்டர். பதினொன்று கி.மீட்டர்களுக்கும் குறைவான தூரம். ஐம்பத்து ஐந்து ரூபாய் சரியாக இருந்திருக்கும். ஒரு புறம் ஆட்டோக்காரனது வாழ்க்கையை நினைத்துக் கொண்டாலும், நான் ஏமாற்றப் படுகிறேன் என்பது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தைக் கொடுக்கிறது. சரியாக ஓடும் மீட்டர் பொருத்தப் பெற்ற ஆட்டோக்களில் இரண்டு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் வரை நான் சில்லறை பெற்றுக் கொள்வதில்லை. நண்பியுடன் ஆட்டோவில் போகும்போது அவள் பேசுவதைக் கேட்காமல் நான் மீட்டரை எரித்துவிடுவது போலப் பார்ப்பதில் அவள் இப்போதெல்லாம் அதோ பார் அம்புலிமாமா என்கிற ரீதியில் என் கவனத்தை மீட்டரினின்றும் திருப்புகிறாள். என்னை மட்டும் இந்த அற்பவிடயம் இவ்வளவு பாதிப்பதேன் என்று யோசித்திருக்கிறேன்.

***

மத்தியத் தர வர்க்கத்தின் பிறவிப் பயனை அடையப் போகிறேன். ஆம் - ஒரு வீடு கட்டப்போகிறேன். சுதந்திரம், மற்றும் பாதுகாப்பு கருதி தனி வீட்டுக் குடியிருப்புகள் கட்டித்தரும் நிறுவனம் ஒன்றில் சதுர அடிக்கு இன்ன விலை என்று வீடு கட்டித்தரும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டேன். வாஸ்து, இன்ன பிற கிரக தோஷங்களை நிவர்த்தி செய்தல், வீட்டின் உள்ளே நூலகம், சின்னதொரு 'பார்' மேடை என்று 1800 சதுர அடிகள் திட்டமிட்டது, 2000 ச.அ. என்று முடிந்தது. இப்போது அந்நிறுவனம், உடன்படிக்கையின் போது திட்டமிடப்பட்ட 1800 ச.அடிகளுக்கே குறிப்பிட்ட தொகை செல்லுபடியாகும் என்றும், மேலதிக 200 அடிகளுக்கு, தற்போது வழங்கி வரும் புதிய விலை கொடுக்கவேண்டும் என்றனர். உடன்படிக்கையில் அம்மாதிரி சொல்லவில்லை - மேலும், 1800 ச.அடிகள் என்பது ஒரு அனுமானம் தானே? ஒருவேளை என் திட்டம் 1600 ச.அடிகளாகும் நிலையில் தற்போதைய விலையின் படி அது நிர்ணயிக்கப் படுமா என்றெல்லாம் நான் கேட்டதற்கு, வேண்டுமானால் உங்கள் திட்டத்தை 1800 ச. அடிகளுக்கே மாற்றிக் கொள்ளுங்கள் என்றார்கள். வந்த கோபத்தில் நான் என்ன செய்தேன் தெரியுமா? வேறென்ன, அதிக விலை கொடுக்க ஒப்புக்கொண்டுவிட்டேன்.

இங்கே நான் அந்தப் பெரிய நிறுவனத்தின் பால் வைத்த நம்பிக்கை வீண்போனது தான் எனக்குச் சகிக்க முடியவில்லை. எதிலும் transparency இல்லாத மறைமுகமான செயல்பாடுகள் எனக்கு பயத்தையே கொடுக்கிறது - இனி என்ன செய்வார்களோ!

***

சக மனிதர்மேல் நாம் வைக்கும் நம்பிக்கை பொய்க்கும்போது 'மரமேறிக் கைவிட்டவன்' போல ஆகிவிடுகிறது நிலைமை. இம்மாதிரியான விடயங்களை, ஒரு சகஜ மனப்பான்மையோடு பார்க்கும் ஜீவன்முக்தி நிலை எனக்குக் கைவரமாட்டேன் என்கிறது. என் வார்ப்பும் வளர்ப்பும் சமூகத்தைக் குறித்த என் பார்வைகளையும், புரிதல்களையும் உளவியல் ரீதியாக இப்படி பாதித்திருக்கிறது என்று நினைக்கிறேன். இதிலிருந்து ஒரு முக்கியமான அவதானம்: நான் ஏமாற்றுகாரனாக இருக்கவும், ஏமாற்றப் படுவதையும் மிகவும் வெறுக்கிறேன். ஆட்டோவானாலும், வாழ்க்கையே ஆனாலும், இந்த மிகை உணர்விலிருந்து மீண்டால் ஆட்டோப் பயணம் மட்டுமல்லாமல், வாழ்க்கைப் பயணமும் பதற்றமற்றதாக இருக்கலாம் எனக்கு.

கருத்துகள்

வீ. எம் இவ்வாறு கூறியுள்ளார்…
kannan : இந்த இரண்டு சம்பவமும் நடந்தது சென்னையிலா? இல்லை பெங்களூரிலா???
சென்னையாக இருக்காது என உறுதியாக நம்புகிறேன்... ஏன் என்று தங்கள் பதிலை பார்த்தவுடன் சொல்கிறேன் !
NambikkaiRAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம்! வீ.எம். இது சென்னையில் நடந்திருக்காது..ஏனென்றால் சென்னை ஆட்டோகாரர்கள் மீட்டரே போட மாட்டார்கள். ஆட்டோவுக்கும் சேர்த்து விலை கேட்பார்கள். இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் எப்போதான் வருமோ? கண்ணா! "கவலப்படாதே சகோதரா.."
rajkumar இவ்வாறு கூறியுள்ளார்…
பிரமாதம்
தாசரதி/Dhasarathy இவ்வாறு கூறியுள்ளார்…
சுற்று மின்னஞ்சல்...நீங்கள் பெங்களூரில் இருந்தால்....உபயோகாமா இருக்கும்னு நெனைக்கிறேன்.

*****

Hi,
During the last 6 month in Bangalore, I perceived that local commutation here is really exasperating, particularly when you rely on Public transport and has not plan for your own conveyance. I am trying to take some steps, I don't know weather it will be prolific or not, for that i talked to controller office of Auto Unit. That person ensured that no auto person is allowed to ask 1.5 times of charges before 10:00 PM , neither the Auto person will be given extra money during rain. I 've suffered a lot due to auto behavior that during rain or even at 8:00 they start asking extra money.
So there are Auto Complain Unit phone no (Bangalore),please note these -
22253500
22260554
22207750
Please be proactive atleast for the things you can really be benefited. Any time you phase any problem related to Auto Rickshaw call to these no, telling the Auto no. Please also try to spread as much awareness as you can. Together we can make the place better for living.

Thanks!!!!!
*****

Dhasarathy
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
வீ.எம், positiverama: பெங்களூரைப் பற்றித் தான் சொன்னேன்.
ராஜ்குமார்: மிக்க நன்றி!
Dhasarathy: தகவலுக்கு நன்றி.
வீ. எம் இவ்வாறு கூறியுள்ளார்…
அதானே பார்த்தேன்... சென்னையா இருந்திருந்தா நீங்க சொன்ன 11 கிமி க்கு மீட்டரே இல்லாம 85 ரூ கேட்டிருப்பாரு நம்ம ஆட்டோ அண்ணாச்சி..
நான் ஒரு வாரம் வேலைக்கு ஆட்டோ ல வந்தேன் (வேற வேற ஆட்டோ)..
என் வீட்ல இருந்து அலுவலகம் சரியா 4.8 கிமி.. கீழே ரேட் பார்துக்கோங்க..
முதல் நாள் : மீட்டர் இல்லை - 60 ரூபாய் கேட்டு 45 க்கு பெரிய மனசு பன்னி 45 க்கு வந்தாரு.
இரண்டாவது நாள் - ஒரு ஆட்டோ அண்ணாச்சி 50 கேட்டாரு... மீட்டர் போடுங்கனு பேசி உக்கார்ந்தேன்..
45.60
மூன்றாம் நாள் - மீட்டர் : 48.20
நான்காம் நாள் - மீட்டர் - 35.20 (கொஞ்சம் பொழைக்க தெரியாத ஆளு போல)
5ஆம் நாள் - எவ்ளோ தருவீங்கனு கேட்டாரு சும்மா 35 நு சொன்னேன்.. அவர் 45 நு சொன்னாரு..அடிச்சு பேசி 40 கு போனேன் !!

நியாமா மீட்டர் ரேட் பார்த்தா , 23.00 ரூ தான் இருக்கணும்.. சரி பெட்ரோல் , விலைவாசி எல்லாம் பார்த்து ஒரு 30 , 32 வாங்கலாம்...... ஆனா 45, 50 வாங்குறாங்க ..என்ன பன்றது??

இது தான் சென்னை ஆட்டோ !! :)
பெங்களூர்ல ஆட்டோ கொஞம் நியாயமா இருப்பாங்க கேள்விப்ட்டேன்... இல்லையா????

வீ எம்
இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன், அருமையாக எழுதி இருக்கிறீர்கள். புது வீட்டுக்குச் சொந்தக்காரராக ஆனதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் கூறிய உணர்ச்சிகளைப் பலமுறை அனுபவித்திருக்கிறேன். நீங்கள் மட்டும் தனியல்ல. இப்போதும் கூட என்னுடைய கார் பழுது பார்க்க எண்ணூறு டாலர் கேட்பவன் எவ்வளவு ஏமாற்றுகிறான் என்று மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. வேறு இடம் சென்றாலும் இவனுக்குப் பதில் இன்னொருவன் என்று ஒரு சலித்த மனப்பாங்கே ஏற்படுகிறது.

>>நான் ஏமாற்றுகாரனாக இருக்கவும், ஏமாற்றப் படுவதையும் மிகவும் வெறுக்கிறேன்.>>

அதே அதே.
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
//என்னை மட்டும் இந்த அற்பவிடயம் இவ்வளவு பாதிப்பதேன் என்று யோசித்திருக்கிறேன்.
//
enakkum appatith thAn, kannan :)
enavE, varuththap patAthIrkaL ;-)
maRRapati, puthu vIdu kattiyathaRku en vAzththukkaL !!!
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
செல்வா,

வாழ்த்துக்கும் புரிதலுக்கும் நன்றி. வீடு இன்னும் பத்து மாதங்களில் நிறைவு பெறும்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
பாலா,

நன்றி!!!
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
வீ. எம். : அந்த வகையில் பெங்களூர் ஆட்டோக்களே மேல்...
Kicha இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன், நானும் அப்படி யோசித்தது உண்டு. ஒரு புறம் அவர்கள் கேட்டத் தொகையை கொடுப்பது இருக்கட்டும். சில நேரங்களில் மொழி பிரச்சனைகளாலும், பின்விளைவுகளின் பயத்தினாலும் ஆட்டோக்காரர்களை எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்காமல் வந்துவிட்டு என் கோழைத்தனத்தை நினைத்து நொந்துக்கொள்வதும் உண்டு.

சென்னைக்கும் பெங்களூருக்கும் வித்தியாசம் என்று பார்த்தால் -

1) நாம் எவ்வளவுக்கு ஏமாற்றப்படுகிறோம் என்று முன்னரே தெரிந்துகொள்ளுவது சென்னையில். பெங்களூரில் இது சேருமிடம் சேர்ந்த பின்னரே தெரியவரும்.

2) சென்னையில் ஒரு ஆட்டோக்காரர் ஒற்று வரவில்லை என்றால் இன்னொருவரையோ அல்லது மாற்றாக பேருந்தையோ, மின்சார ரயிலையோ நாடமுடியும். ஆனால் பெங்களூரில் அப்படியல்ல. தப்பித்தவறி மீட்டர் சரியில்லாத வண்டியில் ஏறிவிட்டால், அன்றைக்கு ஏமாற்றம் என்பது ஏரத்தாழ உறுதி.

எங்கும் சந்தர்ப்பவாதிகள் நிறைந்துவிட்டனர். ஆக, ஏமாற்றம் என்பது சென்னையிலோ பெங்களூரிலோ இல்லை. எல்லாம் நம் விதியில் தான் என்று விதியை நோகவேண்டியிருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க